வீட்டில் நிம்மதியே இல்லை, படுத்தால் கொஞ்ச நேரம் கூட தூங்க முடிவதில்லை. எப்போதும் ஒரே சண்டை சச்சரவாக இருக்கிறது என்று புலம்புபவர்கள் ஒரு கைப்பிடி உப்பை இப்படி பயன்படுத்தி பாருங்கள்.

- Advertisement -

நாளெல்லாம் பாடுபட்டு உழைத்து வீட்டிற்கு வந்தால் எப்பொழுதும் ஒரே சண்டை நிம்மதியே இல்லாமல், இதனால் படுத்தால் உறங்கவும் கூட முடியவில்லை என்று புலம்புபவர்கள் இந்த ஒரு எளிய தாந்திரீக பரிகாரத்தை செய்வதன் மூலம் இந்த பெரிய பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம் என்று சொல்லப்படுகிறது. அதை எப்படி சரி செய்யலாம் என்பதை குறித்து இந்த ஆன்மீகம் பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு விதமான பிரச்சனைகள் இருந்து கொண்டே தான் இருக்கிறது. பிரச்சனைகள் இல்லை என்றால் தான் ஆச்சரியப்பட வேண்டுமே தவிர பிரச்சனைகளை குறித்து ஆச்சரியப்பட வேண்டிய அவசியமே இல்லை. அதற்காக இப்படியே போய்க் கொண்டிருந்தால் மனிதனுக்கு நிம்மதி இல்லாமல் போய் விடுமே. அப்படி ஒரு சூழ்நிலைக்கு ஆளானால் முதலில் அதற்கு நாம் இழப்பது நம்முடைய நிம்மதியும் தூக்கத்தையும் தான். ஒரு மனிதன் நிம்மதியாக தூங்கி எழுந்தால் தான் அவன் அடுத்த நாள் பணிகளை செம்மையுடன் செய்ய முடியும்.

- Advertisement -

அதே போல் வெளியில் சென்று உழைத்து களைத்து வீட்டிற்கு வரும் போது ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து சிரிக்கா விட்டாலும் பரவாயில்லை பார்த்தவுடன் சிடுசிடுவென்று இருப்பதும், எப்போதும் சண்டை வந்து கொண்டு இருந்தாலும் அந்த குடும்பம் நிம்மதியை இழந்து தான் இருக்கும். அது மட்டும் இன்றி இப்படியான இடத்தில் மகாலட்சுமி தாயார் வாசம் செய்ய மாட்டார். இதனால் வீட்டுக்கு தரித்திரம் உண்டாகும்.

வீட்டில் உள்ள கெட்ட சக்தி விரட்ட :
இதையெல்லாம் சரி செய்வதற்கான எளிய ஒரு தாந்திரீக பரிகார முறையை தான் இப்பொழுது நாம் தெரிந்து கொள்ள போகிறோம். இந்த பரிகாரத்திற்கு நமக்குத் தேவை கல் உப்பு மட்டுமே. கல்லுப்பு மகாலட்சுமி தாயாரின் அம்சமாகவே கருதப்படுவது அனைவரும் அறிந்ததே. அதே நேரத்தில் வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல்களை நீக்கக் கூடிய சக்தியும் இந்த கல்லுப்பிற்கு இருக்கிறது. இப்போது இது போன்ற பிரச்சனைக்கு இந்த கல் உப்பை எப்படி பயன்படுத்துவது என்பதை பார்க்கலாம்.

- Advertisement -

ஒரு கைப்பிடி கல் உப்பை எடுத்து வீட்டின் நான்கு மூலைகளிலும் கொஞ்சம் கொஞ்சமாக வைத்து விடுங்கள். இதை வைத்த பிறகு 48 மணி நேரம் வரை அதை ஒன்றும் செய்யாமல் அப்படியே விடுங்கள். இடையில் வீடு பெருக்கி சுத்தம் செய்யும் போது கல் உப்பின் மீது துடைப்பம் படாமல் பெருக்கி சுத்தம் செய்து கொள்ளுங்கள். 48 மணி நேரம் கழித்து அந்த கல் உப்பை எடுத்து தண்ணீரில் போட்டு விடுங்கள் அல்லது சிங்கிள் போட்டு பைப்பை திறந்து விட்டு உப்பை கரைத்து விடுங்கள்.

அதன் பிறகு சுத்தமான தண்ணீரை கொண்டு வீடு முழுவதும் துடைத்து விட்டு நீங்களும் குளித்து விடுங்கள். இதை எப்போது வேண்டுமானாலும் செய்யலாம் ஆனால் வைத்த 48 மணி நேரம் கழித்து அந்த உப்பை எடுத்து விட வேண்டும். இந்த உப்பை எடுக்கும் நேரம் மாலை ஆக இருக்கக் கூடாது. ஏனென்றால் மாலை தொடங்கிய பிறகு வீடை சுத்தம் செய்யக் கூடாது என்பது நம்முடைய ஒரு வழக்கம். எனவே இந்த நேரத்தை கணக்கில் கொண்டு நீங்கள் உப்பை வைத்து விடுங்கள். அது போல நீங்கள் நேரத்தை மட்டும் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: வீட்டில் அள்ள அள்ள குறையாத ஐஸ்வர்யங்கள் நிறைந்து இருக்க ஐந்து மிளகு உங்க கையில் இருந்தால் போதும். பணத் தடைகளை தகர்த்தெறிந்து பணமழையை பொழிய செய்யும் அற்புத பரிகாரம்.

இப்படி செய்வதன் மூலம் உங்கள் வீட்டில் இருக்கும் கெட்ட அதிர்வலைகள், கெட்ட சக்திகள் போன்றவை எல்லாவற்றையும் இந்த உப்பு தன்னுள் ஈர்த்து அகற்றி விடும் என்று சொல்லப்படுகிறது. நிம்மதியான வாழ்க்கைக்காகவும், உறக்கத்திற்காகவும் எவ்வளவோ செலவு செய்கிறோம். இந்த ஒரு சின்ன தாந்த்ரீக பரிகாரத்தை செய்வதன் மூலம் இந்தப் பிரச்சனைகளை தீர்க்க முடியும் என்றால் முயற்சி செய்து பார்க்கலாம் தானே.

- Advertisement -