வீட்டில் அள்ள அள்ள குறையாத ஐஸ்வர்யங்கள் நிறைந்து இருக்க ஐந்து மிளகு உங்க கையில் இருந்தால் போதும். பணத் தடைகளை தகர்த்தெறிந்து பணமழையை பொழிய செய்யும் அற்புத பரிகாரம்.

cash pepper
- Advertisement -

நாம் எவ்வளவு தான் பாடுபட்டு உழைத்து சம்பாதித்தாலும் கூட பணம் நம்மிடம் தங்கி பெருக வேண்டும் என்றால் அதற்கான யோகம் நமக்கு இருக்க வேண்டும். உதாரணத்திற்கு ஒரு இடத்தில் பத்து பேர் வேலை செய்தால் அந்த பத்து பேரும் செய்ய அளவில் வருவதில்லை. அதில் யாரோ ஒருவர் தான் நல்ல நிலைக்கு வருகிறார்கள். அப்படியானால் அவர்களிடம் பணம் தங்கும் யோகமும் இருக்கிறது என்று தானே அர்த்தம். இப்போது இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பணத்தடையை எப்படி உடைப்பது என்பதை பற்றி தான் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

பணம் நம்மிடம் தங்க வேண்டும் பெருக வேண்டும் என்று நினைத்துக் கொண்டு வெறும் பரிகாரங்களை மட்டும் செய்து கொண்டு இருந்தால் நிச்சயமாக ஒரு நாளும் சேராது. வேலை செய்து சம்பாதிக்க வேண்டும். அப்படி உழைத்து பாடுபட்டாலும் நமக்கு வரவேண்டிய பணம் வராமல் இருக்கும் அல்லது நமக்கு தர வேண்டியவர்கள் கூட நம்முடைய அவசரத்திற்கு தாராமல் இழுத்தடிப்பார்கள். இவையெல்லாம் கூட ஒரு வகையில் பணத் தடைகள் தான். இந்த மாதிரியான பணத் தடைகளை தகர்த்தெறிவதற்கான எளிமையான பரிகாரம் தான் இப்போது இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

- Advertisement -

பணம் நம்மிடம் வந்து சேர்வதற்கான தடைகள் அனைத்தையும் உடைத்து காந்தம் போல பணத்தை இழுத்து நம்மிடம் சேர்க்கும் அற்புதமான ஒரு பரிகாரம் தான் இந்த வால் மிளகு பரிகாரம். இந்த பரிகாரத்தை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

பண தடை நீங்க மிளகு பரிகாரம்:
இந்த பரிகாரம் செய்வதற்கு நாள் கிழமை எதையும் பார்க்க வேண்டிய தேவை இல்லை. இந்த பரிகாரம் செய்ய முடிவு செய்த அன்று காலையில் எழுந்து குளித்து முடித்த பிறகு உங்களுடைய பூஜை அறையில் விளக்கேற்றி வைத்து விடுங்கள்.

- Advertisement -

அதன் பிறகு இந்த ஐந்து வால்மிளகை கையில் வைத்துக் கொண்டு கை கூப்பி உங்களுடைய பணத்தடைகள் அனைத்தும் நீங்கி உங்களுக்கு வர வேண்டிய பணங்கள் உங்கள் கிடைக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டு இந்த வால் மிளகை திசைக்கு ஒன்றாக தூக்கி போட வேண்டும். அதாவது வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு என நான்கு திசைகளும் ஒவ்வொன்றையும் போட்ட பிறகு மீதமிருக்கும் ஒன்றை மேல் நோக்கி தூக்கிப் போட வேண்டும். இப்படி போடும் போது அந்த மிளகானது மறுபடியும் நம் மீது விழுந்தாலும் ஒன்றும் தவறில்லை. இவ்வளவு தான் இந்த பரிகாரம்.

இதை அடிக்கடி செய்ய வேண்டும் என்று அவசியம் கிடையாது. ஒரே ஒரு முறை செய்தால் போதும். உங்களுக்கு இருக்கும் பணக்கட்டுகள் இந்த மிளகு பரிகாரத்தால் நிவர்த்தி ஆகி விடும். பணத்தை காந்தம் போல உங்களுக்கு ஈர்த்து தரக் கூடிய ஆற்றலையும் இந்த பரிகாரம் தரும் என்று சொல்லப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: கண் திருஷ்டி நீங்க நிலை வாசலில் கட்ட வேண்டிய பொருள்

இது போன்ற எளிமையான பரிகாரங்களை செய்து நம்முடைய வாழ்க்கையில் இருக்கும் சின்ன சின்ன தடை கற்களை தாந்த்ரீக முறையில் தகர்த்தெறிந்து நம்முடைய வாழ்க்கை பயணத்தை நல்ல முறையில் பயணிக்கலாம் என்ற தகவலோடு இந்த பதிவை நிறைவு செய்து கொள்ளலாம்.

- Advertisement -