சித்தர்கள் அருளிய சக்தி வாய்ந்த இந்த மையை தினமும் நெற்றியில் வைத்தால் போதும், உங்களின் முன்னேற்றத்தை தடுக்கும் அனைத்தையும் தவிடு பொடியாக்கி விடும்.

thilagam
- Advertisement -

இன்றைய காலகட்டத்தில் முன்னேற நாம் பல முயற்சிகள் எடுத்தாலும் முட்டுக்கட்டையாக பல விஷயங்கள் நமக்கு நடந்து கொண்டே தான் இருக்கிறது. எல்லாம் சரியாக தானே செய்கிறோம் ஏன் கடைசியில் இப்படி நமக்கு எதுவும் நடக்காமல் போகிறது என்று நாம் யோசிப்போம். ஆனால் எங்கு என்ன தவறு செய்தோம் என்பதை நம்ம யூகிக்கவே முடியாது. ஆனால் இதில் நம் தவறு எதுவும் இருந்திருக்காது. நம்மை சுற்றி இருப்பவர்களோ, நம் உறவினர்களோ, இல்லை நம்மைப் பற்றி நாமே பரவாயில்லை இதை நான் செய்து விட்டோமே என்று நினைக்கும் நம் எண்ணங்களே கூட நமக்கு திருஷ்டியாகி விடும். இது போன்ற திருஷ்டிகள் நமக்கு வராமல் இருக்காது ஆனால் வந்தால் அது நம்மை பாதிக்காத வண்ணம் நம்மை பாதுகாத்து கொள்ள சித்தர்கள் அருளிய ஒரு மாபெரும் வரம் தான் இந்த அரகஜா மை. இதை எப்படி செய்து நம் கண் திருஷ்டிகளை குறைத்து கொள்வது என்பதை இந்த பதிவில் படித்து தெளிவாக புரிந்து கொள்வோம்.

இந்த மை தயாரிப்பதற்கு நான்கு பொருட்கள் தேவை ஒன்று அரகஜா, கோரோசனை, ஜவ்வாது, பவுடர் பச்சைக் கற்பூரம் இந்த கொண்டு தான் இந்த கண் திருஷ்டி அகல செய்யும் அற்புதமான ஒரு மைய்யை செய்யப் போகிறோம். இதை செய்யும் முன்பு ஒரு முக்கியமான விஷயத்தை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் இந்த நான்கு பொருட்களை ஏற்கனவே வீட்டில் வாங்கி வைத்திருந்தால் அதை இந்த மை தயாரிக்க பயன்படுத்தக் கூடாது புதிதாக வாங்கி தான் செய்ய வேண்டும்.

- Advertisement -

அரஜகா ஒரு டப்பா வாங்கிக் கொள்ளுங்கள் அதில் ஒரே ஒரு சிட்டிகை கோரோசனை ஒரே சிட்டிகை ஜவுவது பவுடர் பச்சைக் கற்பூரம் சிறிதளவு இந்த மூன்றையும் அரகஜாவுடன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். இதை காலை எழுந்து குளித்து முடித்து பூஜை செய்த பிறகு தான் இந்த மையை தயாரிக்க வேண்டும். அதுவும் நிச்சயமாக பிரம்ம முகூர்த்த நேரத்தில் தான் இதை தயாரிக்க வேண்டும். அப்போது நம் பூஜை அறையில் தெய்வத்திடம் வேண்டி எனக்கு இருக்கும் இந்த திருஷ்டிகள் சாபங்கள் எல்லாம் நீங்கி நானும் என் குடும்பமும் நல்ல முறையில் வாழ நீங்கள் உடன் இருந்து அருள் புரிய வேண்டும் என்று வேண்டிக் கொண்டு இந்த மையை தயார் செய்து கொள்ளுங்கள்.

இதை கலந்த பிறகு நீங்கள் தினமும் காலையில் பிரம்ம முகத்தில் எழுந்து விளக்கு ஏற்றி பூஜை செய்த பின் கடவுளை வேண்டி உங்கள் நெற்றியில் இட்டுக் கொண்டால் மிகவும் உத்தமம். இல்லை என்றாலும் தினமும் குளித்து முடித்து பூஜை செய்த பின் நீங்கள் இதை உங்கள் பொட்டு வைக்கும் இடத்தில் முதல் மையை வைத்து மேலே பொட்டு வைத்துக் கொள்ளலாம். இல்லை சந்தானம் விபூதி வைப்பதை போல கூட வைத்துக் கொள்ளலாம். உங்கள் வீட்டில் கணவர் வெளியில் செல்லும் போது அவருக்கும் தினந்தோறும் இதை வைத்து விடுங்கள். பள்ளி கல்லூரி செல்லும் குழந்தைகள் என வீட்டில் உள்ள அனைவருக்கும் இதை பூசலாம்.

- Advertisement -

இந்த மையை வைத்த சில நாட்களில் உங்களுக்கு மாற்றங்கள் தெரியும். எந்த வேலை தொடங்குவதாக இருந்தாலும் உங்களுக்கு இதை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று அலுப்பு தட்டாது. நினைத்த உடனே செய்யும் ஒரு உத்வேகம் பிறக்கும் வீட்டில் நல்ல பாசிட்டிவ் எனர்ஜி கிடைக்கும். ஏன் உங்களுக்கு வேண்டாதவர்கள் உங்கள் வீடு தேடி வந்து சாபமிட்டால் கூட அது உங்களின் முன்னேற்றத்தை எந்த வகையிலும் தடுக்காது.

இதையும் படிக்கலாமே: கீரியும் பாம்புமாக இருக்கும் கணவன் மனைவி கூட நகமும் சதையுமாக மாற வேண்டுமானால், வாரம் ஒரு முறை மறக்காமல் இப்படி செய்து விடுங்கள்.

நீங்கள் உங்களுக்கு முட்டுக்கட்டை போட்டுக் கொள்ளாமல் நல்லபடியாக உழைத்து முன்னேற வேண்டும். நல்ல எதிர்மறை எண்ணங்களை உருவாக்கவும் மற்றவர்களின் தீய எண்ணங்கள் உங்கள் தாக்காமல் இருக்கவும் தான் இந்த மை துணை புரியும். இதை வைத்துக் கொண்டுமே நாம் வீட்டிலேயே இருந்தால் கூட செல்வம் வந்து வாயில் கதவை தட்டுமா என்றால் தட்டாது. இந்த ஒரு கருத்தை கருத்தில் கொண்டு நல்லபடியாக உழைத்து வாழ்க்கையில் முன்னேற இந்த அரகஜா மை பயன்படுத்தி பலன் பெறுங்கள்.

- Advertisement -