கண் திருஷ்டியை விரட்டும் எலுமிச்சம் பழ பரிகாரம்.

lemon
- Advertisement -

இந்த எலுமிச்சம் பழத்தை தேவலோக கனி என்று சொல்லுவார்கள். இதை நல்லதுக்கும் பயன்படுத்தலாம். கெடுதல் செய்வதற்கும் பயன்படுத்தலாம். என்றுமே அடுத்தவர்களை கெடுப்பதற்காக நாம் எந்த ஒரு பரிகாரத்தையும் தாந்த்ரீகத்தையும் செய்யக்கூடாது. அது நமக்கு பல மடங்கு கெடுதலாக திரும்பி வரும்.

அதாவது சுவற்றில் அடித்த பந்து போல, இந்த பிளாக் மேஜிக் நம்மை திருப்பி அடிக்கும் என்று பெரியவர்களால் சொல்லப்பட்டுள்ளது. ஆகவே நீங்கள் என்றைக்கும் அந்த தவறு பக்கம் போகாதீங்க. சரி, இன்று நாம் பார்க்கப்போகும் பரிகாரம் கண் திருஷ்டியை நீக்கும் எலுமிச்சை பழம் பரிகாரம்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை செய்தால் உடனடியாக கண் திருஷ்டியில் இருந்து விடுபட முடியும். கண் திருஷ்டியால் கஷ்டப்படுபவர்கள் உடனடியாக முன்னேற்ற பாதையை நோக்கிச் செல்ல முடியும். எலுமிச்சை பழ கண் திருஷ்டி பரிகாரத்தை எப்படி செய்வது ஆன்மீகம் சார்ந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

கண் திருஷ்டி நீக்கும் எலுமிச்சம் பழ பரிகாரம்

கரும்புள்ளிகள் இல்லாத நல்ல எலுமிச்சம் பழம் ஒன்று வாங்கிக்கோங்க. ஒரு கண்ணாடி டம்ளரில் குடிக்கின்ற சுத்தமான தண்ணீர் ஊற்ற வேண்டும். அந்த தண்ணீரில் இரண்டு சிட்டிகை மஞ்சள் பொடி போடணும். சந்தனாதி தைலம் இரண்டு சொட்டு விடுங்க. இந்த தைலம் நாட்டு மருந்து கடைகளில் கேட்டால் கிடைக்கும். வாங்கி வைத்து பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது அந்த கண்ணாடி டம்ளரில் இருக்கும் தண்ணீரில் ஒரு எலுமிச்சம் பழத்தை போட்டு, வீட்டில் வரவேற்பறையில் வைக்கலாம். வியாபார ஸ்தலங்களில் வைக்கலாம். தொழிற்சாலைகளில் வைக்கலாம். கடைகளில் வைக்கலாம். இப்படி உங்களுக்கு எந்த இடத்தில் எல்லாம் கண் திருஷ்டி பாதிப்பு ஏற்பட்டு பிரச்சனைகள் வருகிறதோ, லாபம் குறைகிறதோ, அந்த இடங்களில் இந்த டம்ளரை வைத்தீர்கள் என்றால், உடனடியாக அந்த கெட்ட சக்தியை எல்லாம் கண் திருஷ்டியை எல்லாம், இந்த எலுமிச்சம் பழம் எடுத்துக் கொள்ளும்.

இதில் இன்னும் இரட்டிப்பு பலனை பெற வேண்டும் என்றால், இந்த கண்ணாடி டம்ளர், ஒரு கண்ணாடியில் பிரதிபலிக்கும் படி வைக்க வேண்டும். ஒரு கண்ணாடி வைத்துவிட்டு அதன் முன்பு இந்த டம்ளரை வைத்தீர்கள் என்றால், இரட்டிப்பு மடங்காக இதனுடைய பலன் நமக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. (நீங்கள் வைத்திருக்கும் கண்ணாடியில், இந்த கண்ணாடி டம்ளர், அதற்கு உள்ளே இருக்கும் எலுமிச்சம்பழம் பிரதிகளைக்கும்போது அதனுடைய சக்தி இரட்டிப்பு மடங்காக அந்த இடத்தில் பரவும்.)

- Advertisement -

முயற்சி செய்து பாருங்கள். ஆனால் டம்ளருக்குள் இருக்கும் தண்ணீரும் சுத்தமாக இருக்க வேண்டும். எலுமிச்சம்பழமும் அழுகிப்போகக் கூடாது. இரண்டு நாட்களுக்கு ஒரு முறை டம்ளரை சுத்தம் செய்து உள்ளே இருக்கும் எலுமிச்சம் பழத்தை மாற்றுவதில் கவனம் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

காரணம் உங்களுடைய கண் திருஷ்டி மொத்தத்தையும் அந்த எலுமிச்சம்பழம் ஈர்த்துக் கொள்ளும். அதை நீங்கள் மாற்றாமல் அப்படியே வைத்திருந்தால் நெகட்டிவ் எனர்ஜி மேலும் மேலும் தான் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு நாட்களுக்கு ஒரு முறை டம்ளரோடு கொண்டு போய் இதை ஒரு கால் படாத இடத்தில் கொட்டி விடுங்கள். அவ்வளவு தான்.

இதையும் படிக்கலாமே: கார்த்திகை தீபத்தன்று உச்சரிக்க வேண்டிய மந்திரம்

இந்த எளிமையான பரிகாரம் உங்களை கண் திருஷ்டியில் இருந்தும், அடுத்தவர்களுடைய பொறாமை எண்ணத்தில் இருந்து பாதுகாக்கும் என்ற தகவலுடன் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -