கணவன் மனைவி பிரச்சினை தீர

fight
- Advertisement -

ஒரே வீட்டில் தான் கணவனும் மனைவியும் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். ஆனால் ஒருவருக்கு ஒருவர் முகம் கொடுத்து பேசிக்கொள்ள மாட்டார்கள். இவர்களுக்குள் பிரச்சனை இருக்கிறதோ இல்லையோ இவர்களை சுற்றி இருக்கும் சொந்த பந்தத்திற்குள் பிரச்சனைகள் இருக்கும். அதனால் இவர்கள் சண்டை போட்டுக் கொண்டு பிரிந்து இருப்பார்கள்.

இல்லை, ஒரு சில குடும்பத்தில் அவர்களுக்குள்ளேயே ஏதாவது மனஸ்தாபம் ஏற்பட்டு ஒரே வீட்டில் தனித்தனியாக வாழ்ந்து கொண்டிருப்பார்கள். குழந்தைகள் இருக்கும் ஆனாலும் இந்த கணவன் மனைவிக்குள் ஒரு அன்னியோன்யமே இருக்காது. இப்படிப்பட்ட பிரச்சனைகளை கொண்டவர்களுக்கு ஒரு எளிமையான ஆன்மீகம் சார்ந்த பரிகாரத்தை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை செய்ய முதலில் நமக்கு தேவையானது ஒரு காவிதுண்டு, வெள்ளை துண்டு, புதுசாக காட்டனில் வாங்கிக்கோங்க. இரண்டு துண்டையும் ஒன்றாக இணைத்து முடிச்சு போட வேண்டும். ஒரு துண்டுக்கு நான்கு முனை இருக்கும். காவிதுண்டில் இருக்கும் இரண்டு முனைகளை வெள்ளை துண்டில் இருக்கும் இரண்டு முனைகளோடு முடிச்சு போட்டு விடுங்கள்.

மீதம் இருக்கும் இரண்டு முனைகளையும் முடிச்சு போட்டு விடுங்கள். இப்போது காவி துண்டும், வெள்ளை துண்டும் முடிச்சு போட்டு ஒன்றாக இருக்கிறது. இதை அப்படியே சுருட்டி பீரோவில் ஒரு பக்கமாக வைத்து விடுங்கள். அடுத்தபடியாக இரண்டு மண் அகல்விளக்குகள் நமக்கு தேவை. அந்த மண் அகல் விளக்கில், ஒரு மண் அகல் விளக்கில் 3 மொச்சை பயிறு, போட்டு நல்லெண்ணெய் ஊற்றி விளக்கு ஏற்ற வேண்டும்.

- Advertisement -

இன்னொரு மண் அகல் விளக்கில் 3 துவரம் பருப்பு போட்டு, நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். இந்த இரண்டு தீபங்களும் உங்களுடைய படுக்கை அறையில் ஏற்றி வைக்க வேண்டும். ஏழு மணியிலிருந்து எட்டு மணி வரை கணக்கு வைத்துக் கொள்ளுங்கள்? மாலை நேரத்தில் இதை உங்களுடைய வீட்டில் ஏற்றலாம். காலையில் ஏற்ற முடியும் என்றாலும் ஏற்றுக்கொள்ளலாம். அது உங்களுடைய விருப்பம் தான்.

காற்றில் அணியாமல் துணிகள் மெத்தையின் மேல் இந்த தீபச்சுடரின் நெருப்பு படாமல் கொஞ்சம் பத்திரமாக இந்த விளக்கை ஏற்றி குலதெய்வத்திடம் கணவன் மனைவி இருவரும் அன்னியோன்யமாக வாழ வேண்டும் என்ற வேண்டுதலை வைத்தால், குடும்ப வாழ்க்கை சிறக்கும். இல்லற வாழ்க்கை இனிக்கும். சில குடும்பங்களில் கணவன் மனைவிக்குள் தாம்பத்திய உறவு கூட இருக்காது.

- Advertisement -

ஒருவரை ஒருவர் விட்டு பிரிந்து வாழ்வார்கள். அந்த இல்லற வாழ்வை பெறுவதற்கும் இந்த பரிகாரம் உங்களுக்கு கை கொடுக்கும். நம்பிக்கை உள்ளவர்கள் கணவன் மனைவியாக இருப்பவர்கள் யார் வேண்டுமென்றாலும் இந்த பரிகாரத்தை செய்து பலன் பெறலாம். இந்த விளக்கை தொடர்ந்து 11 நாள் ஏற்ற வேண்டும்.

இதையும் படிக்கலாமே: பாவங்கள் தீர சிவ வழிபாடு

கணவன் மனைவிக்குள் சந்தோஷம், ஒற்றுமை வந்த பிறகு முடிச்சு போட்டு இருக்கும் துண்டை அவிழ்த்து துவைத்துவிட்டு நீங்கள் உங்களுடைய உபயோகத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். நம்பிக்கை உள்ளவர்களுக்காக மட்டுமே இந்த பரிகாரம். தேவைப்படுபவர்கள் பின்பற்றி பலன் பெறுவோம்.

- Advertisement -