வீண் விரயம் குறைந்து பணவரவு அதிகரிக்க பரிகாரம்

money
- Advertisement -

இன்றைய காலத்தில் பல வழிகளில் பணத்தை நாம் சம்பாதிக்கிறோம். அப்படி சம்பாதித்த பணத்தால் நமக்கு நன்மைகள் ஏற்படுகிறதா என்று பார்த்தால் பலருக்கும் இல்லை என்ற பதில் தான் வரும். ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கினாலும் வாங்கிய அடுத்த நாளே கையில் ஒரு பைசா கூட இல்லை என்று கவலைப்படுபவர்கள் பலர் இருக்கிறார்கள். இதே சமயம் ஆயிரம் ரூபாயை சம்பளமாக வாங்கினாலும் அந்த மாத இறுதிவரை 500 ரூபாயாவது கையில் வைத்துக் கொண்டு இருப்பவர்களும் இருக்கிறார்கள். இந்த பிரச்சனைகள் ஏற்படுவதற்கு நாம் செய்யும் சில தவறுகளே காரணமாக விளங்குகிறது. இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பணம் வீண் விரயம் ஆகாமல் தடுப்பதற்கு செய்ய வேண்டிய எளிய வழிமுறைகளை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

பணத்திற்கு அதிபதியாக திகழக் கூடியவர் மகாலட்சுமி தாயார் என்பது நம் அனைவருக்கும் தெரியும். மகாலட்சுமி தாயாரின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைத்தால் தான் நம்மால் பணத்தை சம்பாதிக்க முடியும். அதே சமயம் நம் வீட்டில் மகாலட்சுமி தாயாரின் அருள் பரிபூரணமாக இருந்தால் தான் அந்த வீட்டில் பணமானது தங்கும் என்று கூறப்படுகிறது. அப்படி பணத்தை தக்க வைத்துக்கொள்ள சில வழிமுறைகள் இருக்கின்றன.

- Advertisement -

நாம் அனைவருமே நம்முடைய வருமானத்தை ஏதாவது ஒரு இடத்தில் வைக்கும் பழக்கம் என்பது இருக்கும். அது பீரோவாக இருந்தாலும் சரி லாக்கராக இருந்தாலும் சரி. இந்த பீரோ அல்லது லாக்கரை பொதுவாக கிழக்கு அல்லது வடக்கு பார்த்தவாறு தான் வைத்திருப்போம். அப்படி வைப்பது தான் பணவரவை அதிகரிக்கும் திசைகள் என்று கூறப்படுகிறது.

இப்படி நாம் நம்முடைய வருமானத்தை வீட்டில் இருக்கக் கூடிய பீரோவில் வைக்கும் பொழுது குளிகை நேரமாக பார்த்து வைக்க வேண்டும். குளிகை நேரத்தில் நாம் செய்யக்கூடிய செயல்கள் திரும்ப நடக்கும் என்பதால் குளிகை நேரத்தில் நாம் பீரோவில் படத்தை வைப்பதன் மூலம் திரும்பத் திரும்ப பணத்தை பீரோவில் வைக்கும் நிலை உண்டாகும். அதன் மூலம் பணவரவு அதிகரிக்கும்.

- Advertisement -

அடுத்ததாக அன்றைய நாள் எந்த திசைக்கு சூலம் இருக்கிறது என்பதை கவனிக்க வேண்டும். கிழக்கு திசைக்கு சூலம் இருந்தால் கிழக்கு பார்த்த பீரோவில் வைக்கக்கூடாது. அதேபோல் வடக்கில் சூலம் இருந்தால் வடக்கு பார்த்த பீரோவில் பணத்தை வைக்க கூடாது. இப்படி செய்வதன் மூலம் நாம் வைக்கும் பணமானது வீண்விரயம் ஆகாமல் அதிக அளவு பண வரவையும் சேர்க்கும்.

இதேபோல் நாம் சேமித்து வைத்திருக்கும் பணத்தை எடுக்கும் பொழுது கண்டிப்பான முறையில் நம்முடைய கைகள் நம் தலையையோ அல்லது தலைமுடியையோ தொட்டு இருக்கக் கூடாது. எந்த நேரத்தில் நாம் பீரோவை திறந்து பணத்தை எடுப்பதாக இருந்தாலும் தலைமுடியை விரித்துப் போட்டுக் கொண்டு இல்லாமல் எடுத்துக்கட்டி விட்டு கைகளை சுத்தமாகக் கழுவிய பிறகுதான் பீரோவில் இருந்து பணத்தை எடுக்க வேண்டும் அல்லது பீரோவில் பணத்தை வைக்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே: மனக்குழப்பத்தை நீக்கும் வழிபாடு

இந்த மிகவும் எளிமையான குறிப்புகளை நாம் பின்பற்றும் பொழுது கண்டிப்பாக முறையில் வீண் விரயம் என்பது குறைவதோடு மட்டுமல்லாமல் பண வரவும் அதிகரிக்கும்.

- Advertisement -