புரிந்து கொள்ளாத கணவன் மனைவி பிரிந்து செல்லாமல் இருக்க சொல்ல வேண்டிய சக்தி வாய்ந்த மந்திரம் என்ன? இந்த மந்திரத்தை உச்சரித்தால் தம்பதியருக்குள் புரிதல் உண்டாகும்!

couple-fight-nagar-silai
- Advertisement -

கணவன், மனைவி உறவுக்குள் புரிதல் தான் அவர்களை கடைசி வரை வாழ்க்கை துணையாக வழிநடத்தி செல்லும். இந்த புரிதல் இல்லாமல் பிரிந்து செல்லும் உறவுகள் இன்று ஏராளம் பெருகி வருகிறார்கள். இப்படியான சூழ்நிலையில் ஒருவரை பற்றி ஒருவர் புரிந்து கொண்டு வாழ்க்கையில் பிரியாமல் இருக்க சொல்ல வேண்டிய மந்திரம் என்ன? என்பதைத் தான் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தொடர்ந்து அறிந்து கொள்ள இருக்கிறோம்.

கணவன், மனைவிக்குள் ஏற்படும் சண்டை, சச்சரவுகளுக்கு பூர்வ ஜென்ம பாவங்களும் காரணமாக அமைந்து இருக்கின்றன என்று ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகிறது. அதனால் தான் இந்த ஜென்மத்தில் நீங்கள் என்ன புண்ணியம் செய்திருந்தாலும் உங்களுக்கு வாழ்க்கை துணை மிக மோசமாக அமைந்திருக்க கூடும். இத்தகைய பாவங்களில் இருந்து விடுபட்டு கணவன், மனைவிக்குள் புரிதல் உண்டாகி, நெருக்கம் ஏற்பட சொல்ல வேண்டிய மந்திரம் நாக மந்திரம் ஆகும்.

- Advertisement -

நாக மந்திரம்:
ஓம் சர்பராஜாய வித்மஹே,
நாகராஜாய தீமஹி,
தன்னோ னந்தஹ் ப்ரசோதயாத்!!

மேற்கண்ட இந்த நாக மந்திரம் மிகவும் சக்தி வாய்ந்தது. நாக தோஷம் உள்ளவர்களுக்கு நல்ல வாழ்க்கை அமைந்திருக்காது. கணவன் மனைவிக்குள் சதா பிரச்சனை, குடும்ப உறவுகளுக்குள் தொந்தரவுகள் ஏற்படும். மேலும் இவர்களுக்கு குழந்தை பாக்கியமும் தள்ளி சென்று கொண்டே இருக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு நாக தோஷம் இருந்தால் திருமணம் கைகூடி வருவதற்கு வாய்ப்புகள் குறைவாக இருக்கும்.

- Advertisement -

இப்படி நாக தோஷம் உள்ளவர்களுக்கு உண்டாகக்கூடிய பிரச்சனைகள் தீர இந்த மந்திரத்தை 108 முறை தினமும் தவறாமல் உச்சரிக்க வேண்டும். நாகங்களை துன்புறுத்தியவர்கள், அடித்து கொன்றவர்கள் 7 ஜென்மத்திற்கும் அந்த பாவத்திற்கான தண்டனையை அனுபவிப்பதாக சாஸ்திரங்கள் குறிப்பிடுகிறது. அவர்களை அறியாமல் செய்த பாவங்கள் கூட மிக தீவிரமாக இவர்களை தொடர்ந்து வரும்.

இத்தகைய நாக தோஷத்தில் இருந்து விடுபட்டு குடும்ப வாழ்க்கையில் நிம்மதி உண்டாவதற்கு நாகத்தை தொடர்ந்து வழிபட்டு வரலாம். கோவில்களில் நாகர் வீற்றிருப்பார். இந்த நாகர் கணவன் மனைவியாக பின்னி பிணையப்பட்டு இருப்பதை நீங்கள் பார்க்க முடியும். அந்த சிலைகளுக்கு மஞ்சள் காப்பு சாற்றி, குங்குமம் இட்டு பால் அபிஷேகம் செய்யலாம். பாலாபிஷேகம் செய்யும் பொழுது நாக மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.

- Advertisement -

கருடர் மந்திரம்:
குங்கு மாங்கித வர்ணாய குந்தேந்து தவளாயச,
விஷ்ணு வாஹ நமஸ்துப்யம் பக்ஷிராஜாய நேநம!!

இதையும் படிக்கலாமே:
துடைப்பம் வாங்க நல்ல நாள் எது தெரியுமா? இந்த நாளில் துடைப்பம் வாங்கினால் அதிர்ஷ்டம் கூரையைப் பிரித்துக் கொண்டு கொட்டுமாம்!

நாக மந்திரம் மட்டும் அல்லாமல் நாக தோஷம் நீங்க கருடாழ்வார் மந்திரங்களையும் உச்சரிக்கலாம். கருடர் நாகத்திற்கு எதிரானவர் என்பதால் நாக தோஷம் நீங்குவதாக ஒரு ஐதீகம் உண்டு. கருடாழ்வாரை மனதார நினைத்து கீழ்வரும் கருட மந்திரத்தை தொடர்ந்து 108 முறை தினமும் உச்சரிப்பவர்களுக்கு நாக தோஷங்கள் நீங்குவதாக ஒரு ஐதீகம் உண்டு. மேலும் நாகத்தால் ஏற்படக்கூடிய தோஷங்கள் அடுத்தடுத்த பிறவிக்கும் பின் தொடராமல் தடுக்கலாம். இதனால் திருமண தடைகள் நீங்கும். கல்யாணம் ஆனவர்களுக்கு குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகள் குறையும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு பிள்ளை பேறு உண்டாகும். மேலும் கணவன் மனைவிக்குள் புரிதல் இல்லாதவர்களுக்கு புது புரிதல் ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் அனுசரித்து விட்டு கொடுத்து செல்வார்கள்.

- Advertisement -