கணவன், மனைவியின் சொல்பேச்சு கேட்க பரிகாரம்

fight
- Advertisement -

எல்லா மனைவிமார்களுக்கும் உள்ள ஆசைதான் இது. என்னுடைய கணவர், என் பேச்சை தட்டாமல் கேட்க வேண்டும். என்னுடைய பேச்சுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் இன்றைய சூழ்நிலையில், யாரும் யார் பேச்சுக்கும் மரியாதை கொடுப்பது கிடையாது. கணவராகப்பட்டவர், மனைவி சொல்லக்கூடிய பேச்சுக்கு மரியாதை கொடுக்க வேண்டும்.

மனைவியாகப்பட்டவள் கணவர் சொல்லக்கூடிய பேச்சுக்கு மரியாதை கொடுக்க வேண்டும். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து, ஒருவர் சொல்வதை இன்னொருவர் கேட்டு புரிந்து நடந்து கொண்டால் தான் இல்லற வாழ்க்கை இனிக்கும். சரி, உங்க வீட்டில் கணவர் எப்போதுமே நீங்கள் சொல்லும் பேச்சை செவி கொடுத்து கேட்க மாட்டாரா.

- Advertisement -

உங்கள் பேச்சுக்கு ஒரு மரியாதையே உங்க வீட்டில் இல்லையா. நியாயமான சில விஷயங்களுக்கு கூட உங்கள் பேச்சை எடுப்படாதா. மனவிமார்கள் செய்ய வேண்டிய பரிகாரம் இது. வெள்ளிக்கிழமை இரவு 8:00 மணியிலிருந்து 9:00 மணி வரை சுக்கிர ஹோரை வரக்கூடிய நேரம். இந்த நேரத்தில் உங்களுடைய கணவருக்கு ஃப்ரூட் சாலட் உங்கள் கையால் செய்து கொடுங்கள்.

ஆப்பிள் ஆரஞ்சு மாதுளை இப்படிப்பட்ட பழங்களை எல்லாம் நறுக்கி போட்டு ஒரு கிண்ணத்தில் அவருக்கு கொஞ்சமாக அதில் தேன் விட்டு சாப்பிட கொடுத்து விடுங்கள். இதை செய்தால் உங்களுடைய கணவர் நீங்க சொல்லக்கூடிய பேச்சை கேட்பார். அதாவது மனைவியின் பேச்சை கணவர் கேட்க செய்ய வேண்டிய பரிகாரம் இது.

- Advertisement -

ஒரு வாரம் வெள்ளிக்கிழமை செய்துவிட்டு பலனை எதிர்பார்க்கக் கூடாது. தொடர்ந்து வாரம் தோறும் வரக்கூடிய வெள்ளிக்கிழமை இதை செய்யணும். இந்த பழத்தை உங்கள் வீட்டில் இருக்கும் பிள்ளைகளும் சாப்பிடலாம் தவறு கிடையாது. வீட்டில் ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு, ஒற்றுமையாக வாழ்வதற்கு இந்த எளிமையான பரிகாரம் உங்களுக்கு நிச்சயம் கை கொடுக்கும்.

அதேபோல கணவருக்கும் மனைவிக்கும் ஒரு பேச்சு வார்த்தை கூட இருக்காது. ஒருவருக்கு ஒருவர் முகம் கொடுத்து கூட பேச வாய்ப்பு இல்லை. இரண்டு பேரும் எலியும் பூனையும் ஆக ஆளுக்கு ஒரு திசையில் வாழ்கிறார்கள், எனும் பட்சத்தில் இந்த பரிகாரத்தை முயற்சி செய்து பாருங்கள். மனைவியின் கையால் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும்.

- Advertisement -

இரண்டு சின்ன சின்ன தொட்டி வாங்கிக்கோங்க. அதில் ஒரு தொட்டியில் கருந்துளசி, ஒரு தொட்டியில் தொட்டா சிணுங்கி செடி வச்சுக்கோங்க. இந்த இரண்டு செடிகளையும் வீட்டில் ஒன்றாக பக்கத்து பக்கத்தில் வைத்து தண்ணீர் ஊற்றி வளர்த்து வந்தால் கணவன் மனைவிக்குள் அன்னியோன்யம் ஏற்படும். தினமும் அந்த தொட்டா சிணுங்கி செடியை தொடும்போது அது மூடிக்கொள்ளும். பிறகு விரிந்து விடும்.

இதையும் படிக்கலாமே: நல்லது நடக்க முருகர் வழிபாடு

மனைவி தினமும் அந்த தொட்டாச்சிணுங்கி செடியை தொட்டு கணவரோடு ஒன்று சேர வேண்டும் என்ற பிரார்த்தனையை வைத்தால் இந்த பிரபஞ்சம் அதை நிறைவேற்றி வைக்கும். எலியும் பூனையும் ஆக சண்டை போட்டு இருக்கும் கணவன் மனைவி அந்யூனியமாக வாழ தொடங்கி விடுவார்கள். எளிமையான ஆன்மீகம் சார்ந்த இந்த பரிகாரத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -