பெண்கள் அம்மா வீட்டில் இருந்து இந்த பொருளை மட்டும் தெரியாமல் கூட எடுத்துட்டு போகவே கூடாதாம் தெரியுமா?

thudaippam-seyakkai
- Advertisement -

திருமணமான பின்பு பெண்கள் புகுந்த வீட்டிலிருந்து தாய் வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்வது உண்டு. அப்படி வந்து செல்லும் பொழுது அம்மா வீடு தானே என்று நிறைய பொருட்களை இங்கிருந்து கொண்டு செல்வதை வழக்கமாக வைத்திருப்பார்கள். வந்த பிள்ளைக்கு ஏதாவது கொடுத்து அனுப்பனுமே என்று தாய்மார்களும் சில பொருட்களை கொடுத்து மகிழ்ச்சியுடன் வழி அனுப்புவார்கள். அப்படி தாய் வீட்டில் இருந்து கொண்டு போகவே கூடாத சில பொருட்களும் உண்டு. அது என்னென்ன? என்பதை இந்த ஆன்மீக குறிப்பு பதிவில் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

புகுந்த வீட்டிலிருந்து பிறந்த வீட்டிற்கு வந்த பின்பு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமையில் கிளம்பக் கூடாது என்று கூறுவது பார்த்திருப்போம். இந்த நாட்களில் வீட்டிற்கு வந்த செல்ல மகள், வீட்டை விட்டு சென்றால் வீட்டில் இருக்கும் மகாலட்சுமியும் கூடவே சேர்ந்து போய்விடுவாள் என்பது அவர்களுடைய அசைக்க முடியாத நம்பிக்கையாக இன்றளவிலும் இருந்து வருகிறது.

- Advertisement -

அதே போல எட்டாம் நாள், மாதத்தின் கடைசி நாள், அஷ்டமி, நவமி போன்ற நாட்களிலும் அனுப்ப மாட்டார்கள். இந்த நாட்கள் எல்லாம் அசுப நாட்களாக கருதப்படுவதால் வீட்டிற்கு வந்த செல்ல மகளை வெளியில் அனுப்புவதை தவிர்க்கின்றனர். நல்ல நாள் பார்த்து, நேரம் பார்த்து தான் புகுந்த வீட்டிற்கு மறுபடியும் அனுப்பி வைப்பார்கள். இப்படி ஒரு அற்புதமான சம்பிரதாயம் தமிழ்நாட்டில் அதிகம் உண்டு.

அது போல அம்மா வீட்டில் இருந்து பெண்கள் ஈர துணிகளை உலர வைக்காமல் எடுத்துக் கொண்டு செல்லக்கூடாது. ஈரமான துணிகளை எந்த காரணம் கொண்டும் அப்படியே கொண்டு செல்லக்கூடாது. இதனால் எம பயத்தை உண்டு பண்ணும், விபத்து நேரும், கெட்ட காரியங்கள் நடக்கும் என்று கூறப்படுகிறது எனவே துவைத்த துணியை காய போட நேரமில்லை என்று அள்ளிக் கொண்டு செல்லாதீர்கள். இன்னொரு நாள் வரும் பொழுது எடுத்துக் கொண்டு போகலாம்.

- Advertisement -

அம்மா வீட்டில் இருந்து கிளம்ப போகிறோம் என்றால் அன்றைய நாளில் பெண்கள் தலைக்கு எண்ணெய் வைத்து குளிக்கவே கூடாது. அந்த சமயத்தில் பெண்கள் புகுந்த வீட்டிற்கு கிளம்பக் கூடாது என்கிற ஐதீகமும் உண்டு எனவே முன்கூட்டியே தலைக்கு குளிப்பதனால் குளித்து முடித்துக் கொள்ளுங்கள். எண்ணெய் வைத்து அன்றைய தினம் குளிக்காதீர்கள். அதே போல எண்ணெய், சீயக்காய் மற்றும் துடைப்பம் ஆகியவற்றை தாய்மார்கள் பெண்களுக்கு கொடுத்து அனுப்பக்கூடாது. அதை அவர்கள் வாங்கி செல்லவும் கூடாது. எண்ணெய், சீயக்காய், துடைப்பம் போன்றவை இறப்பு வீடுகளில் அதிகம் பயன்படுத்தும் பொருட்களாக இருக்கிறது எனவே இவற்றை துரதிர்ஷ்டமாக கருதி புறக்கணிப்பது உண்டு.

இதையும் படிக்கலாமே:
வியாழக்கிழமை அன்று ஒரு டம்ளர் தண்ணீரை இப்படி குடித்து விட்டால், வாழ்வில் வீழ்ச்சி என்பதே இருக்காது. வெற்றியும் அதிர்ஷ்டமும் உங்கள் பக்கம் நிற்க தவமிருக்கும்.

திருமணமான பெண்கள் அம்மா வீட்டிற்கு வந்து விட்டால் அரிசி, பருப்பு, உப்பு, புளி, மிளகாய் என்று மளிகை சாமான்களை கூட விட்டு வைக்காமல் கொண்டு செல்வதை நாம் பார்த்திருப்போம். இதில் லட்சுமி கடாட்சம் அடங்கியுள்ள உப்பு, மஞ்சள் போன்ற பொருட்களை கொண்டு செல்லும் பொழுது இனாமாக எக்காரணம் கொண்டும் கொண்டு செல்லக்கூடாது. இவை புகுந்த வீட்டிற்கு நன்மை செய்யும் ஆனால் பிறந்த வீட்டிற்கு நன்மை செய்யாது எனவே பிறந்த வீட்டின் நன்மை கருதி இவற்றை கொண்டு செல்பவர்கள் இலவசமாக கொண்டு செல்லாமல் அதற்குரிய பணமாக சிறு தொகையை கொடுத்து விட்டு கொண்டு செல்லுங்கள்.

- Advertisement -