கணவன் மனைவி ஒற்றுமைக்கு பச்சை கற்பூரம்

fight
- Advertisement -

ஒரு ஜோதிடரிடம் ஜாதகம் பார்த்து வைத்து தான் திருமணம் நடத்தப்படுகிறது. ஆனாலும் ஒரு சில காலகட்டத்துக்கு பிறகு குடும்ப வாழ்க்கை சரியாக அமையவில்லை என்றால், பிரிவு ஏற்படுகிறது. அதன் பிறகு மீண்டும் ஜாதகத்தை பார்க்க செல்வோம். இன்னொரு ஜோசியர் சொல்லுவார், இவர்களுக்கு பொருத்தம் இல்லாமல் திருமணம் செய்து வைத்து விட்டார்கள்.

இவர்கள் இப்போது பிரிய கூடிய நேரம். இவர்களுக்குள் ஒத்து வராது. சண்டை சச்சரவு வரத்தான் செய்யும் என்று சொல்லிவிடுவார்கள். வீட்டில் இருக்கும் கணவன் மனைவி இதையே சாக்காக வைத்துக் கொண்டு, ஜாதகத்தில் இருக்கிறது, நமக்கு வாழ்க்கையில் ஒத்து வராது என்று சண்டை போட்டுக் கொண்டே இருப்பார்கள்.

- Advertisement -

முதலில் இப்படி நெகட்டிவ்வாக நினைப்பதை நிறுத்துங்கள். ஜாதகம் சரியில்லை பிரிந்து விடுவோம் என்று சொல்லிக் கொண்டே இருந்தால், பிரியத்தான் செய்வீர்கள். ஜாதகம் ஒரு பக்கம் இருந்தாலும், நம்மை சுற்றி இறையருள் நிறைந்து இருந்தால், நமக்கு கெடுதல் செய்ய யாராலும் முடியாது. இறையருள் கிடைத்துவிட்டால் ஜாதக கட்டத்தில் தாறுமாறாக அமர்ந்திருக்கும் கிரகங்களும் சரியான வேலையை செய்ய தொடங்கும்.

உங்கள் ஜாதக கட்டத்தில் பிரச்சனை இருந்தாலும் சரி, இல்லை என்றாலும் சரி, நீங்கள் ஒன்றாக சேர்ந்து வாழ வேண்டும் என்று நினைத்தாலும் சரி, இல்லை பிரிந்து போக வேண்டும் என்று நினைத்தாலும் சரி, எல்லா பிரச்சனைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு ஆன்மீகம் சார்ந்த இந்த சின்ன பரிகாரத்தை செய்து பாருங்கள்.

- Advertisement -

உங்களுடைய வீட்டில் எப்போதும் இந்த வாசம் வீசும் படி வைத்துக் கொள்ளுங்கள் போதும். கணவன் மனைவி காலம் முழுவதும் ஒன்று சேர்ந்து வாழ வீட்டில் வைக்க வேண்டிய வாசம் நிறைந்த அந்த ஒரு பொருள் என்ன ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.

கணவன் மனைவி ஒற்றுமைக்கு பரிகாரம்

பச்சைக் கற்பூரம் தாங்க அந்த பொருள். இது வெறும் பணத்தை வசியம் செய்வதற்கு மட்டும் கிடையாது. நம் குடும்பத்தில் நல்லதை வசியம் செய்வதற்கும் பச்சை கற்பூரம் உதவும். ஒரு சின்ன டப்பா அளவு பச்சை கற்பூரம் வாங்கிக் கொள்ளுங்கள். 20 இலிருந்து 30 கிராம் அளவு இருக்கட்டும். அதை ஒரு மெல்லிசான துணியில் வைத்து கட்டிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

முடிச்சாக கட்டிக் கொண்டால், அந்த மெல்லிசான துணியின் உள்ளே இருக்கும் பச்சை கற்பூரம் தன்னுடைய வாசத்தை எப்போதும் வெளிப்படுத்திக் கொண்டே இருக்கும். இந்த பச்சை கற்பூரம் முடிச்சை வீட்டில் குபேர மூலையில் வைக்க வேண்டும். குபேர மூலை என்பது தென்மேற்கு மூலை. இந்த மூலையில் யார் கண்ணுக்கும் தெரியாமல் இந்த பச்சை கற்பூரத்தை வைத்து விடுங்கள்.

ஆனால் அதிலிருந்து வெளிவரும் வாசம் நம் வீடு முழுவதும் பரவத்தான் செய்யும். இந்த பச்சை கற்பூரத்தின் வாசம் உங்களுடைய வீட்டில் ஒரு மன அமைதியை கொண்டு வந்து சேர்க்கும். சண்டை போட்டுக் கொண்டே இருக்கும் கணவன் மனைவி மத்தியில் ஒரு அன்னியோன்யத்தை உண்டு பண்ணும். சண்டை வருவது குறைந்தாலே பாதி பிரச்சனை தீர்ந்தது.

இதோடு சேர்த்து இந்த பச்சை கற்பூரத்தின் மூலம் மகாலட்சுமியின் வசியமும் அதிகமாக இருக்கும். மகாலட்சுமி வீட்டில் குடி வந்துவிட்டால், நம்முடைய வீட்டில் சண்டை சச்சரவுகள் குறைய ஆரம்பித்து விடும். தானாக கணவன் மனைவிக்குள் ஒற்றுமை நிலவும். பிறகு பிரிவதற்கான வாய்ப்பே வராது.

லட்சக்கணக்கில் செலவு செய்து கோர்ட்டுக்கு போய் எப்படியாவது பிரிந்து விட வேண்டும் என்று நினைக்கும் கணவன் மனைவி மத்தியில், அன்னியோன்யத்தை ஏற்படுத்த ஆன்மீகம் சார்ந்த இந்த எளிய பரிகாரம் போதும். உங்க மனசுக்குள் நினையுங்கள் குடும்பத்தை விட்டு பிரிய கூடாது, ஒன்றாக தான் வாழ வேண்டும் என்று. பிறகு இந்த பரிகாரத்தையும் செய்யுங்கள்.

இதையும் படிக்கலாமே: கடன் அடைய பைரவருக்கு தீபம்

நீங்கள் நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவுக்கு நல்லது நடக்கும். இந்த பச்சை கற்பூரம் கரைந்த பிறகு அந்த வாசம் குறையும் சமயத்தில், பழைய பச்சை கற்பூரத்தை எடுத்து கால் படாத இடத்தில் போட்டுவிட்டு மீண்டும் புதிய பச்சை கற்பூரத்தை அந்த மூலையில் வைத்து விடுங்கள். நல்லது நடக்கும். நல்லது மட்டுமே நடக்கும் என்ற இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -