கணவரின் ஆயுள் அதிகரிக்க மனைவி செய்ய வேண்டிய பரிகாரம்

sivan
- Advertisement -

சில நேரம் பெண்களுக்கு ரொம்பவும் கஷ்டமான காலகட்டம் இருக்கும்போது, இப்படிப்பட்ட பிரச்சனைகள் எல்லாம் வரும். இப்படிப்பட்ட பிரச்சனை யாருக்கும் வரக்கூடாது என்று அந்த இறைவனை பிரார்த்தனை செய்து கொள்வோம். இருப்பினும் சில கெட்ட நேரத்தில் வரக்கூடிய பிரச்சனையை சமாளித்து தானே ஆக வேண்டும்.

உதாரணத்திற்கு ஒரு பெண்ணின் கணவருக்கு உடல்நிலை ரொம்பவும் சரியில்லை. கணவன் உயிருக்கே ஆபத்து இவரை காப்பாற்றவே முடியாது என்று சொல்லிவிட்டார்கள். அந்த சூழ்நிலையில் மனைவி தன்னுடைய கணவரை காப்பாற்ற இந்த பரிகாரத்தை செய்யலாம். சில குடும்பங்களில் திருமணம் ஆகி கொஞ்ச நாள் தான் ஆயிருக்கும். ஆனால் கணவரது ஜாதகத்தில் கண்டம் இருக்கிறது என்று சொல்லிவிடுவார்கள்.

- Advertisement -

கணவரை காப்பாற்ற எவ்வளவோ பரிகாரம் ஜோதிடர்களை பார்த்திருப்பார்கள். ஆனால் அவர்கள் எல்லாம் கைவிட்டு இருப்பார்கள். கணவருடைய ஆயுள் இந்த வயது வரை தான் இருக்கிறது. இதற்கு மேல் அவரால் வாழ முடியாது என்று சொல்லி கைவிட்டு இருப்பார்கள். இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலை ஒரு பெண்ணுக்கு வரும் போது அவள் தன்னுடைய கணவரை காப்பாற்ற, கணவரின் ஆயுளை பலப்படுத்தவும் இந்த ஆன்மீகம் சார்ந்த பரிகாரம் கை கொடுக்கும்.

கணவரின் ஆயுளை காக்க பரிகாரம்

முதலில் உங்கள் கணவரது ஜாதகத்தை கொண்டு போய் திருச்சி, திருப்பட்டூர் பிரம்மா கோவில், பிரம்மபுரீஸ்வரர் பாதங்களில் வைத்து அவருடைய தலையெழுத்து சரியாக வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். உங்களுடைய கணவரது ஜாதக கட்டம் எவ்வளவு மோசமான சூழ்நிலையில் எழுதி இருந்தாலும் சரி, அதை மாற்றி எழுத அந்த பிரம்மாவால் மட்டும் தான் முடியும்.

- Advertisement -

அந்த கோவிலுக்கு ஒரு முறை சென்று வந்து விடுங்கள். பிறகு உங்கள் கணவரை காப்பாற்ற வேண்டும் என்றால் நீங்கள் சுமங்கலி பெண்களின் கையால் ஆசீர்வாதத்தை பெற வேண்டும். தீர்க்க சுமங்கலையாக இருக்க வேண்டும் என்ற ஆசிர்வாதத்தை மனதார, சுமங்கலி பெண்கள் உங்களுக்கு வழங்கும்போது, உங்களுடைய கணவரின் ஆயுள் காப்பாற்றப்படும்.

அந்த ஆசீர்வாதத்தை எப்படி வாங்க வேண்டும் தெரியுமா? உங்க வீட்டு பக்கத்தில் இருக்கும் ஏதாவது ஒரு சிவன் கோவிலை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். தினமும் அந்த கோவிலுக்கு சென்று சிவபெருமானுக்கு விளக்கு ஏற்றி, வில்வ இலையால் அர்ச்சனை செய்து கணவர் ஆயுள் நீடிக்க வேண்டும் என்று வேண்டுதல் வைக்க வேண்டும். அந்த கோவிலுக்கு வெளியில் வந்து அமர்ந்து கொள்ளுங்கள்.

- Advertisement -

அந்த கோவில் நிலை வாசலுக்கு வெளிப்பக்கத்தில் ஏதாவது ஒரு இடத்தில் அமர்ந்து கொள்ளுங்கள். உங்களின் முன்பு ஒரு தாம்பூல தட்டில் மஞ்சள் குங்குமம் அட்சதை, உதிரி புஷ்பம் இருக்கட்டும். சிவன் கோவிலுக்கு நிறைய சுமங்கலி பெண்கள் வருவார்கள் அல்லவா. அவர்களுடைய கையால் உங்களுடைய நெற்றியில் மஞ்சள் குங்குமப்பொட்டு வைக்கப்பட்டு, அவர்களுடைய கையால் அட்சதையால் ஆசிர்வாதத்தை நீங்கள் பெற வேண்டும். அந்த சமயத்தில் நீங்கள் அந்த சுமங்கலி பெண்களின் காலைத் தொட்டு வணங்க வேண்டும்.

கோவிலுக்கு வரும் ஒவ்வொரு சுமங்கலி பெண்களிடம் கேளுங்கள். இந்த மஞ்சள் குங்குமத்தை என் நெற்றியில் வைத்து தீர்க்க சுமங்கலியாக இருக்க வேண்டும் என்று ஆசீர்வாதத்தை தாருங்கள் என்று, யாசகம் கேளுங்கள். இதை நீங்கள் சிவனிடம் கேட்கக் கூடிய யாசகமாக நினைத்துக் கொள்ளுங்கள். சுமங்கலி பெண்கள் கோவிலுக்கு உள்ளே செல்லும்போது இதை கேட்கக் கூடாது.

அந்த பெண்கள் கோவிலுக்கு சென்று சிவபெருமானை வழிபாடு செய்து விட்டு மன நிறைவோடு வெளியில் வரும்போது தான் இதை நீங்கள் அவர்களிடம் யாசகமாக கேட்க வேண்டும். தொடர்ந்து இந்த வழிபாட்டை எத்தனை நாட்கள் செய்யணும். 48 நாட்கள் செய்யணும். ஆமாங்க உயிர் போகக்கூடிய சூழ்நிலை என்றால் கஷ்டப்பட்டு இப்படிப்பட்ட பரிகாரங்களை செய்வதன் மூலம் தான் நிச்சயம் பலன் கிடைக்கும்.

தினமும் காலையிலிருந்து மாலை வரை இதேபோல கோவில் வாசலில் அமர்ந்து கோவிலுக்கு வரக்கூடிய சுமங்கலி பெண்களின் கையால் நீங்கள் ஆசிர்வாதத்தை வாங்கணும். வேறு வழி கிடையாது சிவனிடம் நீங்கள் யாசகம் கேட்கிறீர்கள். உங்களுடைய கணவர் உயிர் பிரியக்கூடாது என்று. அதற்காக சிவன் கோவில் வாசலில் இருந்து இப்படி ஒரு பரிகாரத்தை செய்துதான் ஆகணும்.

இதையும் படிக்கலாமே: பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர பரிகாரம்

இது எல்லோராலும் செய்யக்கூடிய பரிகாரம் கிடையாது. எல்லோரும் செய்யவும் முடியாது. எல்லோரும் செய்யவும் கூடாது. மீண்டும் இந்த இடத்தில் நாம் பதிவு செய்து கொள்கின்றோம். எந்த பெண்ணுக்கும் இப்படி ஒரு சூழ்நிலை வரக்கூடாது தான். இருப்பினும் விதியின் பயனால் உங்களுடைய கணவருக்கு உயிருக்கு ஆபத்து வரக்கூடிய சூழல் அமைந்தால் மேல் சொன்ன இந்த பரிகாரம் உங்களுக்கு கைகொடுக்கும். நம்பிக்கை உள்ளவர்கள் இதை பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -