பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர பரிகாரம்

amman2
- Advertisement -

இன்று குடும்ப வாழ்க்கையில் இருக்கக்கூடிய மிகப்பெரிய பிரச்சனை கணவன் மனைவி பிரிவு. காரணமே இருக்காது. சின்னதாக ஆரம்பித்த பிரச்சனை பெரிய அளவில் சென்று கணவன் மனைவி பிரியும் வரை போயிருக்கும். இதனால் பாதிக்கப்பட போவது கணவன் மனைவி மட்டும் கிடையாது. அவர்களுக்கு பிறந்த குழந்தைகள், அவர்களை சுற்றி இருக்கும் உறவுகள். இப்படி மொத்தமாக இரண்டு குடும்பங்கள் கஷ்டத்தை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை.

ஆனால் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் கணவனும் மனைவியும் சண்டை போட்டுக் கொண்டு கோர்ட் வாசலில் போய் நிற்கிறார்கள். அதுவும் இந்த கலியுகத்தில், கல்யாண வாழ்க்கை ஒரு பொம்மலாட்டம் போல இருக்கிறது. ஆரம்பிப்பதும் தெரியப்போவதில்லை. முடிவதும் தெரியப்போவதில்லை. அந்த அளவுக்கு வாழ்க்கை சீக்கிரம் தொடங்கி சீக்கிரம் முடிந்து விடுகிறது.

- Advertisement -

கணவன் மனைவி பிரச்சனையை சரி செய்ய எத்தனையோ வழி இருக்கிறது. இன்று ஆன்மீகம் சார்ந்த ஒரு வழியை பற்றி நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். பிரிந்த கணவன் மனைவியாக இருக்கிறீர்கள். நீங்கள் இருவரும் சேர வேண்டும் என்று நினைத்தால், இந்த பரிகாரத்தை செய்யலாம். மிக மிக எளிமையான பரிகாரம்தான்.

பிரிந்த கணவன் மனைவியை ஒன்று சேர்க்கும் விரலி மஞ்சள்

இந்த பரிகாரத்திற்கு நமக்கு தேவையான பொருட்கள் 2 விரலி மஞ்சள். கணவன் பயன்படுத்திய துணி கொஞ்சம். மனைவி பயன்படுத்திய துணி கொஞ்சம். இருவரும் பயன்படுத்திய துணியில் இருந்து நூல் எடுக்க முடியும் என்றாலும் நூலை மட்டும் அறுத்து எடுத்து பரிகாரத்திற்கு பயன்படுத்தலாம். முடியவில்லை என்றால் ஒரு புடவையை ஒரு சிறிய துண்டாக வெட்டி எடுத்தும் பயன்படுத்தலாம். வேட்டியை அல்லது பனியன் துணியை சிறியதாக வெட்டி எடுத்தும் இந்த பரிகாரத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

- Advertisement -

ஒரு மஞ்சளில் மனைவியின் துணியை சுற்றிக் கொள்ளுங்கள். இன்னொரு மஞ்சளில் கணவனுக்கு துணியை சுற்றிக் கொள்ளுங்கள். இப்போது இரண்டு விரலி மஞ்சளையும் ஒன்றாக சேர்த்து வைத்து ஒரு மஞ்சள் நூல் போட்டு ஒன்றாக கட்டிக் கொள்ளுங்கள்.  அந்த இரண்டு விரலி மஞ்சளில் கணவன் மனைவி பயன்படுத்திய துணியில் சின்ன துண்டு கட்டப்பட்டுள்ளது.

இந்த முடிச்சை கொண்டு போய் ஒரு கோவிலில் இருக்கும் அரச மரத்தடியில் கட்டி விட வேண்டும். திருமணமாகாதவர்கள் மாங்கல்யம் கட்டுவார்கள். குழந்தை பாக்கியம் தேவை என்பவர்கள் தொட்டில் கட்டுவார்கள். வளையல் கட்டுவார்கள். இதே போல நீங்கள் தயார் செய்து வைத்திருக்கும் இந்த விரலி மஞ்சளையும் கொண்டு போய் அந்த அரச மரத்தடியில் கட்டி விட்டு வர வேண்டும். இந்த பரிகாரத்தை செவ்வாய்க்கிழமை அன்று செய்ய வேண்டும்.

- Advertisement -

6 வாரம் செவ்வாய்க்கிழமை தொடர்ந்து இந்த வழிபாட்டை செய்து அந்த மரத்தை 6 முறை வலம் வந்து கணவன் மனைவி ஒன்று சேர வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொண்டால், பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேருவீர்கள். சண்டை சச்சரவோடு இருக்கும் கணவன் மனைவி உங்களுடைய குடும்ப வாழ்க்கையை சந்தோஷமாக தொடரவும் நிறைய நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.

இந்த பரிகாரத்தை யார் செய்வது. பிரிந்திருக்கும் மனைவி கணவரோடு ஒன்று சேர வேண்டும் என்றால் மனைவியின் கையாலேயே இந்த பரிகாரத்தை செய்யலாம். கணவர் மனசுக்குள் நினைக்கிறார். என் மனைவியுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று, கணவர் கையாளும் இந்த பரிகாரத்தை செய்யலாம்.

இதையும் படிக்கலாமே: வீண் பழியிலிருந்து விடுபட, பெண்கள் செய்ய வேண்டிய அம்மன் வழிபாடு

மகளைப் பெற்ற தாய், தன்னுடைய மகள் நன்றாக இருக்க வேண்டும் என்றும் இந்த பரிகாரத்தை செய்யலாம். மகனைப் பெற்ற தாய் தன்னுடைய மகன் மருமகளுடன் சேர வேண்டும் என்றும் நினைத்தும் இந்த பரிகாரத்தை செய்யலாம். ஆனால் உங்களுக்கு அந்த கணவன் மனைவி இரண்டு பேர் பயன்படுத்திய வஸ்திரம் தேவை. அது மட்டும் தான் முக்கியம். அது இருந்தால் இந்த பரிகாரத்தை செய்து நல்ல பலனை பெற முடியும். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன ஆன்மீகம் சார்ந்த வழிபாட்டை பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -