காரிய தடை நீக்கும் மந்திரம்

sivan
- Advertisement -

சில பேருக்கு வாழ்க்கையில் காரியத்தடை முன்னேற்றத்தை தடைப்படுத்தும். எந்த ஒரு புது முயற்சிகளை மேற்கொண்டாலும் அதில் தடை. புது வேலைக்கு போனால் அதில் வெற்றி கிடைக்காது. புது தொழில் தொடங்கினால் அதில் நஷ்டம் உண்டாகும். புதுசாக ஒரு பொருளை வாங்கினால் கூட அதை சரியாக பயன்படுத்த முடியாமல் போய்விடும்.

புதிய வண்டி வாங்கி ஓட்டினாலும் அது உடனே பழுது ஆகிவிடும். அப்படி இல்லை என்றால் விபத்து ஆகிவிடும். இப்படி எந்த ஒரு புது முயற்சியில் ஈடுபடும் போதும் ஒரு தடை வருகிறது என்றால், என்ன செய்ய முடியும். இந்த சூழ்நிலை கஷ்டம் தானே. எல்லா முயற்சிகளிலும் தோல்வி அடைபவர்கள் பின் சொல்லப்படும் இந்த ஆன்மீகம் சார்ந்த வழிபாட்டை மேற்கொள்ளுங்கள்.

- Advertisement -

உங்களுடைய முயற்சிகள் எல்லாம், முதல் முறையிலேயே வெற்றியை அடையும். வெற்றியை கொடுக்கும் தடைகளை தகர்க்கும் அந்த 1 வரி மந்திரம் என்ன அதை எப்படி உச்சரிப்பது தெரிந்து கொள்வோமா.

காரிய தடையை தகர்க்கும் சிவ மந்திரம்

முதலில் நமக்கு இந்த பரிகாரத்திற்கு ஒரு வில்வ இலை தேவை. ஒரு சிவன் கோவிலுக்கு போங்க. பிரசாதமாக வில்வ இலை கொடுப்பாங்க. அந்த வில்வ இலையை வாங்கி, எடுத்து வந்து இந்த பரிகாரம் செய்ய பயன்படுத்தினால், ரொம்ப ரொம்ப சிறப்பு. தினமும் உங்களுக்கு எப்போது நேரம் கிடைக்கிறதோ, அப்போது இந்த பரிகாரத்தை செய்யலாம்.

- Advertisement -

வாங்கி வந்த வில்வ இலையில், ‘சிவசிவ’ என்ற நாமத்தை உங்கள் ஆள் காட்டி விரலால் சும்மா வெறுமனே எழுதி விடுங்கள். அது கண்ணுக்கு தெரிய வேண்டும் என்ற அவசியம் கிடையாது. சிவ சிவ என்ற நாமம் அந்த வில்வ இலையின் மேல் எழுதப்பட வேண்டும். வெறும் கையில் எழுதி அந்த இலையை சக்தி வாய்ந்த இலையாக மாத்திடுங்க.

மந்திரம் சொல்லும் போது உள்ளங்கைகளில் அந்த வில்வ இலையை வைத்துக் கொள்ளுங்கள். கிழக்கு பார்த்த வாறு அமர்ந்து கொள்ளுங்கள். ‘ஓம் சிவ சிவ ஓம்’ இந்த மந்திரத்தை 108 முறை சொல்லுங்கள். தினமும் இந்த மந்திரத்தை உச்சரிக்க உச்சரிக்க, அதுவும் கையில் வில்வ இலையை வைத்துக் கொண்டு உச்சரிக்க, உங்களுக்கு தன்னம்பிக்கையும் தைரியமும் வாழ்க்கையில் உயர தொடங்கிவிடும். தோல்வி என்பதே இருக்காது.

- Advertisement -

காரிய தடை வராது. ஒரு இன்டர்வியூக்கு போறீங்க பதட்டமா இருக்கீங்க. இன்டர்வியூக்கு போறதுக்கு முன் இந்த மந்திரத்தை சொல்லலாம். மனசுக்குள் இந்த மந்திரத்தை சொல்லிக் கொண்டே இருங்க. திருமணத்திற்கு வரன் பார்க்க போறீங்க எந்த வரனும் சரியாக அமையவில்லை, இந்த மந்திரத்தை சொல்லலாம். வரன் பார்க்க செல்லும் போது இந்த மந்திரத்தை சொல்லலாம்.

நீண்ட நாட்களாக மருத்துவ செலவு இருக்கிறது அடிக்கடி மருத்துவமனைக்கு போறீங்க. மருத்துவமனைக்கு போகக்கூடாது. ஆரோக்கியம் சிறப்பாக இருக்க வேண்டும் என்றும் இந்த மந்திரத்தை சொல்லலாம். நன்றாக படிக்க வேண்டும் என்றும் இந்த மந்திரத்தை மாணவர்கள் சொல்லலாம். இப்படி உங்கள் வாழ்க்கையில் இருக்கும் எந்த பிரச்சனையை சரி செய்து கொள்ள வேண்டும் என்று நினைத்தாலும் இந்த மந்திரத்தை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே: ஜனவரி 2024 தேய்பிறை அஷ்டமி வழிபாடு

வாரத்திற்கு ஒரு முறை பழைய வில்வ இலைகளை மாற்றிக் கொள்ளுங்கள். மந்திரத்தை சொல்லிவிட்டு அந்த வில்வ இலையை பூஜை அறையில் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள். மனதிற்குள் இந்த மந்திரத்தை சொன்னால், நீங்கள் வாழ்க்கையில் கடந்து போகும் பாதையில், எந்த தடையும் இருக்காது, தோல்வியும் இருக்காது என்ற தகவலுடன் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -