உங்கள் முன்னேற்றத்தை தடுக்க கூடிய அனைத்தையும் தகர்த்தெறியக் இந்த விளக்கை ஏறினால் போதும். பணத் தடை, வியாபாரத் தடை, காரியத்தடை என அனைத்தையும் போக்கும் அற்புத பரிகாரம்.

vinayagar dheepam
- Advertisement -

எல்லோருடைய வாழ்க்கையிலும் தடைகள் வந்து கொண்டு தான் இருக்கும். இந்த தடைகளை தாண்டி தான் நம்முடைய வாழ்க்கை பயணத்தை தொடர வேண்டும். ஆனால் அதை எப்படி சரி செய்வது என்ற வழிமுறை தான் நாம் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். நம்முடைய முன்னேற்றத்தை தடுக்க கூடிய இந்த தடைகளை ஆன்மீக ரீதியாக எப்படி சரி செய்யலாம் என்பதை இந்த பதிவில் இப்போது நாம் தெரிந்து கொள்ளலாம்.

வாழ்க்கையில் எந்த ஒரு காரியத்தை தொடங்கினாலும் உடனே அது வெற்றியை தந்து விடாது. அதற்கான முயற்சியை நாம் எடுத்துக் கொண்டே இருக்கும் போது நிச்சயம் அதற்கான பலனை பெற முடியும். சில நேரங்களில் உடனடியாக நடக்கும் சில நேரங்களில் சற்று தாமதமாக நடக்கும். முயற்சிகள் தடைபடுவதற்கான தாமதத்தை கண்டறிந்து சரி செய்து அத்துடன் இந்த பரிகாரத்தையும் செய்யும் போது உங்களுக்கான தடைகள் அனைத்தும் நீங்கும். இப்போது இந்த பரிகாரத்தை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

தடைகள் நீங்க ஏற்ற வேண்டிய தீபம்:
இந்த பரிகாரத்தை சனிக்கிழமை அன்று தான் செய்ய வேண்டும். சனிக்கிழமை மாலை சூரியன் மறைவதற்கு முன்பு அதாவது 5 மணிக்கு மேல் 6 மணிக்குள்ளாக செய்து விட வேண்டும். இந்தப் பரிகாரத்தை அரச மரத்தடியில் தான் செய்ய வேண்டும். இது விநாயகர் வீற்றிருக்கும் மரமாக இருந்தாலும் சரி அல்லது உங்கள் வீட்டின் அருகில் பழமையான மரங்கள் இருந்தால் அந்த மரத்தையும் தேர்வு செய்து இந்த பரிகாரத்தை செய்து கொள்ளலாம்.

சனிக்கிழமை மாலையில் அரச மரத்தடியில் ஆறு அகல் விளக்கில் நெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீபத்தின் ஒவ்வொரு விளக்கிலும் ஒரே ஒரு குங்குமப்பூ இதழை போட வேண்டும். நெய்யுடன் குங்குமப் பூ சேர்த்து எரியும் இந்த விளக்கானது உங்களுடைய வாழ்க்கையில் இருக்கும் தடைகள் அனைத்தையும் நீக்கக் கூடிய சக்தி வாய்ந்தது.

- Advertisement -

இந்த விளக்கை ஆறு வாரங்கள் தொடர்ந்து ஏற்ற வேண்டும். ஏதேனும் ஒரே ஒரு வேண்டுதலை வைத்து அது நிறைவேற வேண்டும் என்று மனதார வேண்டிக் கொண்டு தீபத்தை ஏற்றுங்கள். ஆறு வாரத்திற்கு உள்ளாகவே நீங்கள் நினைத்த காரியம் நிச்சயம் தடையில்லாமல் நடைபெறும் என்று சொல்லப்படுகிறது.

ஆறு வாரம் முடிந்த பிறகு உங்களுடைய அடுத்த வேண்டுதலை வைத்து தீபத்தை ஏற்றலாம். இப்படி வாழ்நாள் தொடர்ந்து இந்த தீபத்தை ஏற்றுக் கொண்டே வருவதை பழக்கமாகவே வைத்துக் கொண்டால் உங்களுடைய காரியங்கள் எப்போதுமே தடை இல்லாமல் நல்ல முறையில் நடந்து கொண்டிருக்கும். உங்களுடைய வாழ்வில் மேலும் மேலும் உயர்ந்து நல்ல நிலையை அடைவீர்கள் என்று சொல்லப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: பல வருடங்களாக பணிபுரிந்தும் பதவி உயர்வு கிடைக்கவில்லையே என்று வருத்தப்படுபவர்கள் கோமதி சக்கரத்தை வைத்து இந்த பரிகாரத்தை செய்தால் சம்பள உயர்வுடன் கூடிய உயர் பதவி கிடைக்கும்.

ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவில் உள்ள தடை நீக்கும் பரிகாரத்தில் உங்களுக்கு நம்பிக்கை இருப்பின் நீங்களும் இந்த பரிகாரத்தை தொடர்ந்து செய்து பலன் அடையலாம் என்ற தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -