தடைகளை உடைத்தெறியும் விநாயகர் வழிபாடு

pillaiyar
- Advertisement -

வாழ்க்கையில் ஒரு மனிதன் தினம் தினம் ஏதாவது ஒரு புது முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டுதான் இருக்கின்றான். ஒவ்வொரு மனிதனுக்கு ஒவ்வொரு வகையில் முயற்சிகள் இருக்கும். சில பேர் வேலை கிடைக்க முயற்சி செய்வார்கள். சில பேர் மேல்படிப்பு படிக்க முயற்சி செய்வார்கள். சில பேர் சொத்து வாங்க விற்க முயற்சி செய்வார்கள்.

சில பேர் திருமணத்திற்கு முயற்சி செய்வார்கள், சில பேர் குழந்தை வேண்டி கூட வரும் கேட்பார்கள். இப்படி முயற்சிகளை பட்டியலிட்டு அடக்கி விட முடியாது. முயற்சிகள் தினம் தினம் மாறிக்கொண்டே இருக்கும். அவரவருடைய தேவைக்கு ஏற்ப, முயற்சிகள் எல்லாம் வெற்றி காண வேண்டும். தடைகள் எதுவும் விஜி கொடுக்கக் கூடாது என்றால் விநாயகரை இப்படி வழிபாடு செய்யணும்.

- Advertisement -

நமக்கு ஜாதகத்தில் பிரச்சனை கொடுக்கும் ராகு கேது, சனிபகவானாலும் எந்த தடைகளும் வராமல் இருக்கும். காரிய தடை வலக பிள்ளையாரை எப்படி வழிபாடு செய்ய வேண்டும். வாங்க நேரத்தை கடத்தாமல் ஆன்மீகம் சார்ந்த இந்த வழிபாட்டு முறையை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோம்.

தடைகளை தகர்க்கும் விநாயகர் வழிபாடு

இந்த வழிபாட்டை திங்கட்கிழமை எமகண்ட நேரத்தில் தொடங்க வேண்டும். வீட்டிலேயே விநாயகரின் திருவுருவப்படத்திற்கு முன்பு இந்த விளக்கை ஏற்றலாம். மண் அகல் விளக்குகள் ஏழு எடுத்துக் கொள்ளுங்கள். வீட்டில் இருக்கும் விளக்குகளையே இதற்கு பயன்படுத்தலாம். அதை சுத்தமாக கழுவி விட்டு காயவைத்து சந்தன குங்குமம் போட்டு வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இதற்கு விளக்குத்திரி கொஞ்சம் பிரத்தியேகமாக தயார் செய்ய வேண்டும். பஞ்சு திரியில் வெட்டிவேரை திரித்து, திரி தயார் செய்து கொள்ளுங்கள். (வெட்டி வெரையும் பஞ்சி திரியும் ஒன்றாக உள்ளங்கைகளில் வைத்து சுருட்டி எடுத்தால் இந்த திரி கிடைக்கும்). தேங்காய் எண்ணெயை அந்த அகல் விளக்கில் ஊற்றி, நாம் தயார் செய்து வைத்திருக்கும் இந்த திரியை போட்டு விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, அந்த எமகண்ட நேரத்தில் விநாயகரை வணங்கினால் உங்கள் முயற்சிகளில் வரக்கூடிய தடங்கல்கள் உடையும்.

ரொம்ப நாள் இதை முயற்சி செய்கின்றேன் இந்த காரியம் எனக்கு வெற்றியே தரவில்லை. நிறைய சிக்கலில் நிற்கிறது. என்பவர்கள் இந்த பரிகாரத்தை தொடங்குங்கள். திங்கட்கிழமை தொடங்கிய இந்த வழிபாட்டை 7 நாள் தொடர்ந்து செய்ய வேண்டும். ஏழு நாளும் எமகண்ட நேரத்தில் விநாயகருக்கு விளக்கு போடுவது ரொம்ப ரொம்ப சிறப்பு வாய்ந்த பலனை கொடுக்கும்.

- Advertisement -

ஏழு நாட்களும் ஏழு மண் அகல் விளக்குகளில் நெய் ஊற்றி புதுசாக திரி போட்டு ஏற்ற வேண்டும். விநாயகரின் முன்பு அமர்ந்து மனம் உருகி இந்த விளக்கு எரியும்போது உங்கள் பிரார்த்தனையை வைத்தால் எவ்வளவு பெரிய தடை உங்கள் முயற்சியில் வந்தாலும் அது உடையும்.

சில பேருக்கு தலை போகக்கூடிய காரியம் என்று சொல்லுவார்கள். உயிர் போகக்கூடிய விஷயம் என்று சொல்லுவார்கள். அப்படிப்பட்ட பிரச்சனைகள் எல்லாம் இருந்தால் திங்கட்கிழமை எமகண்ட நேரத்தில் பிள்ளையார் கோவிலுக்கு போயிருங்க. பிள்ளையார் கோவிலுக்கு போய் இந்த விளக்கை ஏற்றி வழிபாடு செய்யுங்கள். ஒரு சிதறு தேங்காய் உடையுங்கள்.

இதையும் படிக்கலாமே: எந்த நட்சத்திரத்தில் எந்த வழிபாட்டை மேற்கொண்டால் என்ன பலன் கிடைக்கும்.

தீராத துன்பங்கள் துயரங்கள் எல்லாம் வரும்போது நமக்கு கை கொடுக்கக் கூடிய வழிபாடு இறைவழிபாடு மட்டும்தான். இறைவனை முழுமையாக நம்பி வழிபாடு செய்தாலே வரக்கூடிய தடைகள் எல்லாம் சுக்கு நூறாக உடைந்து விடும் என்ற தகவலுடன் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -