எந்த நட்சத்திரத்தில் எந்த வழிபாட்டை மேற்கொண்டால் என்ன பலன் கிடைக்கும்.

natchathira valipadu
- Advertisement -

27 நட்சத்திரங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு வகையான பலன்கள் இருக்கிறது. அந்த பலன்களுக்கு ஏற்றவாறு நாம் நடந்து கொண்டால் வாழ்க்கையில் வெற்றிகளை சந்திக்க முடியும். இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் எந்த நட்சத்திரத்தில் எந்த வழிபாட்டை மேற்கொண்டால் முழுமையான பலன் கிடைக்கும் என்று பார்ப்போம்.

இறைவழிபாடாக இருந்தாலும் பரிகாரமாக இருந்தாலும் அதற்குரிய நட்சத்திர நாளில் செய்யும் பொழுது பலன் இரட்டிப்பாக மாறும் என்பதை நாம் முதலில் உணர்ந்து தெரிந்து கொள்ள வேண்டும். அதனால்தான் அன்றைய காலத்தில் எந்த செயலை செய்வதாக இருந்தாலும் நட்சத்திர நாள் பார்த்து செய்ய வேண்டும் என்று கூறி இருக்கிறார்கள். அப்படி நட்சத்திர நாள் பார்த்து செய்யும் விஷயங்கள் கண்டிப்பான முறையில் வெற்றியடையும் என்று தான் கூறப்படுகிறது.

- Advertisement -

திருவோண நட்சத்திர நாளன்று மகாவிஷ்ணுவிற்கு துளசி மாலை சாற்றி துவரம் பருப்பு பாயாசம் நெய்வேத்தியம் செய்து அங்கு வரும் பக்தர்களுக்கு தானம் தருவதன் மூலம் நிலம் வாங்கும் யோகம் கிடைக்கும். திருவாதிரை நட்சத்திர நாளன்று சிவபெருமானை வழிபட்டு விட்டு மருத்துவம் பார்த்தால் விரைவிலேயே நோய் குணமாகும். ரோகிணி நட்சத்திர நாள் அன்று சிவபெருமானிற்கு விரதம் இருந்து வழிபட்டு வந்தால் வறுமை நீங்கும், சுபிக்ஷம் உண்டாகும்.

மிருகசீரிஷ நட்சத்திர நாளன்று முருகப் பெருமானை வழிபட்டு விட்டு உதவிகள் பெறுவதற்கு சென்றால் அந்த உதவிகள் எந்தவித தங்கு தடையும் இன்றி கிடைக்கும். மேலும் காரிய சித்தி உண்டாக்கும். ஸ்வாதி நட்சத்திர நாளன்று பணம், பொன், பொருள் போன்றவற்றை யாருக்கும் கொடுக்கக் கூடாது. மீறி கொடுத்தால் அந்த பொருட்கள் திரும்ப வராது. விசாக நட்சத்திர நாளன்று விரதம் இருந்து வள்ளி தெய்வானை ஸமேத முருக பெருமானை வழிபட்டு வந்தால் கணவன் மனைவியிடம் அன்பாக இருப்பார். மேலும் திருமணத்தை எதிர்நோக்கி இருக்கும் பெண்களுக்கு நல்ல கணவன் கிடைப்பார்.

- Advertisement -

தீராத நோய்கள் தீரவும், பரிகாரம் செய்யவும், ஒப்பந்தத்தில் ஈடுபடவும் கேட்டை நட்சத்திர நாளை பயன்படுத்தினால் வெற்றிகள் கிடைக்கும். எதிரிகளால் ஏற்படும் பிரச்சனைகள் தீரவும், எதிரிகள் விலகி ஓடவும் அவிட்ட நட்சத்திர நாளில் பரிகாரம் செய்தால் முழுமையான பலனை பெற முடியும். அரசியலில் ஈடுபடுபவர்கள் வெற்றி பெறுவதற்கும் அரசு சம்பந்தப்பட்ட பணிகளில் சேர்வதற்கும் அஸ்வினி நட்சத்திர நாள் அன்று திருவண்ணாமலை சென்று சிவபெருமானை வழிபட வேண்டும். இவ்வாறு தொடர்ந்து மூன்று அஸ்வினி தினங்களுக்கு சென்று வர அரசியல் அரசு தொடர்பான வெற்றிகள் கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே: எதிரிகள் விலகி ஓட பைரவர் வழிபாடு.

தினமும் தேதியை கிழிக்கும் பொழுது இன்று என்ன நட்சத்திரம் என்பதை கவனித்து அன்றைய நாளுக்குரிய செயலை செய்யும் பொழுது கண்டிப்பான முறையில் வெற்றிகள் கிடைக்கும்.

- Advertisement -