எடுத்த காரியத்தில் வெற்றி பெற படிக்க வேண்டிய திருப்புகழ்

murugan6
- Advertisement -

முதலில் நாம் ஏதாவது முயற்சியை எடுக்கின்றோம் என்றால், அந்த முயற்சிகளை பற்றிய விஷயங்களை நமக்குத் தெரிந்தவர்கள் எல்லோரிடத்திலும் பகிர்ந்து விடக்கூடாது. சில நல்ல விஷயங்களை தொடங்குவதற்கு முன்பு ஊர் முழுவதும் தம்பட்டம் அடித்து விட்டால், அந்த கண் திருஷ்டியே நம்முடைய வெற்றியை நம்மிடத்தில் இருந்து பறித்து விடும். சாதிக்கும் வரை வாயை திறக்க கூடாது. அதுதான் சாமர்த்தியமானவர்களின் திறமை.

எடுக்கும் முயற்சிகளில் உடனே வெற்றி அடைய வேண்டும், காரிய தடையில் இருந்து விடுபட செய்ய வேண்டிய ஆன்மீகம் சார்ந்த ஒரு வழிபாட்டை பற்றி தான் இன்று நாம் பார்க்கப் போகின்றோம். வெற்றிக் கடவுள் முருகனை நினைத்து, அருணகிரிநாதர் பாடிய திருப்புகழ் பாடல்கள் நிறைய இருக்கிறது. அது மொத்தத்தையும் படிப்பதற்கு நமக்கு நிச்சயம் நேரம் இருக்காது. ஆனால் காரியத்தடை நீங்கி உடனே வெற்றி அடைவதற்காக, திருப்புகழில் அருணகிரிநாதர் பாடிய ஒரு குறிப்பிட்ட பாடலை மட்டும் நாம் இந்த பதிவில் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

திருவண்ணாமலையில்,  அருணகிரிநாதர் முருகப்பெருமானை காண வேண்டி, இந்த பாடலை பாடினார். இந்த பாடலை அவர் பாடிய உடன் அவருக்கு வெற்றி கிடைத்தது. உடனடியாக முருகப்பெருமான் அருணகிரிநாதருக்கு காட்சி தந்ததாக திருப்புகழில் நமக்கு சொல்லப்பட்டுள்ளது. அதற்கு ஆதாரமாக திருவண்ணாமலை இன்றும் ஒரு ஆதாரம் இருக்கின்றது. திருவண்ணாமலையில் அருணகிரிநாதருக்கு, முருகப்பெருமான் ஒரு கம்பத்தில் காட்சி தந்ததாக நமக்கு சொல்லப்பட்டுள்ளது. அந்த இடம் திருவண்ணாமலையில் ‘கம்பத்து இளையனார் சன்னிதி’ என்று முருகன் கோவில் இன்றும் இருக்கின்றது.

சரி அந்த அற்புதம் வாய்ந்த பாடலை நாமும் தெரிந்து கொள்ள வேண்டும் அல்லவா. ஒரு பரீட்சைக்காக தயாராகிறீங்க. அந்த பரீட்சையில் நீங்கள் முதலிடத்தில் வெற்றி காண வேண்டும் என்று கனவு காண்கிறீர்கள். அது நிறைவேற வேண்டும் என்றால் பாடலை படிக்க தொடங்கவும். புது தொழில் ஆரம்பிக்க போறீங்க, அந்த தொழிலில் பெரிய லாபத்தை பெற்று வெற்றி காண வேண்டும்.

- Advertisement -

புதிய வேலைக்கு போக போறீங்க, புது வீடு கட்ட போறீங்க, அல்லது ஏதோ ஒரு புது வேலை தொடங்க போறீங்க, அதில் வெற்றி காண வேண்டும் எனும் பட்சத்தில் இந்த பாடலை படித்து வர நிச்சயம் உங்களுக்கு, நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். முயற்சி செய்வதற்கு 48 நாட்களுக்கு முன்பே இந்த பாடலை நீங்கள் படிக்க தொடங்கலாம் தவறு கிடையாது. புது முயற்சிகளை தொடங்கும் போது இந்த பாடல் வரிகளை படித்தாலும் தவறு கிடையாது. வெற்றியை தரக்கூடிய திருப்புகழ் பாடல் வரிகள் உங்களுக்காக இதோ.

வெற்றி தரும் திருப்புகழ் பாடல்

அதல சேட னாராட அகில மேரு மீதாட
அபின காளி தானாட அவளோடன்

- Advertisement -

றதிர வீசி வாதாடும் விடையி லேறு வாராட
அருகு பூத வேதாள மவையாட

மதுர வாணி தானாட மலரில் வேத னாராட
மருவு வானு ளோராட மதியாட

வனச மாமி யாராட நெடிய மாம னாராட
மயிலு மாடி நீயாடி வரவேணும்

இது தமிழ் தான். நமக்கு புரிந்த எளிய தமிழ் மொழியில் இல்லையே என்று வருத்தப்படாதீங்க. படிப்பதற்கு சிரமமாக இருக்கிறதே என்று யோசிக்காதிங்க. இந்த பாடல் வரிகளை யூடியூபில் டைப் செய்து விட்டால், இந்த பாடல் வரிகள், பாடலாகவே உங்களுக்கு கிடைத்துவிடும். அதை இரண்டு மூன்று முறை ஒலிக்க விட்டு, உங்கள் காதில் கேளுங்கள். தானாக இந்த பாடலை சுலபமாக படிக்க கற்றுக்கொள்வீர்கள்.

தினமும் காலையில் எழுந்து பூஜையறையில் இருக்கும் முருகனின் திருவுருவப்படத்திற்கு முன்பு ஒரு விளக்கு ஏற்றி வைத்துவிட்டு இந்த பாடலை படிக்கலாம். விளக்கு ஏற்ற எல்லாம் நேரம் இல்லை என்றால் இந்த பாடலை அப்படியே படியுங்கள். படிப்பதற்கு வாய்ப்பே இல்லை என்றால் ஒலிக்க விட்டு காதில் மட்டுமாவது கேளுங்கள்.

இதையும் படிக்கலாமே: கருப்பு கயிறு கட்டக் கூடாத ராசிகள்

உங்களால் மனப்பாடம் செய்ய முடியும் என்றால் மனப்பாடம் செய்து கொண்டு, செல்லும் இடத்தில் எல்லாம் இந்த பாடலை மனதிற்குள் ஒருமுறை சொல்லுங்கள். செல்லும் இடமெல்லாம் உங்களுக்கு பிறகு வெற்றி தான். முருகப்பெருமான் உங்க கூடவே வந்து விடுவார். வெற்றியின் கடவுள் முருகப்பெருமானை அப்படியே வசியம் செய்து உங்கள் கூடவே வைத்துக்கொள்ள இந்த பாடலும் உதவும் என்ற இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -