வீட்டில் இருக்கும் பிரச்சினைகளை வேரோடு அழிக்க, இந்த 1 வேரை கொண்டு வந்து வீட்டில் வைத்தால் போதும். பிறகு வீட்டில் நிம்மதி மட்டும் நிரந்தரமாக தங்கி இருக்கும்.

vettiver-vinayagar
- Advertisement -

சில வீடுகளில் பிரச்சனை பூதாகரமாக வெடித்துக் கொண்டே இருக்கும். குடும்பம் என்று இருந்தால் பிரச்சனைகள் ஏதோ ஒரு நாள் வருவது சகஜம். ஆனால் தினம் தினம் போராடி போராடி பிரச்சினையிலேயே வாழ்ந்து வந்தால் அது நிம்மதியான சந்தோஷத்தை கொடுக்காது இல்லையா. உங்களுடைய குடும்பத்திலும் இப்படி தினம் தினம் போராட்டமாக இருக்கிறதா பிரச்சனைகளை சுமக்க முடியாமல் கஷ்டப்படுகிறீர்களா. இதோ ஒரு ஆன்மீகம் சொல்லும் எளிய பரிகாரம் உங்களுக்காக. குலதெய்வத்தை நினைத்து இதை மட்டும் செய்தாலே நிம்மதி உங்களுடைய வீட்டில் நிரந்தரமாக தங்கும். பிரச்சனை பின் வாசல் வழியாக ஓடிப் போய்விடும்.

நிம்மதியை தரும் வெட்டிவேர் பரிகாரம்:
பிரச்சனைகளுக்கு எல்லாம் தீர்வை கொடுக்க, உங்களுக்கு வெற்றியை கொடுக்கக்கூடிய சக்தி இந்த வெட்டிவேருக்கு உண்டு. வெட்டிவேர் இருக்கும் இடம் நறுமணமாக இருக்கும். அசுத்தம் நிறைந்த இடத்தில், கெட்ட சக்திகள் நிறைந்த இடத்தில், எதிர்மறை ஆற்றல் நிறைந்த இடத்தில் தான் துர்நாற்றம் வீசும். முதலில் அந்த துர்நாற்றத்தை அடித்து விரட்டக்கூடிய சக்தி இந்த வெட்டிவேருக்கு உண்டு. இந்த வெட்டிவேரை வீட்டிற்குள் கொண்டு வந்த உடனேயே உங்களுடைய வீடு நறுமணமாக மாறிவிடும். பாசிட்டிவ் எனர்ஜி அங்கே பிறக்கும். பாதி பிரச்சனை முடிந்துவிடும்.

- Advertisement -

பூஜை அறையில் வெட்டிவேரால் செய்த விநாயகரை வைத்து தினம் தோறும் விளக்கு ஏற்றி அவரை வழிபாடு செய்து விட உங்களுக்கு தடைகள் தகர்க்கப்படும். வெற்றி மேல் வெற்றி குவியும். பிரச்சனைகளுக்கு இடமே இருக்காது. அதன் பிறகு வெட்டிவேர் மாலையாக கூட உங்களுக்கு கடையில் கிடைக்கிறது. அதை வாங்கி ஒன்றை நிலை வாசல் படியில் மாட்டி வைக்கலாம். பூஜை அறையில் உங்களுக்கு பிடித்த தெய்வம், குலதெய்வம், என்று எந்த தெய்வத்திற்காவது ஒரு தெய்வத்திற்கு வெட்டிவேர் மாலையை போட்டு வையுங்கள். இந்த வாசம் உங்களுடைய வீட்டில் நிறைவாக இருக்க எந்த ஒரு கெட்ட சக்தியும் கண் திருஷ்டியும் வீட்டில் தாங்காது. பிரச்சனைகளை கொண்டு வந்து உங்கள் தலையில் போடாது.

வரவேற்பரையில் ஒரு சின்ன கண்ணாடி டம்ளரில் நல்ல தண்ணீரை ஊற்றி, அதில் வெட்டிவேரை போட்டு வையுங்கள். இந்த நறுமணம் எப்போதும் உங்கள் மனதை லேசாக வைத்திருக்கும். வீட்டில் இருப்பவர்களுடைய முன்கோபத்தை குறைக்கும். நிம்மதியான தூக்கத்தையும் கொடுக்கும்.

- Advertisement -

வெட்டிவேரை வாங்கி ஒருமுறை சுத்தமாக கழுவி விட்டு, நீங்கள் குடிக்கின்ற தண்ணீரில் இரவே போட்டு வையுங்கள். மறுநாள் காலை முதல் அந்த வெட்டிவேர் போட்ட தண்ணீரை குடித்து வந்தால் உடல் எப்போதும் குளிர்ச்சியாக இருக்கும். அதிலும் இந்த வெயில் காலத்தில் வெட்டிவேர் போட்ட தண்ணீரை குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு அத்தனை நல்லது.

இதையும் படிக்கலாமே: அம்பாளுக்கு இந்த 7 பூவை உங்கள் கையால் வாங்கிக் கொடுங்கள். தீராத பண கஷ்டம் தீரும். தீராத கடன் பிரச்சனை தீரும். ஏதாவது ஒரு ரூபத்தில் வருமானம் உங்களுக்கு பெருகிக்கொண்டே செல்லும்.

எங்கேயாவது முக்கியமான காரியத்திற்கு வெளியே போறீங்க. ஒரு சின்ன துண்டு வெட்டிவேரை எடுத்து பாக்கெட்டிலோ பர்ஸிலோ வைத்துக்கொண்டு செல்லுங்கள். இந்த வெட்டிவேரில் இருந்து வரக்கூடிய நல்ல நறுமணம் உங்களை சூழ்ந்து இருக்கும். உங்களை சுற்றி ஒரு பாசிட்டிவ் எனர்ஜி இருக்கும். அதுவே உங்களுக்கு செல்லும் காரியத்தில் வெற்றியை தேடி தரும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி வெட்டிவேரில் பல நல்ல விஷயங்கள் அடங்கியிருக்கிறது. உங்களுக்கு எது தேவையோ மேல் சொன்ன விஷயங்களில் அதைப் பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -