இவரது பெயரை தினமும் உச்சரித்து வந்தாலே போதும். எதிரி பிரச்சனை, கடன் பிரச்சனை, பணப் பிரச்சனை இருக்காது. நிம்மதியான வாழ்க்கையை வாழ முடியும்.

karthaveeryarjuna
- Advertisement -

வாழ்க்கையில் நமக்கு எதிரிகள் உண்டாவதற்கு முதல் காரணம் இந்த பணம் தான். பணம் இருப்பவர்களுக்கும் பிரச்சனை. பணம் இல்லாதவர்களுக்கும் பிரச்சனை. கடன் வாங்கியவர்களுக்கும் பிரச்சனை. கடன் கொடுத்தவர்களும் பிரச்சனை. சிலபேருக்கு சொத்து பிரச்சனை. என்ன தான் செய்வது. பணம் என்று சொன்னாலே அது பிரச்சனையில் தான் போய் முடியும். உங்களுக்கு வாழ்க்கையில் எதிரிகளால் பிரச்சனைகள் இருந்தால், அந்த பிரச்சனையை சரிசெய்ய இந்த பரிகாரம் கைகொடுக்கும். பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனையால் எதிரிகள் இருந்தால் அதற்கும் ஒரு தீர்வை கொடுப்பதற்கு இந்த பரிகாரம் நமக்கு உதவியாக இருக்கும். ஆகமொத்தத்தில் எதிர்ப்புகள் அகல நிம்மதியான வாழ்க்கையை பெற, நிறைய பேருக்கு தெரியாத சக்திவாய்ந்த ஒரு பரிகாரத்தை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

கார்த்தவீர்யார்ஜுனன், இவரைப்பற்றி பெரும்பாலும் நாம் கேள்விப்பட்டிருக்க மாட்டோம். கார்த்தவீர்யார்ஜுனன் சிவபெருமானால் படைக்கப்பட்டவர் என்றும் சில கருத்துக்கள் உள்ளது. இல்லை, கார்த்தவீர்யார்ஜுனன் பெருமாளின் அம்சம் என்ற சில வரலாற்று கருத்துக்களும் சொல்லப்பட்டுள்ளது. வரலாற்றில் இவருக்கு பலவிதமான கதைகள் உண்டு. துஷ்ட சக்திகளையும் எதிரிகளையும் அழிக்கும் வல்லமை கொண்ட இவரை சுலபமான முறையில் எப்படி வழிபாடு செய்வது என்பதைப் பற்றி மட்டும் இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

இந்த கார்த்தவீர்யார்ஜுனன் ஆலமரத்தில் வாசம் செய்வதாக ஒரு ஐதீகம். உங்களுக்கு இருக்கக்கூடிய எதிரியால் உண்டாக்கப்படும் அத்தனை பிரச்சினைக்கும் தீர்வு கிடைக்க வேண்டுமென்றால், தினமும் ஆலமரத்தடியில் ஒரு மண் அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி, திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். கார்த்தவீர்யார்ஜுனரை மனதார நினைத்து கஷ்டங்கள் தீர வேண்டும் என்று தொடர்ந்து நாற்பத்தி எட்டு நாட்கள் இப்படி பிரார்த்தனை செய்து கொண்டாலே போதும். உங்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சினைகள் படிப்படியாக குறையும். பண கஷ்டம் தீரும். எதிரிகளால் பிரச்சனை இருக்காது. எதிரிகளும் நண்பர்களாக மாறிவிடுவார்கள்.

எங்களுடைய வீட்டின் அருகில் ஆலமரம் இல்லை என்று சொல்பவர்களுக்கும் ஒரு மாற்ற வழிபாடு உண்டு. வீட்டிலேயே இந்த தீபத்தை ஏற்றலாம். வீட்டில் ஒரு மண் அகல் விளக்கில் நல்லெண்ணை ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்றி வைத்து விட்டு, அந்த தீபத்தின் முன் அமர்ந்து கார்த்தவீர்யார்ஜுனன் மனதார நினைத்து வேண்டிக்கொண்டு

- Advertisement -

‘ஓம் சுமந்தோ சுமந்தோ
ஸ்ரீ கார்த்தவீர்யார்ஜுனாய நமஹ’

என்ற மந்திரத்தை இருபத்தி ஏழு முறை உச்சரிக்க வேண்டும். தொடர்ந்து இந்த தீபத்தையும் உங்களுடைய வீட்டில் நாற்பத்தி எட்டு நாட்கள் ஏற்றி வாருங்கள். உங்களுக்கு இருக்கக்கூடிய ஏதாவது ஒரு பிரச்சனை சரியாக வேண்டும் என்று வேண்டிக்கொண்டு நாற்பத்தி எட்டு நாட்கள் இவரை வழிபாடு செய்து வரும் பட்சத்தில், அதாவது ஒரே கோரிக்கையை நாற்பத்தி எட்டு நாட்களும் வைத்து வழிபாட்டை நிறைவு செய்ய வேண்டும். அப்போது அந்த கஷ்டத்திற்கு நிச்சயமாக ஒரு தீர்வு கிடைக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.

பரிகாரத்தை செய்து விட்டு உடனடியாக பலன் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்காமல், இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் நிச்சயமாக நமக்கு நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கையோடு தீபத்தை ஏற்றி வர வேண்டும். சில சமயம் நம்முடைய மனது சஞ்சலத்தில் மூழ்கிவிடும். இந்த தீபத்தை ஏற்றினால், நமக்கு பிரச்சனைகள் தீர்ந்து விடுமா? என்ற கேள்வியை உள் மனசு எழுப்பும். இப்படி எதிர்மறையான எண்ணங்கள் தோன்றுவதற்கும் நம்முடைய கெட்ட நேரம் ஒரு காரணமாக இருக்கலாம். அதாவது நமக்கு இருக்கக்கூடிய கெட்ட நேரம் நமக்கு நல்லது செய்யக்கூடிய பரிகாரத்தை செய்ய விடாமல் தடுக்கும். எல்லா பிரச்சனைகளையும் ஒதுக்கிவைத்துவிட்டு மனதை ஒருநிலைப்படுத்தி எந்த வழிபாடாக இருந்தாலும் சரி, அதை தொடர்ந்து செய்து வர நிச்சயமாக நமக்கு நல்ல பலன் கிடைக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -