கார்த்திகை பௌர்ணமி அன்று வாங்க வேண்டிய பொருட்கள்

amman8
- Advertisement -

பொதுவாகவே பௌர்ணமி அன்று நாம் ஏதாவது ஒரு மங்களகரமான பொருட்களை வாங்கினாலோ, ஒரு நல்ல விஷயத்தை தொடங்கினாலோ அது நமக்கு பல மடங்கு நல்ல பலனைத் தரும். அதிலும் இன்று கார்த்திகை மாதம் வந்திருக்கக்கூடிய பௌர்ணமி தினம். இன்றைய நாள் கார்த்திகை தீபத்தின் இரண்டாவது நாள். மனநிறைவோடு வீடு முழுவதும் இன்றும் விளக்கு ஏற்றி வழிபாட்டை நாம் மேற்கொள்வோம்.

இன்றைய தினத்தில் பூஜை அறையில் வைக்க வேண்டிய ஒரு சில பொருட்களை பற்றியும், அந்த பொருட்களுக்கு உண்டான பலனை பற்றியும் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த 6 பொருட்களில் உங்களுக்கு எந்த பொருள் தேவைப்படுகிறதோ உங்கள் கஷ்டத்திற்கு எந்த பொருள் விடிவுகாலம் கொடுக்குமோ, அதை வாங்கி வைத்து வழிபாடு செய்து பாருங்கள். நிச்சயம் உங்களுடைய அந்த கஷ்டம் தீரும். வாங்க அது என்னென்ன பொருட்கள் என்பதை ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

கார்த்திகை பௌர்ணமி நாளில் வாங்க வேண்டிய பொருட்கள்

முதலாவதாக சொல்லப்பட்டுள்ள பொருள். செவ்வாழை பழம். லட்சுமி கடாட்சம் நிறைந்த பொருளாக சொல்லப்பட்டுள்ளது. இந்த வாழைப்பழத்தை வாங்கி பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்தால் உங்கள் வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகும். குறைந்தபட்சம் இரண்டு செவ்வாழைகளை வாங்கி வைத்தாலும் போதும். பூஜை முடித்து இந்த வாழைப்பழத்தை வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் சாப்பிடலாம்.

இரண்டாவதாக சொல்லப்பட்டுள்ள பொருள் சோம்பு அல்லது சீரகம் இரண்டுமே தாந்த்ரீகத்தில் பணத்தை வசியம் செய்யக்கூடிய பொருட்களாக சொல்லப்பட்டுள்ளது. கடன் சுமை அதிகம் உள்ளவர்கள், வருமானம் இல்லாதவர்கள் இந்த பொருளை வாங்கி பூஜையறையில் வைத்து வழிபாடு செய்து விட்டு இதைக் கொண்டு போய் அப்படியே சமையலறையில் அஞ்சறைப் பெட்டியில் கொட்டி சமையலுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

- Advertisement -

அடுத்ததாக சொல்லப்பட்டுள்ள பொருள் வரமல்லி. தனியா, இது வசீகரத்தை கொடுக்கக் கூடியது. சில பேருக்கு எங்கு சென்றாலும் மரியாதை இருக்காது. முகம் தேஜஸ் இருக்காது. அதாவது முகத்தில் ஒரு கலை இருக்காது. கலை இழந்து காணப்படுவார்கள். இப்படிப்பட்டவர்கள் இந்த தனியாவை வாங்கி பூஜையறையில் வைத்து வழிபாடு செய்து விட்டு இந்த தனியாவை சமையல் அறையில் கொண்டு போய் வைத்து சமையலுக்கு பயன்படுத்தலாம். தவறு கிடையாது. முடிந்தால் இந்த பூஜை செய்த தனிவை, தண்ணீரில் போட்டு ஊற வைத்து அந்த தண்ணீரில் முகம் கழுவி வந்தால் முகத்தை பிடித்த பீடை நீங்கும் முகம் லட்சுமி கடாட்சம் பெறும். நீங்க எல்லோருக்கும் பிடித்த வசீகரமானவர்களாக மாறிவிடுவீர்கள்.

நான்காவதாக சொல்லப்பட்டிருக்கும் பொருள் வெந்தயம். நிறைய பேருக்கு வீடு சம்பந்தப்பட்ட பிரச்சனை, நிலம் சம்பந்தப்பட்ட பிரச்சனை இருக்கும். உங்களுக்கு இப்படி எந்த பிரச்சனை இருந்தாலும் சரி, நீங்கள் இருக்கின்ற வீடு சரியில்லை புது வீடு வாடகை வீடு கிடைக்க வேண்டும் என்றாலும் கூட இந்த வழிபாட்டை நீங்கள் மேற்கொள்ளலாம். பத்து ரூபாய்க்கு வெந்தயம் வாங்கி பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்து விட்டு அதை சமையலுக்கு பயன்படுத்துங்க. இந்த வெந்தயத்தை ஒரு மஞ்சள் துணியில் வைத்து கட்டி பணம் வைக்கும் இடத்தில் வைத்தால் பணம் சேரும்.

- Advertisement -

அடுத்ததாக சொல்லப்பட்டிருக்கும் பொருள். எல்லோருக்கும் பூஜைக்கு பயன்படுத்தக்கூடிய பொருள் தான் வெற்றிலை பாக்கு. இது மகாலட்சுமியின் அம்சம் பொருந்தியது. அனுமனுக்கு ரொம்ப ரொம்ப உகந்தது. வெற்றியை தரக்கூடிய வெற்றிலை பாக்கை வாங்கி பூஜையறையில் வைத்து இன்று கட்டாயம் வழிபாடு செய்வது நேர்மறை ஆற்றலை கொடுக்கும்.

அடுத்தது வாசம் நிறைந்த பூ. அதிலும் குறிப்பாக சிவப்பு நிற செம்பருத்தி பூ, சிவப்பு நிற அரளி பூ வாங்கி பூஜையறையில் இருக்கும் முருகன் படத்திற்கு போட்டு வழிபாடு செய்வது ரொம்ப ரொம்ப சிறப்பு. அதேபோல அம்பாளுக்கும் இந்த சிவப்பு நிற பூக்களை போட்டு வேண்டிய வரங்களை கேட்டால் உடனே கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே: பண தடையே இல்லாமல் வீட்டில் செல்வம் கொழிக்க கொஞ்சம் ஏலக்காய் இருந்தால் போதும்.

அதிலும் இந்த பௌர்ணமி நாளில் இந்த வழிபாட்டை மேற்கொள்ளும் போது உங்களுக்கு இரட்டிப்பு பலன் தரும். மேலே கொடுக்கப்பட்டுள்ள ஆறு பொருட்கள் உங்களுக்கு எது தேவையோ அதை வாங்கி வைத்து வழிபாடு செய்வது சிறப்பு. 6 பொருட்களையும் உங்களால் வாங்கி வைக்க முடியும் என்றால் ஆறு பொருட்களையும் வாங்கி வைத்து வழிபாடு செய்யுங்கள். நிச்சயம் நல்லது நடக்கும் என்ற தகவலுடன் இன்றைய ஆன்மிகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -