பண தடையே இல்லாமல் வீட்டில் செல்வம் கொழிக்க கொஞ்சம் ஏலக்காய் இருந்தால் போதும்.

elakkai cash
- Advertisement -

உலகில் படைக்கப்பட்ட ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு தன்மை உண்டு. அந்த வகையில் சில பொருட்களுக்கு பணத்தை தீர்க்கும் தன்மையுடன் தெய்வங்களுக்கு உகந்த பொருளாகவும் பார்க்க படுகிறது. அப்படியான பொருள்களில் நம் சமையலுக்கும் பயன்படுத்தும் பொருள்களில் ஒன்றான ஏலக்காய். இதை எப்படி பயன்படுத்தி நம் பணத்தடையை நீக்கலாம் என்று ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் இப்போது நாம் தெரிந்து கொள்ளலாம்.

ஏலக்காய்க்கு பணத்தை ஈர்க்கும் தன்மை அதிகம் உண்டு. இந்த ஏலக்காயை நாம் சில முறைகளில் பயன்படுத்தும் போது நம் வீட்டில் பணத்தடை அறவே நீங்கி வீட்டில் செல்வம் பெருகுவதுடன் தங்கத்தை வாங்கக் கூடிய யோகத்தையும் சேர்த்துக் கொடுக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதைப் பற்றி இப்பொழுது தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

பணத்தடை நீக்கும் ஏலக்காய்

இந்த பரிகாரம் செய்ய கொஞ்சம் நல்ல தரமான ஏலக்காயை பார்த்து வாங்கிக் கொள்ளுங்கள். இதை மாலையாக தொடுத்து கொள்ளுங்கள். இதை குபேரர் மகாலட்சுமி தாயார் பெருமாள் இவர்களில் யாருடைய ஆலயம் உங்கள் வீட்டில் அருகில் இருக்கிறதோ அங்கு கொடுத்து அவர்களுக்கு அனுவித்து பூஜை செய்து அதை வாங்கிக் கொள்ளுங்கள்.

இப்படி கொண்டு வந்த இந்த ஏலக்காவை நீங்கள் பணம் வைக்கும் பீரோ, தொழில் செய்பவராக இருந்தால் கல்லாப்பெட்டி, மணி பர்ஸ் போன்றவற்றில் போட்டு வைத்துக் கொள்ளலாம். அல்லது உங்கள் வீட்டில் பூஜை அறையில் இந்த மாலையை அப்படியே மாற்றி வைத்து விட்டால் வீட்டில் பணத்தடை நீங்குவதுடன் தெய்வ ஆகர்சனமும் அதிகரிக்கும். இந்த ஏலக்காய் இருக்கும் இடத்தில் பணம் இல்லை என்ற வார்த்தையே இல்லை.

- Advertisement -

அதுமட்டுமின்றி இந்த ஏலக்காயை நகை பெட்டியில் போட்டு விட்டால் நகை சேர்வதற்கான வாய்ப்பு பெருகும். நகை அடமானத்திற்கும் செல்லாமல் இருக்கும். ஏலக்காய்க்கு நல்ல ஒரு தெய்வீக ஆற்றலும் பணத்தை ஈர்க்கக் கூடிய ஆகர்சன சக்தியும் உண்டு. அதுமட்டுமின்றி இது பெருமாள் குபேரர், லட்சுமி, தாயார் அனைவருக்கும் உரிய பொருளாக பார்க்கப்படுகிறது. இது இருக்கும் இடத்தில் பணம் நிறைவாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே: இந்த அக்டோபர் மாதத்தில் சுக்கிர பெயர்ச்சியால் சுக்கிர திசை அடிக்க போகும் 3 அதிஷ்ட ராசிகள்.

இந்த ஏலக்காய் இப்படி பயன்படுத்துவதால் மட்டும் பண வரவு அதிகரிக்கும். உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைப்பதுடன், வருமானத்தை பெருக்கிக் கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். அதே நேரத்தில் வீண் விரயங்கள் வராமல் பணம் எப்போதும் உங்கள் கையில் இருக்கும். இந்த பரிகார முறையில் நம்பிக்கை இருப்பின் செய்து பலன் அடையலாம்.

- Advertisement -