கடன் கரைய சங்கடஹர சதுர்த்தி அன்று செய்ய வேண்டிய வழிபாடு

pillaiyar2
- Advertisement -

சங்கடங்கள் தீர இந்த சங்கடஹர சதுர்த்தி வழிபாடு நமக்கு கை கொடுக்கும். வினைகளை நீக்கும் நாயகன், விநாயகன் என்று சொல்லப்பட்டுள்ளது. உங்களுக்கு நிறைய கடன் சுமை உள்ளதா. குடும்பத்தில் தீர்க்க முடியாத வேறு ஏதாவது கஷ்டம் உள்ளதா. பண பிரச்சினை உள்ளதா. விநாயகரை வேண்டி உங்களுக்கு இருக்கும் அந்த கஷ்டம் தீர வேண்டும் என்று பிரார்த்தனை வைத்தால், உங்களுடைய சங்கடங்கள் தீரும் என்பது நம்பிக்கை.

அதிலும் இந்த கார்த்திகை மாதத்தில் வந்திருக்கும் சிறப்பு வாய்ந்த இந்த சங்கடஹர சதுர்த்தி அன்று செல்வவலம் பெருக, கடன் சுமை குறைய வீட்டில் விநாயகரை நினைத்து எப்படி வழிபாடு செய்வது. ஆன்மீகம் சார்ந்த பரிகாரம் உங்களுக்காக இந்த பதிவில்.

- Advertisement -

கடன் சுமை குறைய சங்கடஹர சதுர்த்தி விநாயகர் வழிபாடு

நாளை காலை சூரிய உதயத்திற்கு முன்பாகவே எழுந்து சுத்தமத்தமாக குளித்துவிட்டு, விரத இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் பூஜையறையில் விளக்கு ஏற்றி விநாயகரை நினைத்து விரதத்தை தொடங்குங்கள். சங்கடஹர சதுர்த்தி வழிபாடு என்றாலே மாலை நேரம்தான் சிறப்பு. விரதம் இருக்க முடியவில்லை என்பவர்களும் இந்த வழிபாட்டை செய்யலாம் தவறு கிடையாது.

மாலை 6 மணிக்கு மேல் ஒரு பித்தளை தாம்பூல தட்டு எடுத்துக்கோங்க. அதில் மாவிலைகளை வைக்க வேண்டும். மாவிலை செல்வ கடாட்சத்தை கொடுப்பது. விநாயகருக்கு உகந்தது. மகாலட்சுமிக்கு உகந்தது. மா இலைகளுக்கு மேலே ஒரு மண் அகல் விளக்கை வைத்து, கட்டாயம் நெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு, விளக்கு ஏற்றுங்கள். (ஒரு மயிலை, மூன்று மாயிலை, ஐந்து மாயிலை இந்த கணக்கில் வையுங்கள்).

- Advertisement -

இந்த விளக்குக்கு பக்கத்தில் வெள்ளருக்கன் பூ கிடைத்தால் வைக்கலாம். இல்லையென்றால் உங்களுக்கு கிடைத்த பூவை வைத்துவிட்டு இந்த விளக்கை அப்படியே பூஜை அறையில் விநாயகர் படத்திற்கு முன்பு அல்லது சிலைக்கு முன்பு வைத்து, விளக்குக்கு முன்பு அமர்ந்து விக்னங்களை தீர்க்கும் விநாயகா என் கடன் கஷ்டத்தை குறைக்க வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்து கொண்டால், கடன் சுமை குறையும்.

வருமானம் அதிகரிக்க வேண்டும். நல்ல வேலை கிடைக்க வேண்டும். வீட்டில் சுப காரியத்தடை விலக வேண்டும். பிள்ளைகள் நன்றாக படிக்க வேண்டும். குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும். என்று என்ன வரத்தை வேண்டும் என்றாலும் நீங்கள் கேட்கலாம். நாளைய தினம் நீங்கள் கேட்ட வரத்தை உங்களுக்கு கொடுக்கக்கூடிய சக்தி இந்த வழிபாட்டுக்கு உண்டு.

- Advertisement -

உங்களுடைய சங்கடங்களை தீர்க்கக்கூடிய சக்தி இந்த வழிபாட்டிற்கு உண்டு. மாலை இந்த விளக்கை வீட்டில் ஏற்றிவிட்டு சிறிது நேரம் கழித்து, உங்கள் வீட்டு பக்கத்தில் இருக்கும் விநாயகர் கோவிலுக்கு சென்று விநாயகரை வழிபாடு செய்து கொள்ளுங்கள். உங்கள் கையில் ஒரு தேங்காயை வைத்துக் கொள்ளுங்கள். மூன்று முறை விநாயகரை வலம் வர வேண்டும்.

கையில் இருக்கும் தேங்காயை விநாயகர் கோவிலில் சிதறு தேங்காய் உடையுங்கள். சங்கடங்கள் தீர வேண்டும் என்று நம்பிக்கையுடன் மனம் உருகி பிரார்த்தனை செய்யணும். உங்களுடைய சங்கடங்கள் எல்லாம் அந்த தேங்காய் சுக்கு நூறாய் உடைவது போல உடைந்து போகும். இதுதான் இந்த வழிபாட்டில் இருக்கக்கூடிய நம்பிக்கை. இது நாம் எல்லோரும் அறிந்தது தான்.

இதையும் படிக்கலாமே: தங்கம் சேர மல்லிகை பரிகாரம்

இருந்தாலும் நினைவு கூற வேண்டியது அவசியம். சங்கடங்கள் வரும்போது என்ன வழிபாடு செய்வது என்று திணறிக் கொண்டிருப்பவர்களுக்கு இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவு உதவியாக இருக்கும்.

- Advertisement -