வெள்ளிக்கிழமையில் மகாலட்சுமி தாயாரை நினைத்து இந்த சக்தி பூஜை செய்தால் ஆண்டியும் அரசனாகும் யோகத்தை பெறலாம்.

mahalakshmi-devi
- Advertisement -

வெள்ளிக்கிழமை என்றால் மங்களகரமானது மட்டுமின்றி அது மகாலட்சுமி தாயாருக்கும் உகந்த நாள். அந்த நாளில் தாயாரை நினைத்து செய்யும் சிறு வழிபாடு கூட நம்முடைய வாழ்க்கையை பெருமளவு மாற்றி அமைக்கும். அப்படியான தாயாரை இந்த முறையில் சக்தி தேவியாக பாவித்து நாம் பூஜைக்கும் போது நம்முடைய செல்வ நிலை உயரும். ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் சக்தி பூஜையைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

செல்வம் பெருக வெள்ளிக்கிழமை செய்ய வேண்டிய சக்தி பூஜை
வெள்ளிக்கிழமைகளில் நாம் மகாலட்சுமி தாயாரை தொடர்ந்து வழிபடும் போது நம்முடைய வீட்டில் ஐஸ்வர்யங்கள் பெருகும். அந்தத் தாயாரை சக்தி தேவியாக பாவித்து நாம் செய்யக் கூடிய இந்த பூஜையானது நம்முடைய தரித்திர நிலையை மாற்றி செல்வ செழிப்பான வாழ்க்கை வாழ வழிவகுக்கும்.

- Advertisement -

இந்த பூஜையை வெள்ளிக்கிழமை காலை வேளையில் செய்வது மிகவும் சிறப்பு. இந்த பூஜை செய்ய ஒரு பெரிய தாம்பால தட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அதன் மேல் ஒரு வெள்ளை நிறத் தாளில் முக்கோணத்தை வரைந்து அதன் உள்ளே ஓம் சக்தி என்ற வார்த்தையை எழுதி அந்த தாளை தாம்பாள தட்டில் வைத்துக் கொள்ளுங்கள்.

அடுத்து அந்த பேப்பரில் தாமரை மலரை வைக்க வேண்டும். வெண் தாமரை அல்லது செந்தாமரை எதுவா இருந்தாலும் வைக்கலாம் இரண்டும் கிடைத்தாலும் வைக்கலாம். இத்துடன் ஒரு பவுலில் மல்லிகை, மலரை பூவை போட்டுக் கொள்ளுங்கள். அதே போல் பன்னீர் ரோஜாக்களை உதிர்த்து போட்டுக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பூஜை அறையில் மகாலட்சுமி தாயாருக்கு முன்பாக தீபத்தை ஏற்றிய பிறகு இந்த தாம்பாள தட்டை பூஜை அறையில் வைத்து இந்த தட்டிற்கு முன்பாக நீங்கள் அமர்ந்து உங்கள் கையில் இருந்து பூக்களை கொஞ்சமாக எடுத்து பேப்பரின் மீது இருக்கும் தாமரை மீது ஓம் சக்தி என்ற மந்திரத்தை சொல்லி போடுங்கள். ஒவ்வொரு முறை போடும் போதும் உங்களுடைய சங்கல்பத்தை மனதார நினைத்து வேண்டிக் கொள்ளுங்கள்.

இந்த மலர் அர்ச்சனையை முடிக்கும் போது கடைசியாக தாழம்பூ குங்குமத்தை எடுத்துக் அதிலிருந்து கொஞ்சம் குங்குமத்தை எடுத்து ஏற்கனவே போட்ட மலர்களின் மீது ஓம் என்ற மந்திரத்தை 11 முறை சொல்லி போட்டு பூஜையை முடித்து விடுங்கள். இந்த பூஜை முடிந்த பிறகு தாம்பாளத் தட்டில் உள்ள அனைத்தையும் வெள்ளை நிற துணியில் மூட்டையாக கட்டி பூஜை அறையில் மூன்று நாட்கள் வரை அப்படியே வைத்து விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: கெட்ட நேரத்தைக் கூட நல்ல நேரமாக மாற்றி கிரக கோளாறு நீங்கி வாழ்க்கையில் ஜெயிக்க எளிய பரிகாரங்கள்

மூன்றாவது நாள் இதைக் கொண்டு ஓடும் நீரில் அல்லது கால் படாத இடத்தில் போட்டு விடுங்கள். உங்கள் வாழ்க்கையில் நீங்கள் நினைத்துப் பார்க்காத பல நல்ல விஷயங்கள் நடப்பதை உணர்வீர்கள். மகாலட்சுமி தாயாரை நினைத்து இந்த சக்தி பூஜையை செய்து வந்தால் நிச்சயம் உங்கள் வாழ்க்கை செல்வ நிலை அடையும் . நம்பிக்கையுடன் செய்து பலன் அடையுங்கள்.

- Advertisement -