கருவேப்பிலை இலைகள் பச்சை பசேலென செழுமையாக இல்லையா? பசுமையான கொத்துக்கொத்தாக கருவேப்பிலை வேணுமா? அப்படின்னா இத செஞ்சிப் பாருங்க!

karuvepillai-uram
- Advertisement -

அன்றாட உணவில் அதிக அளவு பயன்படுத்தப்படும் இந்த கருவேப்பிலை சில சமயங்களில் கடைக்கு போய் வாங்கி வருவதற்கு சோம்பலாக இருக்கும். கறிவேப்பிலை சீசன்களில் மட்டுமல்லாமல் ஆண்டு முழுவதும் உங்களுக்கு இலவசமாக கிடைக்க வீட்டிலேயே அதை நட்டு வைப்பது நல்லது. கருவேப்பிலையில் இருக்கும் எண்ணற்ற சத்துக்கள் நம் உடல் ஆரோக்கியத்தை கட்டுக்கோப்பாக வைத்திருக்க உதவுகிறது. உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை நன்மைகளை கொடுக்கக் கூடிய இந்த கறிவேப்பிலைச் செடி செழுமையாக பச்சை பசேலென வளர்வதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? எந்த உரத்தை கொடுப்பது ஆரோக்கியமானது? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளவிருக்கிறோம்.

கருவேப்பிலைச் செடியை பராமரிப்பு இன்றி நீங்கள் விட்டுவிட்டால், அதன் இலைகளில் நோய் தாக்குதல் ஏற்பட்டு விடும். இதனால் இலைகள் பச்சை பசேலென செழுமையாக இல்லாமல், அதில் பூச்சி அரிப்பது போன்றவையும், வெண்புள்ளிகள் கரும்புள்ளிகள் போன்றவையும் தோன்ற ஆரம்பித்து விடும். புள்ளிகள் இல்லாத, பூச்சி அரிக்காத செழுமையான இலைகளை பெறுவதற்கு பொட்டாசியம், பாஸ்பரஸ், நைட்ரஜன் ஆகிய சத்துக்கள் சரிவிகிதத்தில் கொடுக்கப்பட வேண்டும்.

- Advertisement -

இந்த சத்துக்கள் நிறைந்த உரத்தை தேர்ந்தெடுத்து போடுவது கறிவேப்பிலை இலைகளை பச்சை பசேலென புதிதாக துளிர்க்கச் செய்யும். தேவைப்படாத கிளைகளை வெட்டி விட்டு பின்னர் உங்கள் மண் கலவையை நன்கு கிளறி விட்டுக் கொள்ளுங்கள். செடியை தாங்கும் மண் கலவை தளர்வாக இருக்க வேண்டும். பின்னர் 100 கிராம் அளவிற்கு எள்ளுப் புண்ணாக்கு எடுத்துக் கொள்ளுங்கள். இது நாட்டு மருந்து கடை அல்லது உர கடைகளில் மலிவாக கிடைக்கும்.

100 கிராம் அளவிற்கு எள்ளு புண்ணாக்கு உதிர்த்து நீங்கள் அரிசி களைந்த கஞ்சியுடன் சேர்க்க வேண்டும். அரிசியை ஒரு முறை கழுவி விட்டு, இரண்டாம் முறை தண்ணீர் ஊற்றும் பொழுது அந்த தண்ணீரை தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்த தண்ணீருடன் நீங்கள் 100 கிராம் அளவிற்கு எள்ளு புண்ணாக்கு உதிர்த்துச் சேர்த்துக் கொள்ளுங்கள். மூன்று நாட்கள் அப்படியே ஊற விட்டு விட வேண்டும். இதனால் அதில் சத்துள்ள நுண்ணுயிர் பெருக்கம் அதிகரிக்கும்.

- Advertisement -

15 லிட்டர் தண்ணீருடன் இந்த உரத்தை நீங்கள் கலந்து கொள்ளுங்கள். பின்னர் நீங்கள் உங்களுடைய கருவேப்பிலைச் செடிக்குப் தொடர்ந்து மூன்று நாட்கள், மூன்று வேளை என்கிற விகிதத்தில் இந்த உரத்தை ஊற்றி வந்தால் கொஞ்ச நாட்களிலேயே உங்கள் கருவேப்பிலை செடி ரொம்பவே ஆரோக்கியமான துளிர்களை விட ஆரம்பிக்கும். அதன் பிறகு அது வளர்ந்து பச்சைப் பசேலென பசுமையான இலைகளை தான் உங்களுக்கு கொடுக்கும்.

எள்ளு புண்ணாக்கில் இருக்கும் பாஸ்பரஸ், நைட்ரஜன் மற்றும் பொட்டாசியம் ஆகிய சத்துக்கள் கறிவேப்பிலையின் இயற்கையான வளர்ச்சிக்கு உறுதுணையாக விளங்குகிறது. அது வளர்ந்த பின்பு அதன் பயன்பாடு நமக்கு நம் உடலை பேணி பாதுகாப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது. கறிவேப்பிலையை தினமும் அன்றாட உணவில் ஏதாவது ஒரு முறையில் முழுமையான சத்துக்கள் கிடைக்கும் வகையில் அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். கண்பார்வை, தலைமுடி பிரச்சனை போன்ற அனைத்தையும் நீக்கும் வல்லமை இதற்கு உண்டு எனவே கறிவேப்பிலை தானே என்று அலட்சியப்படுத்தாமல் அதையும் பேணி பாதுகாத்து வளர்த்து வந்தால் எண்ணற்ற பயன்களை நாமும் பெறலாம்.

- Advertisement -