தரித்திரம் பீடை நீங்க தூபம் போடும் முறை

lakshi samburani
- Advertisement -

நம்முடைய வழிபாட்டு முறைகளில் எப்படி விளக்கு ஏற்றுவது நம் முன்னோர்கள் முதற்கொண்டு கடைப்பிடித்து வரும் வழக்கமோ, அதே போல வீட்டில் சாம்பிராணி தூபம் போடுவதும் நம் முன்னோர்கள் காலத்திலிருந்து கடைபிடித்து வந்த பழக்கம். அந்தத் தூபம் போடுவதை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் கடைபிடிப்பார்கள். அது அவரவர் வழக்கத்தை பொறுத்தது.

அப்படி போடக்கூடிய தூபத்தின் மூலம் நம் வீட்டில் இருக்கும் கெட்ட அதிர்வலைகள் நீங்கி நல்ல அதிர்வலைகள் பெருகும். அது மட்டும் இன்றி மகாலட்சுமி தாயாரின் அருட்கடாட்சம் கிடைக்கும் என்பதும் தான் இந்த தூபம் போடுவதன் நோக்கம். இந்த தூபத்தோடு சில பொருட்களை சேர்ப்பதன் மூலம் நம்மை பிடித்த பீடை தரித்திரம் நீங்கும் என்று சொல்லப்படுகிறது.

- Advertisement -

இப்படி நீங்குவதோடு தாயாரையும் நம் இல்லம் தேடி வர வைக்கும். இப்படி சகல சௌபாக்கியத்தையும் பெற்று தரக்கூடிய அற்புதமான ஒரு தூபம் முறையை பற்றி தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் இப்பொழுது நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

தரித்திரம் பீடை நீங்க தூபம்

வீட்டில் தூபம் போட வேண்டும் என்றாலே உடனே அனைவருக்கும் ஞாபகம் வருவது சாம்பிராணி தான். அதை தவிர்த்து அதில் ஒன்று இரண்டு பொருட்களை அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப சேர்த்து போடுவார்கள். அப்படி போடாமல் இந்த முறையில் தூபம் போட்டால் சகல சௌபாக்கியத்தின் பெறலாம்.

- Advertisement -

இந்த தூபம் போட நாட்டு மருந்து கடையில் கொப்பரை தேங்காய் கிடைக்கும் அதை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். அதே போல் ன சாம்பிராணியும் குங்கிலியமும் வாங்கி ஒன்றாக கலந்து ஒரு டப்பாவில் வைத்து விடுங்கள். இத்துடன் சேர்க்க வேண்டிய இன்னொரு பொருள் நெய். சுத்தமான பசுவின் நெய்யாக இருந்தால் நல்லது கிடைக்காத பட்சத்தில் தாரமான நெய்யாக பார்த்து வாங்கிக் கொள்ளுங்கள்.

இப்போது சாம்பிராணி தூபம் போட அனைத்தையும் தயார் செய்து வைத்த பிறகு இந்த சாம்பிராணி பொடி குங்கிலியம் கலந்த தூளை போட்டு விட்டு அதில் கொஞ்சம் கொப்பரை தேங்காய் பொடியும் போட்டு விடுங்கள். அத்துடன் சர்க்கரை ஒரு ஸ்பூன் சேர்த்த பிறகு நெய்யை ஊற்றுங்கள். இந்த சாம்பிராணி தூபத்தில் வீட்டில் வெளியில் இருந்து உள்ளே காட்டிக் கொண்டு வர வேண்டும்.

- Advertisement -

அப்படி வரும் போது நிலை வாசலுக்கு காட்டி விட்டு நிலை வாசலின் கதவின் பின்புறமும் காட்டுங்கள். அதன் பிறகு பூஜை அறை மற்ற இடங்கள் எல்லாம் இந்த சாம்பிராணி தூபத்தை காட்டுங்கள். இப்படி வாரத்தில் மூன்று முறை தூபம் போடும் போது நம் குடும்பத்தில் உள்ள அனைத்து பீடைகளும் நீங்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

இதையும் படிக்கலாமே: பணப்பெட்டியில் பணம் சேர பரிகாரம்

இதை செய்ய முடியாதவர்கள் வெள்ளிக்கிழமை அன்றாவது இந்த தூபத்தை தவறாமல் போட்டு விடுவது நல்லது. எப்போதும் நாமீ போடும் தூபத்துடன் இந்த பொருட்களை சேர்த்து போடும் போது அனைத்து சௌபாக்கியத்தையும் பெறலாம் எனில் அதை செய்வதில் தவறில்லை. இந்த தூபம் வழிபாட்டில் உங்களுக்கு நம்பிக்கை இருப்பின் நம்பிக்கையுடன் செய்து நல்ல பலனை பெறுங்கள்.

- Advertisement -