காதலிக்கும் காலத்தில்
உனக்காக ஏக்கத்தோடு காத்திருந்தேன்..
ஆனல் இன்று கண்ணீரோடு
காத்திருக்கிறேன்..
நீ வரமாட்டாய் என்பதை அறிந்தும்…
இதையும் படிக்கலாமே:
ஊமையாய் மாறிய நான் – காதல் கவிதை
காதலிக்கும் சமயத்தில் தன் ஜோடி எப்போது வரும் என்று எண்ணி காதலர்கள் பல இடங்களில் காத்திருப்பது வழக்கம். சில காரணங்களால் காதல் கை கூடாமல் போகிறது. அது போன்ற சமயங்களில் தன் ஜோடியை தினமும் சந்திக்கும் அதே இடத்தில் நின்றுக்கொன்று அவளோ அல்லது அவனோ வரமாட்டாரா என்று ஏக்கத்தோடு பார்க்கும் எத்தனையோ காதலர்கள் இன்றும் வாழ்கிறார்கள்.
ஏக்கம் என்பது மனிதனின் மனதில் எப்போதும் நிலைத்திருக்கும் ஒன்று தான் என்றாலும், தன் ஜோடிக்காக ஏங்கும் ஏகத்திற்கு எப்போதும் சற்று வலி அதிகம் தான். அதில் இருந்து மீண்டு வந்து மீண்டும் வாழ்க்கையை சந்தோசத்தோடு அணுகுவதில் தான் இருக்கிறது வாழ்க்கையின் சாதனை. காதலில் தோற்ற பலர் இந்த சாதனையை புரிந்து வாழ்வில் ஜைத்துள்ளனர் என்பது தான் உண்மை.
காதல் கவிதைகள், நட்பு கவிதை படங்கள், காதல் சார்ந்த பாடல் வரிகள் என அனைத்தும் ஒரு இடத்தில இங்கு உள்ளன.