இந்த 1 பொருளை உங்கள் தலையை சுற்றி போட்டாலே போதும். கழுத்தை நெறிக்கும் கடன் காணாமல் போய்விடும்.

kadan
- Advertisement -

கடன் பிரச்சினையில் சிக்கி தவித்து வருபவர்களுக்கு ஒரு சுலபமான பரிகாரத்தை பற்றித் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். அனுபவ ரீதியாக, நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தை செய்து பலன் அடைந்தவர்கள் ஏராளம். கடன் பிரச்சனை தீர்வதற்கு தொடர்ந்து 11 வாரங்கள் இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். உங்களது கடன் பிரச்சினைக்கான தீர்வினை அந்த ஆண்டவன் ஏதாவது ஒரு ரூபத்தில் கட்டாயம் உங்களுக்கு கொடுப்பார் என்ற நம்பிக்கையோடு இந்த பதிவினை தொடங்கலாம். இந்த பதிவின் இறுதியில் உங்களுடைய வாழ்க்வு சுபிட்சம் அடைய, ஒரு சுலபமான பரிகாரத்தையும் தெரிந்து கொள்ளுங்கள்.

kadan

உங்களுடைய கடன் பிரச்சினையை தீர்த்து வைக்கக்கூடிய தானியம் கொள்ளு. கொள்ளு கேதுவிற்கு உரிய தானியமாக சொல்லப்பட்டுள்ளது. ஒருவருடைய ஜாதக கட்டத்தில் கேதுவினால் பிரச்சனைகள் இருந்தாலும், கடன் தொல்லை கழுத்தை நெரிக்கும். இந்த கொள்ளு தானியத்தை ஞாயிற்றுக்கிழமை அன்று கடைக்கு சென்று நீங்கள் வாங்கி வருவது மிகவும் நல்லது.

- Advertisement -

ஞாயிற்றுக்கிழமை அன்று காலை பொழுதில் கடைக்குச் சென்று கொள்ளு தானியத்தை வாங்கிவந்து வீட்டில் வைத்துக்கொள்ளுங்கள். அதன்பின் ஞாயிற்றுக்கிழமை வரும் எமகண்ட நேரத்தில் இந்த கொள்ளு தானியத்தை ஒரு சிவப்பு துணியில் வைத்து மூட்டையாக கட்டி, உங்களது தலையை ஒன்பது முறை சுற்றி தூக்கி தூர எறிந்துவிட வேண்டும்.

kollu

இதே போல் 11 வாரம் ஞாயிற்றுக் கிழமைகளில் எமகண்ட நேரத்தில் தவறாமல் இந்த ஒரு பரிகாரத்தை மட்டும் செய்து வாருங்கள். தீராத கடன் பிரச்சனையால் தவித்து வருபவர்களுக்கு கூட ஏதாவது ஒரு வகையில் விடிவுகாலம் கட்டாயம் பிறக்கும். இதோடு சேர்த்து கடன் பிரச்சனை அதிகமாக உள்ளவர்கள், உங்களது உள்ளங்கைகளில் கொஞ்சமாக கஸ்தூரி மஞ்சளை எடுத்து தடவிக் கொள்ள வேண்டும். அதாவது, குளித்த பின்பு, வீட்டில் தீபம் ஏற்றி பூஜை எல்லாம் முடிந்த பின்பு, வீட்டை விட்டு வெளியில் கிளம்பும் போது, தண்ணீர் ஊற்றி குழைத்து வைத்திருக்கும் கஸ்தூரி மஞ்சளை ஒரு சொட்டு, எடுத்து உங்க கையில் வைத்து இரண்டு கைகளையும் தேய்த்துக் கொள்ளுங்கள் அவ்வளவு தான்.

- Advertisement -

இப்படியாக உங்களது உள்ளங்கைகளில் கஸ்தூரிமஞ்சள் இருந்தால், மேலும் மேலும் உங்களுக்கு கடன் பிரச்சனை வராமல் இருக்கும். அதாவது உங்கள் கைகளை கடன் வாங்காமல் தடுக்கக் கூடிய சக்தி இந்த கஸ்தூரி மஞ்சளுக்கு உண்டு. இதோடு சேர்த்து வாங்கிய கடனை திருப்பிக் கொடுப்பதற்காக வருமானமும் உங்களை தேடி வரும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

wheat

வாழ்க்கையில் நல்லது நடக்க வேண்டும். கடன் சுமை குறைய வேண்டும் என்று வேண்டிக் கொண்டு, சூரிய பகவானை நினைத்து கொண்டு, ஒரு கைப்பிடி அளவு கோதுமையை, ஒரு சிவப்புத் துணியில் வைத்து முடிச்சு போட்டு தலையணைக்கு அடியில் வைத்து உறங்கி 11 நாட்கள் கழித்து அந்த கோதுமையை பறவைகளுக்கு தானியமாக போட்டால், உங்களைப் பிடித்து இருக்கும் கெட்ட தோஷங்கள் அனைத்து நீங்கி, தீராத கஷ்டங்களுக்கும் நிரந்தரமான தீர்வை அந்த சூரிய பகவானை கொடுப்பார் என்றும் சொல்லப்பட்டுள்ளது. இதோடு சேர்த்து காலை 6 மணிக்கு சூரிய உதயத்தின் போது சூரிய நமஸ்காரம் செய்யும் பழக்கத்தை நீங்கள் கொண்டு வாருங்கள்.

- Advertisement -

rahu

மேலே சொல்லப்பட்டுள்ள இரண்டு பரிகாரங்களுமே பொதுவானவை தான். இந்த இரண்டு படங்களையும் ஒரு சேர சேர்த்து செய்ய தொடங்குங்கள். வாழ்க்கையில் நிச்சயம் கடன் பிரச்சினை தீர்ந்து, நல்ல வேலை, நல்ல தொழில் அமைந்து, வருமானம் அதிகரித்து, உங்களுடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்திற்கும் கூடிய விரைவில் விடிவுகாலம் பிறக்கும் என்ற நம்பிக்கையோடு அந்த ஆண்டவனை மனதார வேண்டிக் கொண்ட இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
பூஜையில் தியானம், அர்ச்சனை, மந்திரம் இந்த 3 விஷயத்தை செய்வதால் கிடைக்கும் பலன்களை தெரிந்து கொண்டால் நீங்களே வியந்து போவீர்கள்!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -