கேட்ட வரம் கிடைக்க உதவும் காளி காயத்ரி மந்திரம்

Kaali-Goddessjpg
- Advertisement -

காளி மிக உக்ர தெய்வம் என்பதால் நம்மில் பலர் காளியை எப்படி வணங்குவது என யோசிப்போம். ஆனால் புறப்பொருள் வெண்பாமாலை என்னும் நூலிலும், கலிங்கத்துப் பரணியிலும் காளி வழிபாடு குறித்தும் அவளை வாங்குவதால் உண்டாகும் நன்மைகள் குறித்தும் பல தகவல்கள் உள்ளன. காளியின் படத்தை பலர் வீட்டில் வைக்கவும் தயங்குவதுண்டு. ஆனால் உண்மையில் உக்ரவடிவில் உள்ள காளியின் படத்தை தான் வீட்டில் வைக்கக்கூடாது. சாந்த வடிவில் இருக்கும் காளியின் படத்தை வைத்து வணங்குவதில் தவறில்லை. காளியை வணங்கும் சமயத்தில் கீழே உள்ள மந்திரத்தை ஜெபிப்பதன் மூலம் கேட்ட வரம் கிடைக்கும். இதோ அந்த சக்திவாய்ந்த காளி தேவி காயத்திரி மந்திரம்.

sivakaali amman

காளி காயத்ரி மந்திரம் :

ஓம் காளிகாயை ச வித்மஹே
ஸ்மசான வாசின்யை தீமஹி
தன்னோ கோரா ப்ரசோதயாத்

- Advertisement -

இந்த மந்திரத்தை திங்கட்கிழமையிலோ அல்லது வெள்ளிக்கிழமையிலோ சொல்ல துவங்குவது நல்லது. அம்மாவாசை அன்று சொல்ல துவங்கினால் மேலும் சிறப்பு.

இதையும் படிக்கலாமே:
வாழ்வில் சகல நன்மைகளையும் அடைய வழி செய்யும் குரு காயத்ரி மந்திரம்

மந்திரத்தை சொல்ல துவங்கும் முன்பு விநாயகரை வணங்கி பூஜை செய்துவிட்டு பின் ஜெபிக்கவேண்டும். திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காளியை நினைத்து இந்த மந்திரத்தை 108 முறை ஜெபிப்பதன் பயனாக கேட்ட வரம் கிடைக்கும்.

- Advertisement -