இந்த கற்பூரம் எரிந்து முடிவதற்குள் உங்கள் கெட்ட நேரம் நல்ல நேரமாக மாறிவிடும்.

amman3
- Advertisement -

கெட்ட நேரம், நல்ல நேரமாக மாறுவதும், நல்ல நேரம், கெட்ட நேரமாக மாறுவதும், மனிதர்கள் வாழ்க்கையில் இயல்பாக நடக்கக்கூடிய ஒரு விஷயம்தான். ஆனால் சில நேரம் வரக்கூடிய கெட்ட நேரத்தை நம்மால் தாங்கவே முடியாது. அந்த அளவுக்கு கஷ்டங்கள் வந்து கழுத்தை நெறிக்க தொடங்கிவிடும்.

சில கிரக பெயர்ச்சி கூட நாம் எதிர்பாராத சமயத்தில் நமக்கு எதிர்பாராத இழப்புகளை ஏற்படுத்தி விடும். அந்த சமயம் பெரிய அளவில் வரக்கூடிய கஷ்டங்களை நம்மால் எதிர்கொள்ளவும் முடியாது. தாங்கிக்கொள்ளவும் முடியாமல் திணறிக் கொண்டிருப்போம். அந்த சமயத்தில் இந்த பரிகாரமானது உங்களுக்கு நிச்சயம் கை கொடுக்கும்.

- Advertisement -

எவ்வளவு பெரிய துன்பத்திலிருந்தும் உங்களை மீட்டுக் கொண்டு வரக்கூடிய சக்தி இந்த கற்பூர பரிகாரத்திற்கு உண்டு. இந்த கற்பூரத்தை ஏற்றி வைத்து, அந்த நேரத்தில் உங்களுக்கு இருக்கக்கூடிய கஷ்டங்களை இறைவனிடம் சொன்னீர்கள் என்றால், இந்த கற்பூரம் எரிந்து முடிவதற்குள் உங்களுடைய பிரச்சனைக்கு ஒரு தீர்வு கிடைக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.

உங்களுடைய கெட்ட நேரம் ஒரு சில நாட்களில் நல்ல நேரமாக மாறும். வாங்க அந்த பரிகாரம் என்ன அதை எப்படி செய்வது, எந்த கிழமையில் செய்வது, எந்த நேரத்தில் செய்வது என்பதை பற்றிய விரிவான ஆன்மீகம் சார்ந்த தகவலை இந்த பதிவை படித்து தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

கெட்ட நேரத்தை நல்ல நேரமாக மாற்றும் பரிகாரம்

இந்த பரிகாரத்திற்கு நமக்கு முதலில் தேவையான பொருள் அரை மூடி தேங்காய். அதை நீங்கள் மேல்முடியாகவும் பயன்படுத்தலாம். கீழ்முடியாகவும் பயன்படுத்தலாம். கஷ்டம் வரும்போது தானே இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். நாள் கிழமை பார்த்து நமக்கு கஷ்டம் வரப்போவது கிடையாது. உங்களுக்கு எப்போது இக்கட்டான சூழ்நிலை வருகிறதோ, அப்போது நீங்கள் இந்த பரிகாரத்தை செய்து கொள்ளுங்கள்.

நேரம் காலம் பார்க்க வேண்டிய அவசியமும் கிடையாது. எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் இந்த சூடத்தை கொளுத்தி பூஜை அறையில் குலதெய்வத்தை நினைத்து வழிபாடு செய்யலாம். அரை மூடி தேங்காய்க்கு நடுவே ஒரு கற்பூரத்தை வைத்து ஏற்றி விடுங்கள். அந்த அரை முடி தேங்காயை உங்கள் உள்ளங்கையில் வைத்துக் கொண்டு பூஜை அறையில் இருக்கும் தெய்வங்களுக்கு அப்படியே ஆரத்தி காண்பிக்கலாம்.

- Advertisement -

சாமி கும்பிடும்போது எப்படி கும்பிடுவோம். அதேபோலத்தான் ஆரத்தி காண்பித்து விட்டு, அந்த கற்பூரம் எரிந்து முடியும் வரை உங்கள் உள்ளங்கைகளில் அப்படியே வைத்து வேண்டுதல் வைக்கவும். சூடம் முழுமையாக எரிந்து முடிந்ததும் அந்த தேங்காயை தூக்கி கால் படாத இடத்தில் போட்டு விடுங்கள். அவ்வளவுதான். இந்த கற்பூரம் எரியும்போது இறைவனுக்கு ஆரத்தி காண்பிக்கும் போது உங்கள் கஷ்டங்களை இறைவனிடம் மனதார சொல்லி வேண்டிக் கொள்ளுங்கள். உங்கள் மனசு லேசாகும். உங்கள் கஷ்டங்களுக்கு தீர்வு கிடைக்கும். இது முதல் பரிகாரம்.

இது தவிர இரண்டாவது ஆக ஒரு பரிகார முறையும் இந்த தேங்காய் கற்பூரத்தில் இருக்கிறது. தீர்க்க முடியாத கடன், கஷ்டம் ரொம்ப இருக்கு, தீர்க்க முடியாத குடும்ப பிரச்சினை ஏதோ ஒன்று இருக்கிறது. குடும்பத்தில் இருக்கும் உறவுகளுக்குள் ஒற்றுமை இல்லை, குடும்பத்தில் நிம்மதியே இல்லை.

இதையும் படிக்கலாமே: கடன் பிரச்சனையை தீர்க்க உதவும் பூ.

பணப்பிரச்சனை, மனக்கஷ்டம் இவைகளை எல்லாம் சரி செய்ய வேண்டும் என்றால் இதேபோல பரிகாரத்தை ஞாயிற்றுக்கிழமை 6:00 மணிக்கு மேல் உங்களுடைய வீட்டில் பூஜை அறையில் செய்தீர்கள் என்றால், குடும்ப கஷ்டங்களுக்கு உண்டான தீர்வு கிடைக்கும் என்பது நம்பிக்கை. மேலும் சொன்ன ஆன்மீகம் சார்ந்த இந்த எளிமையான பரிகாரத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -