திறமையை வெளிப்படுத்த உதவும் பரிகாரம்.

sucess person
- Advertisement -

ஒருவர் தன்னுடைய வாழ்க்கையில் சிறந்த விளங்கு வேண்டும் என்றால் முதலில் தனக்குள் இருக்கும் திறமையை உணர்ந்து கொள்ள வேண்டும். அப்படி திறமையை உணர்ந்தால் மட்டும் பத்தாது. அந்த திறமையை வெளிக் கொண்டு வந்து அதனால் சாதனைகளை படைப்பதற்குரிய வாய்ப்புகளை பெற வேண்டும். அப்படி தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி சாதனைகள் படைப்பதற்கு அரச இலையை வைத்து என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஏதாவது ஒரு திறமை இருக்கத்தான் செய்கிறது. அது என்ன திறமை என்பதை கண்டறிவது ஒரு மிகப்பெரிய சவாலாக இருந்தாலும் அந்த திறமையை வைத்து எப்படி வெற்றி பெறுவது என்பது அடுத்த ஒரு சவாலாக இருக்கிறது. இந்த சவால்களை சமாளித்து வெற்றி பெறும் நபரே தங்கள் வாழ்க்கையில் மிகப் பெரிய உயரத்திற்கு செல்கிறார்கள். ஆண்களாக இருந்தாலும் பெண்களாக இருந்தாலும் அவர்களுடைய திறமைக்கேற்ற வேலையோ தொழிலோ கிடைத்தால்தான் அவர்களால் நிறைய சம்பாதித்து சமுதாயத்தில் ஒரு உயரிய அந்தஸ்தை பெற முடியும்.

- Advertisement -

அப்படி உயரிய அந்தஸ்தை பெற விரும்பும் நபர்கள் சனிக்கிழமை தோறும் இந்த எளிய தாந்த்ரீக பரிகாரத்தை செய்தால் கண்டிப்பான முறையில் தங்கள் திறமையால் வெற்றி அடைய முடியும் என்பது உறுதி. இந்த பரிகாரத்தை வேலையில் இருப்பவர்களும் செய்யலாம். தொழில் செய்பவர்களும் செய்யலாம். புதிதாக வேலைக்காகவோ தொழிலுக்காகவோ காத்திருப்பவர்களும் செய்யலாம். தங்கள் திறமையை வெளிப்படுத்த நினைக்கும் அனைவரும் செய்யலாம்.

சனிக்கிழமை அன்று அருகில் இருக்கக் கூடிய அரச மரத்திற்கு காலையில் 11 மணியிலிருந்து 12 மணிக்குள் சென்று அந்த மரத்திடம் உன்னுடைய இலையை நான் என்னுடைய வளர்ச்சிக்காக பறித்துக் கொள்கிறேன் எனக்கு அருள் புரிய வேண்டும் என்று வேண்டிய பிறகு ஒரு இலையை பறித்து வர வேண்டும். வேலையிலோ தொழிலிலோ இருப்பவர்கள் தாங்கள் அமர்ந்திருக்கும் இருக்கைக்கு கீழே இந்த இலையை வைத்து விட வேண்டும்.

- Advertisement -

புதிதாக வேலை தேடுபவர்களோ அல்லது வீட்டில் இருப்பவர்களோ இந்த முறையை பின்பற்ற முடியாது. அப்படிப்பட்டவர்கள் தாங்கள் படுத்து உறங்கும் தலையணைக்கு கீழ் இந்த இலையை வைத்து படுக்க வேண்டும். அடுத்த வாரம் அதே நேரத்தில் மறுபடியும் இன்னும் ஒரு அரச இலையை பறித்து வந்து பழைய அரச இலையை எடுத்து தனியாக வைத்துவிட்டு புதிய இலையை மாற்ற வேண்டும்.

இப்படி தொடர்ந்து ஏழு வாரங்கள் செய்ய வேண்டும். எட்டாவது வார சனிக்கிழமை அன்று பழைய ஏழு அரச இலைகளை எடுத்து ஓடுகின்ற நீரில் போட்டு விட வேண்டும். அவ்வாறு ஓடுகிற நீர் இல்லாத பட்சத்தில் அரச மரத்தடியிலேயே இந்த இலைகளை போட்டு விட வேண்டும். இப்படி செய்வதன் மூலம் நம்முடைய திறமைகளை வெளியில் கொண்டு வருவதற்குரிய வாய்ப்புகள் நம்மை தேடி வரும். வாழ்க்கையில் நல்ல முன்னேற்றப் பாதையை அடைவோம் என்பது உறுதி.

இதையும் படிக்கலாமே: இந்த முறையில் தங்கத்தை வைத்தால் பல மடங்கு தங்கம் சேரும்.

இந்த தாந்திரீக பரிகாரத்தை வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று நினைப்பவர்கள் முழு மனதோடும் நம்பிக்கையோடும் செய்து பலனடையலாம்.

- Advertisement -