கோடியில் புரள காலையில் எழுந்தவுடன் நீங்கள் பார்க்க வேண்டிய தெய்வம் எது?

astro
- Advertisement -

ஜோதிடத்தின் அடிப்படையில் ஒவ்வொரு ராசிக்கு என்றும் ஒவ்வொரு தெய்வங்கள் இருக்கிறது. நீங்கள் காலையில் எழுந்து கண்விழித்ததும் இந்த தெய்வத்தை ஒரு நிமிடம் பார்த்து வேண்டுதல் வைத்தால், உங்களுக்கு இருக்கக்கூடிய பணக்கஷ்டம் தீரும். மனக்கஷ்டம் தீரும். வாழ்க்கையில் உங்களால் சரி செய்யவே முடியாத பிரச்சனைகளை சரி செய்யவும் இந்த வழிபாட்டினை நீங்கள் மேற்கொள்ளலாம்.

சின்ன சின்ன சிக்கல்களில் இருந்து, பெரிய பெரிய சிக்கல்கள் வரை எல்லா பிரச்சனையிலிருந்தும் உங்களை காப்பாற்றிக் கொள்ள பின் சொல்லக்கூடிய இந்த வழிபாட்டை செய்து பாருங்கள். நிச்சயம் நல்லது நடக்கும். உங்களுடைய ராசி என்ன. நீங்கள் காலையில் எழுந்ததும் பார்த்து வழிபாடு செய்ய வேண்டிய தெய்வம் எது தெரிந்து கொள்ள ஆர்வம் உள்ளவர்கள் ஜோதிடம் சார்ந்த இந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

- Advertisement -

ராசிப்படி காலையில் கண்விழிக்க வேண்டிய தெய்வம்

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் காலையில் கண்விழித்ததும் பார்க்க வேண்டிய தெய்வம் மகாலட்சுமி. மகாலட்சுமியை பார்த்தபடியே கண் விழியுங்கள். பிறகு உங்களுடைய காலைக்கடன்களை முடித்துவிட்டு, குளித்துவிட்டு பூஜை அறையில் இருக்கும் மகாலட்சுமியை ஒரு நிமிடம் கண்குளிர பார்த்து, உங்கள் வேண்டுதலை தொடங்கினாலே போதும். மகாலட்சுமி உங்களுக்கு தேவையான எல்லாவற்றையும் கொடுத்து விடுவாள்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் காலையில் எழுந்ததும் கண்விழிக்க வேண்டிய தெய்வம் பெருமாள். 6.00 மணிக்கு முன்பு எழுந்து சுத்தபத்தமாக குளித்துவிட்டு தினமும் நீங்கள் சுப்ரபாதம் கேட்டால் போதும். உங்களுக்கு அதிர்ஷ்டம் தான். நீங்கள் வாழ்க்கையில் இதுநாள் வரை எவ்வளவு கஷ்டப்பட்டு இருந்தாலும் மேல் சொன்ன வழிபாட்டை தொடர்ந்து செய்து வரும்போது அந்த கஷ்டங்களுக்கு எல்லாம் விடிவுகாலம் பிறக்கும்.

- Advertisement -

மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் காலையில் எழுந்ததும் மாரியம்மன் திருவுருவப்படத்தில் கண் விழிக்க வேண்டும். திங்கட்கிழமைகளில் மாரியம்மன் கோவிலுக்கு சென்று விளக்கு போட்டு வழிபாடு செய்தால் உங்கள் கஷ்டங்கள் தீரும்.

கடகம்
கடக ராசிக்காரர்கள் காலையில் எழுந்ததும் கண் விழிக்க வேண்டிய தெய்வம் நடராஜர். உங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் நடராஜர் திருவுருவப்படத்தை பார்த்துக் கொண்டே இருங்கள். அந்த நடராஜரின் உருவம் நாட்டியமாட கூடிய உருவம், உங்கள் மனதில் பதிந்துவிடும். எப்போது கஷ்டம் வந்தாலும் சரி, கண்களை மூடி அந்த இருட்டான கண்களுக்குள் நடராஜரின் உருவத்தைக் கொண்டு வந்து நிறுத்துங்கள். உங்கள் கஷ்டம் நொடி பொழுதில் காணாமல் போகும்.

- Advertisement -

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் காலையில் எழுந்ததும் கண் விழிக்க வேண்டிய தெய்வம் கூடுதுறை பவானி சங்கமேஸ்வரர். இந்த பெயரை கூகுளில் நீங்கள் போட்டு தேடினாலே இந்த தெய்வத்தின் திருவுருவப்படம் கிடைத்துவிடும். அதை பிரிண்ட் எடுத்து தினமும் காலையில் எழுந்ததும் கண் விழிக்கலாம். முடிந்தால் இந்த கோவிலுக்கு ஒரு முறை சென்று வாருங்கள். கஷ்டம் வரும்போது இவரை மனதில் நினைத்து பிரார்த்தனை செய்தால் உங்கள் பிரச்சனைகள் தீரும்.

கன்னி
இவர்கள் காலையில் எழுந்ததும் வெள்ளீஸ்வரர் தரிசனம் செய்ய வேண்டும். வெள்ளீஸ்வரர் சிவபெருமான் தான். இவரது பெயரை கூகுளில் நீங்கள் டைப் செய்தாலே அவரது திருஉருவப்படம் வந்துவிடும். அதை பிரிண்ட் எடுத்து வைத்துக் கொள்ளலாம். வெள்ளிக்கிழமை வெள்ளீஸ்வரரை மனதார நினைத்து பூஜை அறையில் விளக்கு ஏற்றி வழிபாடு செய்தால் உங்களுடைய பிரச்சனைகள் தீரும்.

துலாம்
இவர்கள் காலையில் கண்விழித்ததும் பெருமாள் முகத்தில் விழிக்க வேண்டும். அதேபோல சனிக்கிழமைகளில் மலைமேல் இருக்கும் பெருமாளை தரிசனம் செய்து வந்தால் உங்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும். கஷ்டம் வரும்போது கண்களை மூடி பெருமாளை நினைத்துக் கொள்ளுங்கள். கஷ்டங்கள் எல்லாம் ஓடோடி விடும்.

விருச்சிகம்
இவர்கள் காலையில் கண்விழித்ததும் மகாலட்சுமியின் முகத்தில் கண்விழிக்க வேண்டும். நீங்கள் வியாழக்கிழமை தோறும் மகாலட்சுமியை மனதார நினைத்து வழிபாடு செய்தால் பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீரும். செல்வ வளம் பெருகும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்கள் காலையில் எழுந்ததும் சுப்பிரமணியர் முகத்தில் கண்விழிக்க வேண்டும். வள்ளி தேவயானி யோடு இருக்கக்கூடிய முருகப்பெருமானை பாருங்கள். உங்களுக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும். செவ்வாய்க்கிழமை தோறும் பூஜை அறையில் இருக்கும் முருகர் படத்திற்கு கற்பூர ஆரத்தி காண்பித்து மணி அடித்து பூஜை செய்து பாருங்கள். உங்கள் வாழ்க்கையில் பிரகாசமான எதிர்காலம் இருக்கும்.

மகரம்
மகர ராசிக்காரர்கள் காலையில் கண்விழித்ததும் மீனாட்சி சுந்தரேஸ்வரரின் திரு உருவப்படத்தை பார்க்க வேண்டும். இவர்கள் வியாழக்கிழமை அன்று மீனாட்சி சுந்தரேஸ்வரரை மனதில் நினைத்து பூஜை அறையில் வழிபாடு செய்து வர உங்களுடைய கஷ்டங்கள் தீரும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கும் காலையில் கண்விழித்ததும் வழிபாடு செய்ய வேண்டிய தெய்வம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் தான். நீங்கள் வெள்ளிக்கிழமை அன்று இவரை மனதில் நினைத்து பூஜை அறையில் வழிபாடு செய்து வர உங்களுடைய பிரச்சனைகள் படிப்படியாக குறையும்.

மீனம்
மீன ராசிக்காரர்கள் காலையில் எழுந்ததும் கண்விழிக்க வேண்டிய தெய்வம் வள்ளி தேவயானையோடு இருக்கக்கூடிய முருகப்பெருமான். தினமும் இவரை இரண்டு நிமிடம் பார்த்து விட்டு உங்களுடைய வேலைகளை தொடங்குங்கள், அன்றாட நாளை முருகப்பெருமானை நினைத்து தொடங்கினால் உங்களுடைய கஷ்டங்கள் எல்லாம் தீரும். தோல்விகள் எல்லாம் வெற்றியாக மாறும்.

மேலே சொல்லப்பட்டிருக்கும் வழிபாட்டு முறைகள் எல்லாமே பொதுப்படையாக 12 ராசிகளை வைத்து சொல்லப்பட்டவை தான். இது தவிர அவரவர் தனிப்பட்ட ஜாதகத்திற்கு என்று வழிபட வேண்டிய கடவுள்கள் என்பதும் தனித்தனியாக இருக்கிறது. அதை நீங்கள் உங்களுடைய பிறந்த ஜாதகத்தை ஜோதிடரிடம் காண்பித்து தான் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற இந்த தகவலோடு இன்றைய ஜோதிடம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -