வாரா கடன் வசூலாக பரிகாரம்.

panam vara
- Advertisement -

பணமே ஒரு மனிதனின் வாழ்க்கையை நிர்ணயிக்கக்கூடிய முக்கியமான பொருளாக திகழ்கிறது. ஒரு மனிதன் சந்தோஷமாக வாழ்வதற்கும் நிம்மதியற்ற நிலையில் இருப்பதற்கும் காரணம் பணம் தான். அதிலும் குறிப்பாக பணத்தை கடனாக தருவதன் மூலம் நம்முடைய வாழ்க்கையும் நிம்மதியையும் பல பேர் இழந்திருப்போம். அப்படி இழந்த நிம்மதியை அதே சமயம் நாம் இழந்த பணத்தையும் பொருட்களையும் திரும்பப் பெறுவதற்கு செய்யக்கூடிய ஒரு எளிய தீப பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

நாம் எவ்வளவுதான் ஜாக்கிரதியாக இருந்தாலும் எந்த பிரச்சினையும் வரக்கூடாது என்று நினைத்து செய்தாலும் நம்முடைய ஜாதகத்தில் இருக்கக்கூடிய கிரக அமைப்பிற்கு ஏற்றவாறு ஏதாவது ஒரு சூழ்நிலையில் பிரச்சனையில் நாம் மாட்டிக் கொள்வோம். அப்படி மாட்டிக்கொள்ளும் பிரச்சினைகளில் ஒன்று தான் கடன் பிரச்சனை. கடன் என்பதை நாம் கொடுத்தாலும் பிரச்சனை தான். வாங்கினாலும் பிரச்சனை தான். செவ்வாய் கிரகத்தின் ஆதிக்கத்தால் ஏற்படக்கூடிய இந்த கடன் பிரச்சனையை தீர்ப்பதற்கு பல பரிகாரங்கள் இருக்கின்றன. அவற்றுள் மிகவும் எளிமையான பரிகாரத்தை பார்ப்போம்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை நாம் செவ்வாய்க்கிழமை அன்று தான் செய்ய வேண்டும். அதிலும் இந்த பரிகாரத்தை நம்முடைய வீட்டில் செய்தாலே போதும் வேறு எங்கும் போய் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இந்த பரிகாரத்திற்கு ஏழு அகல் விளக்குகள் தேவைப்படும். செவ்வாய்க்கிழமை அன்று காலையில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு பூஜை அறையில் விளக்கேற்றி பூஜை செய்த பிறகு காலை 6 மணி முதல் 7 மணிக்குள் நம் வீட்டின் தெற்கு பகுதியில் ஏழு அகல் மண் விளக்குகளை வைத்து அதற்கு நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும்.

பிறகு மனம் உருகி எனக்கு இவ்வளவு பணம் வர வேண்டியது இருக்கிறது என்று வேண்டி வழிபட வேண்டும். இவ்வாறு ஒவ்வொரு வாரமும் ஏழு தீபங்களை தெற்கு திசையில் ஏற்றி வைத்து வழிபட்டு வருவதன் மூலம் ஏமாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் இருக்கும் நபர்களும் கூட நம்மிடம் வாங்கிய பணத்தை திரும்பக் கொண்டு வந்து தந்து விடுவார்கள். மேலும் நாம் இழந்த சொத்து மற்றும் பொருட்களையும் நம் ஆள் திரும்ப பெற முடியும்.

- Advertisement -

மேலும் சனிக்கிழமை அன்று ஒரு மகாலட்சுமி புகைப்படத்தை வாங்கி அருகில் இருக்கும் அரச மரத்தடியில் வைத்து விட்டு அரச மரத்தை 108 முறை சுற்ற வேண்டும். பிறகு மகாலட்சுமி தாயாரின் புகைப்படத்திற்கு தூப தீப ஆராதனை காட்டி வழிபடுவதன் மூலமும் நமக்கு ஏற்பட்டிருக்கும் பணதோஷமானது நீங்கி பணவரவு ஏற்படும். வராத கடனும் வந்து சேரும்.

இதையும் படிக்கலாமே: நிரந்தர வேலை கிடைக்க பரிகாரம்.

இந்த எளிமையான தாந்திரீக பரிகாரத்தை செய்து பணம் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளில் இருந்தும் வெளியில் வரலாம்.

- Advertisement -