வரவே வராது என்று நினைத்த கடன் கூட திரும்பி வர ஆஞ்சநேயர் வழிபாடு.

hanuman thualsi elakkai
- Advertisement -

ஒருவருக்கு கஷ்டம் என்று வரும் பொழுது முதலில் தங்களுக்கு நெருக்கமானவர்களிடம்தான் அதை பகிர்ந்து கொள்வார்கள். அவ்வாறு பகிர்ந்து கொள்ளும் பொழுது உடன் இருப்பவர்கள் தங்களால் இயன்ற அளவு ஏதாவது ஒரு உதவியை செய்து அவர்களை கஷ்டத்தில் இருந்து காப்பாற்ற முயற்சிப்பார்கள். அப்படி காப்பாற்ற நினைத்து பணத்தை கொடுத்து அந்த பணத்தை திரும்ப பெற முடியாமல் கஷ்டப்படுபவர்கள் ஆஞ்சநேயரை எந்த முறையில் வழிபட்டால் கொடுத்த கடன் திரும்ப வரும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

கடன் அன்பை முறிக்கும் என்றும் கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன் என்றும் கடன் சம்பந்தப்பட்ட பழமொழிகள் இருக்கின்றன. இவை அனைத்துமே கடன் வாங்கக் கூடாது என்பதற்காக மட்டுமல்ல. கடன் கொடுக்கக் கூடாது என்பதற்காகவும் தான். தொழில் ரீதியாக சில பேர் கடன் கொடுப்பார்கள். அப்படி செய்வது தவறு ஒன்றும் கிடையாது.

- Advertisement -

ஆனால் பிறரின் கஷ்டத்திற்காக நாம் சேமித்து வைத்திருக்கும் பணத்தை கொடுப்பது மிகவும் தவறான ஒன்று என்று கூறப்படுகிறது. அதைப்போல் மிகவும் நெருக்கமானவர்களிடமிருந்து நாம் கடனும் வாங்க கூடாது என்பதும் உண்மைதான். நம்மால் பணத்தை திரும்ப பெற முடியவில்லை என்றால் அந்த உறவிலும் பிரச்சினை வரும். இப்படி பிரச்சினைகள் வராமல் இருக்க வேண்டும் என்று நாம் நினைத்தாலும் ஏதோ ஒரு சூழ்நிலையில் நமக்கு நெருக்கமானவர்கள் கஷ்டப்படும் பொழுது நம்மால் அதை பார்த்துக்கொண்டு அமைதியாக இருக்க முடியாது அல்லவா?

சரி பணத்தை கொடுத்து விட்டோம். ஆனால் அவர்கள் நம்மிடம் பணத்தை திரும்பத் தரவில்லை நம்மை ஏமாற்றுகிறார்கள் அல்லது அவர்களால் திரும்ப தர முடியாத அளவிற்கு மேலும் பல கஷ்டங்களுக்கு ஆளாகி இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்பொழுது அவர்களிடமிருந்து நாம் பணத்தை வாங்க வேண்டும் என்று நினைத்தால் அதற்கு நமக்கு உதவி செய்பவர் ஆஞ்சநேயர்.

- Advertisement -

இந்த வழிபாட்டை நாம் என்று வேண்டுமானாலும் செய்யலாம். இந்த வழிபாட்டிற்கு நமக்கு ஆஞ்சநேயரின் புகைப்படம் தேவைப்படும். அதை நமது பூஜை அறையில் வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு அந்த படத்திற்கு ஏற்றார் போல் மஞ்சள் நூலில் ஏலக்காயை கோர்த்து ஆஞ்சநேயர் படத்திற்கு சாற்ற வேண்டும். ஏலக்காயின் எண்ணிக்கை எவ்வளவு வேண்டுமானாலும் இருக்கலாம். படத்திற்கு ஏற்றவாறு சாற்ற வேண்டும் அதுதான் முக்கியம்.

பிறகு தினமும் ஆஞ்சநேயருக்கு துளசியால் அர்ச்சனை செய்ய வேண்டும். ஆஞ்சநேயரின் 108 போற்றிகள் தெரிந்தால் அதை உச்சரித்து அர்ச்சனை செய்யலாம். அவ்வாறு தெரியவில்லை என்பவர்கள் “ஸ்ரீ ராம ஜெயம்” என்று கூறியவாறு கூட அர்ச்சனை செய்யலாம். இவ்வாறு அர்ச்சனை செய்த பிறகு ஆஞ்சநேயரிடம் நான் கொடுத்த பணம் திரும்ப என்னிடம் வரவேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

இவ்வாறு தினமும் நாம் செய்து வந்தால் ஆஞ்சநேயரின் அருளால் வரவே வராது என்று நினைத்த பணம் கூட நம்மை வந்து சேரும். ஏலக்காய் மாலையை மாதத்திற்கு ஒரு முறை மாற்றலாம்.

இதையும் படிக்கலாமே: இந்த ஒளி பிறந்தால் தரித்திரம் தாண்டவம் ஆடும் வீட்டில் செல்வம் குவியும்.

கோவிலுக்கும் செல்லாமல் அதிகமாக பொருள் செலவும் பண்ணாமல் நம் வீட்டிலேயே ஆஞ்சநேயரை இந்த முறையில் வழிபட்டு வரவே வராது என்ற நினைத்த பணத்தை கூட பெற முடியும்.

- Advertisement -