Virat Kohli : உலகக்கோப்பை அணியில் ஆட விருப்பம் இருந்தால் இதனை செய்யுங்கள் – கோலி எச்சரிக்கை

Kohli
- Advertisement -

வரும் மே மாதம் இறுதியில் 2019ஆம் ஆண்டுக்கான 50 ஓவர் உலககோப்பை போட்டிகள் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் நடைபெற உள்ளது. இதற்காக இந்திய அணி கிட்டதட்ட தயார் என்றே கூற வேண்டும். அனைத்து நாடுகளும் உலகக்கோப்பைக்கு தயாராகி வரும் நிலையில் இந்த உலகக்கோப்பையை இந்தியா அல்லது இங்கிலாந்து ஆகிய நாடுகளில் ஒன்றுதான் கைப்பற்றும் என்று கிரிக்கெட் நிபுணர்கள் கூறிவருகின்றனர்.

worldcup

இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் ஆடிவருகிறது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இன்று முதல் ஒருநாள் போட்டியில் பங்கேற்கும் முன் இந்திய அணியின் கேப்டன் கோலி உலகக்கோப்பை இந்திய அணி குறித்து முக்கியமான தகவல் ஒன்றினை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் பேட்டி ஒன்றினையும் அளித்துள்ளார்.

- Advertisement -

அதில் கோலி குறிப்பிட்டதாவது : இந்திய அணியின் உலகக்கோப்பை வீரர்கள் தேர்வு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. மேலும்,உலகக்கோப்பை இந்திய அணியில் ஆடவேண்டும் என்றால் வீரர்கள் ஐ.பி.எல் போட்டிகளின் போது கேளிக்கை மற்றும் ஒழுக்கத்திற்கு மாறான எந்த செயலிலும் ஈடுபடக்கூடாது. மேலும், உலகக்கோப்பை நீண்ட தொடர் மற்றும் வெளிநாட்டு மைதானம் என்பதால் வீரர்களின் உடல்தகுதி என்பது மிகவும் முக்கியம் என்று குறிப்பிட்டார்.

team

மேலும், ஐ.பி.எல் போட்டிகளில் சிறப்பாக ஆடினால் இந்திய அணியில் இடம் கிடைக்கும் என்பதை வீரர்கள் நினைக்க கூடாது. அணித்தேர்வில் இனிமேல் எந்த மாற்றமும் இருக்காது. அப்படி இருந்தால் மிகவும் நன்றாக செயல்படும் ஓரிரு வீர்ரர்கள் அணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என்று கேப்டன் கோலி தெரிவித்தார்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே :

Sehwag : அபிநந்தனின் வருகையை ஒட்டி அவருக்கு பரிசளிக்க உள்ள சேவாக்

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்

- Advertisement -