நியாயமான கோரிக்கை நிறைவேற தீப வழிபாடு.

venduthal
- Advertisement -

நமக்கு தேவையான ஒன்றை பெறுவதற்கு பல முயற்சிகள் செய்வோம். முயற்சிகளை செய்யும் பொழுதே வெற்றி அடைந்து விட்டால் மகிழ்ச்சி தான். அவ்வாறு வெற்றியடையவில்லை என்றால் அடுத்த கட்டமாக இறைவனிடம் வேண்டுதல் வைப்போம். அப்படி வைக்கும் வேண்டுதல் நிறைவேறுவதற்கு செய்யக்கூடிய ஒரு எளிய பரிகார முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

மனிதன் தன்னுடைய வாழ்க்கையில் பல விஷயங்களை எதிர்பார்த்து வாழ்வான். அனைத்தும் எதிர்பார்த்தது போல் நடக்காது. காலதாமதங்கள் ஏற்படும். தடைகள் வரும். அந்த சூழ்நிலையில் முயற்சியை கைவிடாமல் அதே சமயம் எளிய பரிகாரங்களையும் செய்வதன் மூலம் வேண்டியவற்றைப் பெற முடியும்.

- Advertisement -

உதாரணமாக திருமணம் விரைவில் நடக்க, குழந்தை பாக்கியம் கிடைக்க, படிப்பில் சேர்ந்து விளங்க, கொடுத்த பணத்தை திரும்ப பெற அல்லது வாங்கிய பணத்தை திரும்ப கொடுக்க, நல்ல வேலை கிடைக்க, வேலையில் உயர்வு கிடைக்க, தொழில் லாபகரமாக நடக்க, எதிரிகள் தொல்லை விலக இப்படி பல விஷயங்கள் இருக்கும். இது போன்ற எந்த வேண்டுதலாக இருந்தாலும் அதை நிறைவேற்ற இறைவன் அருள் பரிபூரணமாக கிடைக்க செய்ய வேண்டிய பரிகாரத்தை பார்ப்போம்.

ஒரே ஒரு தீபத்தை ஏற்றி தான் வழிபட போகிறோம். அந்த தீபத்தில் சில பொருட்களை சேர்த்து ஏற்றும் பொழுது அதனால் ஏற்படக்கூடிய சக்தி நம்முடைய வேண்டுதலை விரைவிலேயே நிறைவேற்றும். முக்கியமான குறிப்பு நம்முடைய வாழ்க்கைக்கு தேவையான நியாயமான வேண்டுதலை வைத்தால் மட்டுமே தான் நிறைவேறும் என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். இந்த தீபத்தை பௌர்ணமி, அமாவாசை பிரதோஷம் போன்ற நாட்களில் ஏற்ற ஆரம்பிக்கலாம். தொடர்ந்து 15 நாட்கள் இந்த தீபத்தை ஏற்ற வேண்டும்.

- Advertisement -

புதிதாக ஒரு அகல் விளக்கை வாங்கிக் கொள்ளுங்கள். அதில் ஒரு ருத்ராட்சத்தை போட வேண்டும். பிறகு ஒரு வில்வ இலையை எடுத்து அதில் உங்களுடைய வேண்டுதல் என்னவோ அதை எழுதி அந்த அகலில் வைக்க வேண்டும். அடுத்ததாக ஒரு ரூபாய் நாணயத்தை வைக்க வேண்டும். பிறகு நல்லெண்ணெய் ஊற்றி சிறிது பச்சை கற்பூரத்தை போட்டு பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். பிறகு இந்த தீபத்தை பார்த்து நாம் வில்வ இலையில் என்ன வேண்டுதலை எழுதி இருந்தோமோ அந்த வேண்டுதலை கூறி மனதார வழிபட வேண்டும்.

மறுநாள் அதே அகலில் வில்வ இலை, எஎண்ணெய், திரி இவற்றை மாற்றிவிட்டு அதே வேண்டுதலை எழுதி வைத்து தீபம் ஏற்ற வேண்டும். இவ்வாறு தொடர்ந்து 15 நாட்கள் ஒரே வேண்டுதலை கூறி தீபம் ஏற்றி வர நியாயமான வேண்டுதல் கண்டிப்பாக முறையில் நிறைவேறும். 15 நாட்கள் நிறைவடைந்த பிறகு ருத்ராட்சம் மற்றும் நாணயத்தை பூஜையறையில் வைத்து விட வேண்டும். மறுபடியும் வேறு வேண்டுதல் செய்யும் பொழுது புதிதாக வேரு ருத்ராட்சத்தை வாங்கி வைத்து செய்ய வேண்டும். இந்த பழைய ருத்ராட்சத்தை எடுத்து உபயோகப்படுத்த கூடாது.

இதையும் படிக்கலாமே: ஏழரை சனியில் சிக்கி இருப்பவர்கள் கட்டாயம் செல்ல வேண்டிய கோவில்

இந்த எளிமையான தீப வழிபாட்டை நம்முடைய நியாயமான கோரிக்கை நிறைவேற நாமும் நம் வீட்டில் ஏற்றி வழிபடுவோம்.

- Advertisement -