கோவை ஸ்பெஷல் ‘அரிசி பருப்பு சாதம்’ செய்வது இவ்வளவு ஈஸியா? பத்தே நிமிடத்தில் பிரஷர் குக்கரில் செய்து விடலாமே!

arisi-paruppu-sadam3
- Advertisement -

கோவை மாவட்டத்தின் உடைய பிரசித்தி பெற்ற உணவு வகைகளில் இந்த அரிசி பருப்பு சாதமும் ஒன்றாகும். பாரம்பரியம் மிக்க இந்த உணவு வகை மிக மிக எளிதாக செய்து விடக் கூடிய வகையில் அமைந்திருப்பது இதன் சிறப்பம்சமாகும். கோவை மாவட்ட மக்களுக்கு கைதேர்ந்த உணவு இந்த அரிசி பருப்பு சாதம். அலுவலகம் செல்வோர் முதல் குழந்தைகளுக்கு பள்ளிக்கு கொடுத்து அனுப்புவது முதல் சுலபமாக டிபன் பாக்ஸில் கட்டிக் கொண்டு போகக் கூடிய இந்த கோவை ஸ்பெஷல் ‘அரிசி பருப்பு சாதம்’ எப்படி செய்வது? என்பதை அறிய மேலும் இந்த பதிவை தொடருங்கள்.

arisi-paruppu-sadam

கோவை ஸ்பெஷல் ‘அரிசி பருப்பு சாதம்’ செய்ய தேவையான பொருட்கள்:
அரிசி – ஒரு டம்ளர், துவரம் பருப்பு – கால் டம்ளர், பெரிய வெங்காயம் – 1, தக்காளி – 2, பச்சை மிளகாய் – 3, காய்ந்த மிளகாய் – 3, பூண்டு – மூன்று பல், தாளிக்க: கடுகு – ஒரு டீஸ்பூன், சீரகம் – ஒரு டீஸ்பூன், மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு கொத்து, மல்லி தழை – சிறிதளவு, உப்பு – தேவையான அளவிற்கு, எண்ணெய் அல்லது நெய் – தேவைக்கேற்ப.

- Advertisement -

கோவை ஸ்பெஷல் ‘அரிசி பருப்பு சாதம்’ செய்முறை விளக்கம்:
முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். தக்காளி மற்றும் வெங்காயத்தை பொடி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அரிசி மற்றும் பருப்பு வகைகளை களைந்து சுத்தம் செய்து ஊற வைத்துக் கொள்ளுங்கள். பின் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு குக்கரை வைத்துக் கொள்ளுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் கடுகு, சீரகம் போட்டு தாளிக்க வேண்டும். தாளித்து முடித்த பின்பு பொடி பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.

arisi-paruppu-sadam1

வெங்காயம் வதங்கி வரும் பொழுது பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து வதக்க வேண்டும். பின்னர் பொடி பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளி, பூண்டு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை அப்படியே சேர்த்து நன்கு வதக்க வேண்டும். இவைகள் நன்கு மசித்து வதங்கி வந்ததும், தேவையான அளவு உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து ஒருமுறை வதக்கிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பின்னர் ஊற வைத்துள்ள அரிசி மற்றும் பருப்பு வகைகளை தண்ணீர் நீக்கி சுத்தமாக வடித்துவிட்டு பின்னர் இதனுடன் சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் தேவையான அளவிற்கு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி போட்டு மூடி விடுங்கள். ஒரு ஆழாக்கு சாதாரண சாப்பாட்டு அரிசிக்கு பொதுவாக இரண்டு ஆழாக்கு அளவிற்கு தண்ணீர் ஊற்றினால் சரியாக இருக்கும். அவரவர்களின் அரிசிக்கு ஏற்ப தண்ணீரின் அளவை மாற்றி சேர்த்துக் கொள்வது நல்லது.

arisi-paruppu-sadam2

குக்கர் 3 விசில் விட்டதும் அடுப்பை அணைத்து விடுங்கள். பிரஷர் முழுவதுமாக அடங்கும் வரை குக்கரை திறந்து பார்க்க வேண்டாம். பிரஷர் அடங்கியதும் குக்கரை திறந்து கொத்தமல்லி தழைகளைத் தூவி கிளறி சூடாக பரிமாற வேண்டியது தான். இந்த சாம்பார் செய்ய எண்ணெய்க்கு பதிலாக நெய் சேர்த்தால் இன்னும் கூடுதல் சுவை தரும். காலை வேளையில் அவசரமான சமயங்களில் இந்த சாம்பார் சாதத்தை பத்தே நிமிடத்தில் செய்து கொடுத்து வீட்டில் இருப்பவர்களை அனுப்பி விடலாம். கோவையின் பாரம்பரிய உணவை நீங்களும் ஒருமுறை இப்படி சமைத்து பார்த்து அசத்துங்கள்.

- Advertisement -