குபேர பஞ்சமி வழிபாடு

kubera panjami
- Advertisement -

இந்த கலியுகத்தில் உக்கிர தெய்வங்களின் வழிபாடு என்பது மிகவும் சிறந்து விளங்குகிறது. அந்த வகையில் கால பைரவர், வாராகித் தாயார், பிரத்யங்கிரா தேவி போன்ற உக்கிர தெய்வங்களை அனைவரும் வழிபட்டு கொண்டு வருகிறோம். அவற்றுள் மிகவும் குறிப்பிடத்தக்க தெய்வமாக நாம் வாராகி அம்மனை கூறலாம். ஒவ்வொரு மாதமும் வரக்கூடிய பஞ்சமி திதி அன்று வாராகி அம்மனை பலரும் வழிபடுகிறார்கள், இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாளை வரக்கூடிய குபேர பஞ்சமி அன்று எந்த முறையில் வாராகி அம்மனை வழிபட்டால் நம்முடைய வாழ்வில் இருக்கக்கூடிய பண ரீதியான பிரச்சினைகள் அனைத்தும் நீங்கும் என்று தான் பார்க்கப் போகிறோம்.

பணம் என்பது நம்முடைய வாழ்க்கையில் மிகவும் இன்றியமையாத ஒன்றாக திகழ்கிறது. எப்பேர்ப்பட்ட சூழ்நிலையாக இருந்தாலும் அந்த சூழ்நிலையை சமாளிப்பதற்கு முதலில் நமக்கு தேவைப்படுவது பணம் மட்டுமே. கடன் பிரச்சினை, நகையை அடமானம் வைத்து திருப்ப முடியாமல் கஷ்டப்படுவது, கொடுத்த பணத்தை திரும்ப வாங்க முடியாமல் இருப்பது, வாங்கிய பணத்தை திரும்பக் கொடுக்க முடியாமல் இருப்பது, அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கு போதுமான அளவு பண வர இல்லாமல் இருப்பது, பணத்தால் சுப காரியங்கள் தடைப்பட்டு நிற்பது என்று நாம் கூறிக் கொண்டே செல்லலாம். இப்படி எப்பேர்பட்ட பண பிரச்சனையாக இருந்தாலும் அந்த பிரச்சினையை நீக்குவதற்கு நாளைய தினத்தை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம்.

- Advertisement -

பொதுவாக வியாழக்கிழமை என்பது குரு பகவானுக்குரிய கிழமையாக கருதப்படுகிறது. குரு பார்க்க கோடி நன்மை என்று கூறுவார்கள். வியாழக்கிழமை தோறும் மஞ்சள் நிற ஆடை அணிந்து குருபகவானிற்கு மஞ்சள் நிற பூக்களால் அர்ச்சனை செய்து வழிபாடு மேற்கொண்டால் குரு பகவானின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

இதே போல் வியாழக்கிழமை என்பது குபேர பகவானுக்குரிய கிழமையாகவும் கருதப்படுகிறது. செல்வங்களுக்கு அதிபதியாக குபேர பகவான் திகழ்கிறார். மேலும் மாலை 5 மணியில் இருந்து இரவு 8 மணி வரை குபேர காலமாக திகழ்கிறது. இந்த குபேர காலத்தில் குபேரரை நினைத்து குபேர பூஜை செய்து வழிபடுபவர்களுடைய வாழ்க்கையில் குபேர சம்பத்து கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

இதே நாளில் தான் நாளை பஞ்சமியும் வருகிறது. வராகி அம்மனுக்கு உகந்த திதியான பஞ்சமி திதியும் குரு மற்றும் குபேர பகவானுக்குரிய கிழமையான வியாழக்கிழமையும் சேர்ந்து வருவதால் இதை குபேர பஞ்சமி என்று கூறுகிறோம். இந்த குபேர பஞ்சமி நாளன்று மாலையில் குபேர காலத்தில் அதாவது 5 மணிக்கு மேல் குரு பகவானின் அம்சம் பொருந்திய விரலி மஞ்சள் வைத்து நாம் வராகிய அம்மனை வழிபடும் பொழுது மூன்று பேரின் அருளும் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும்.

இரண்டு விரலி மஞ்சளை எடுத்து நம்முடைய வலது கையில் வைத்துக்கொண்டு வராகி அம்மனுக்குரிய காயத்ரி மந்திரத்தையோ அல்லது மூல மந்திரத்தையோ மனதார குறைந்தது 51 முறையாவது உச்சரிக்க வேண்டும். வாராஹி அம்மனின் மந்திரம் தெரியாதவர்கள் மிகவும் எளிமையாக “ஓம் வாராகி அம்மனே போற்றி” என்று கூறலாம்.

- Advertisement -

இப்படி வீட்டில் பூஜையறையில் விளக்கேற்றி வைத்து வாராகி அம்மனின் மந்திரத்தை கையில் விரலி மஞ்சள் வைத்துக்கொண்டு கூற வேண்டும். பிறகு இந்த விரலி மஞ்சளை வெள்ளை, மஞ்சள், பச்சை இந்த மூன்று நிறங்களில் ஏதாவது ஒரு நிறத்துணியில் வைத்து மூட்டையாக கட்டி பணம் இருக்கும் இடத்தில் வைத்து விட வேண்டும். மூன்று மாதங்கள் கழித்து இந்த மூட்டையை அப்படியே எடுத்துக் கால் படாத இடத்தில் போட்டு விட வேண்டும். இப்படி செய்வதன் மூலம் பணரீதியாக ஏற்பட்டிருக்கும் பிரச்சினைகள் அனைத்தும் படிப்படியாக நீங்குவதை நம்மால் உணர முடியும்.

இதையும் படிக்கலாமே: எதிரி தொல்லை நீங்க பரிகாரம்

மிகவும் எளிமையான இந்த வழிபாட்டை நம்பிக்கையுடன் செய்வதன் மூலம் வாராகி அம்மன், குரு பகவான், குபேர பகவான் இவர்களின் அருளை பரிபூரணமாக பெற்று செல்வ செழிப்புடனும், நலமுடனும் வாழலாம்.

- Advertisement -