கடுமையான பணத்தட்டுப்பாடு, கடுமையான வீண் விரைய செலவை மூன்றே நாட்களில் குறைக்கும் 1 கைப்பிடி கடுகு!

amman
- Advertisement -

மாதம் தோறும் சம்பளம் வாங்குபவர்கள் அவர்களுடைய வருமானத்திற்கு ஏற்றவாறு ஒரு பட்ஜெட்டை போட்டு குடும்பம் நடத்தி வருவார்கள். ஆனால் பட்ஜெட்டையும் தாண்டி எதிர்பாராது வரும் சில வீண் விரைய செலவுகள் அவர்களை கடன் வாங்க வைக்கும். வருமானத்திற்கு மீரிய செலவுகளை சமாளிப்பது என்பது அவ்வளவு எளிமையான விஷயம் அல்ல. ஒரு மாதம் கடன் வாங்கி விட்டால், அந்த கடனை திருப்பித் தர அடுத்த மாத சம்பளத்திலிருந்து பணத்தை எடுப்போம். மீண்டும் அந்த கடனை திருப்பித் தர, அதுக்கு அடுத்த வரக்கூடிய மாத சம்பளத்தில் துண்டு விழும். இப்படியே நம்முடைய வாழ்க்கை திண்டாட்டம் தான்.

இந்தப் பிரச்சனையானது நடுத்தர வர்க்க குடும்பத்தினர் முதல், பெரிய லட்சாதிபதி கோடீஸ்வரர் வரை இருக்கத்தான் செய்கிறது. ஆகவே இதை நினைத்து கவலைப்படாதீங்க. நாட்டில் போடப்படும் பட்ஜெட்டிலும் துண்டு விழும். குடும்ப பட்ஜெட்டிலும் துண்டு விழும். இதை சமாளிப்பதற்கு இன்னும் கொஞ்சம் கூடுதல் உழைப்பை போட்டு, இன்னும் கொஞ்சம் கூடுதலாக பணம் சம்பாதிக்கலாம். சேமிப்பை உயர்த்தலாம்.

- Advertisement -

இது தவிர சில சின்ன சின்ன எளிமையான தாந்திரீக பரிகாரங்களை செய்யலாம். அந்த பரிகாரங்கள் சில சமயம் நமக்கு எதிர்பாராத அதிர்ஷ்டத்தை கொண்டு வந்து சேர்த்து விடும். அப்படி ஒரு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடிய பரிகாரத்தை தான் இன்று நாம் பார்க்கப் போகின்றோம். இந்த பரிகாரம் உங்களுக்கு பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு எளிமையான ஒரு தீர்வை கொடுக்கும்.

வீண் விரய செலவை குறைக்கும் கடுகு தாந்திரீகம்:
இந்த பரிகாரத்திற்கு நமக்கு முதன்மையாக தேவைப்பட போகும் பொருள் கடுகு, ஒரு பேப்பர், ஒரு நீல நிற பேனா இருந்தால் போதும். செவ்வாய்க்கிழமை தான் இந்த பரிகாரத்தை கட்டாயம் செய்ய வேண்டும். அப்போதுதான் பலன் உடனடியாக கிடைக்கும். செவ்வாய்க்கிழமை காலையிலேயே எழுந்து சுத்தபத்தமாக குளித்து விடுங்கள்.

- Advertisement -

ஒரு சின்ன பிளாஸ்டிக் டப்பாவோ சில்வர் டப்பாவோ தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். அது உங்களுடைய விருப்பம். மூடி போடும் படி அந்த டப்பா இருக்க வேண்டும். தேவையான அளவு கடுகு எடுத்துக்கோங்க. ஒரு பேப்பரை எடுத்து அதில் உங்களுடைய பண கஷ்டத்தை எழுதுங்கள். எந்த பண கஷ்டமாக இருந்தாலும் எழுதலாம். கடன் சுமை குறைய வேண்டும். அடகு வைத்த நகை மீட்க வேண்டும். வருமானம் அதிகரிக்க வேண்டும். வீண் செலவு குறையணும் மருத்துவ செலவு குறையணும். நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும். என்று உங்கள் கோரிக்கையை அந்த பேப்பரில் ஒரு வரியில் எழுத வேண்டும். ஒரு கோரிக்கையாக இருக்கட்டும்.

குலதெய்வத்தை மனதார வேண்டிக் கொண்டு முதலில் எடுத்து வைத்திருக்கும் கடுகை, ஒரு கைப்பிடி அளவு எடுத்து அந்த டப்பாவுக்குள் போடுங்கள். எழுதி வைத்திருக்கும் காகிதத்தை மடித்து அந்த கடுகுக்கு மேல் வையுங்கள். மீண்டும் ஒரு கைப்பிடி அளவு கடுகை அந்த டப்பாவுக்குள் போட்டு விடுங்கள். பேப்பர் வெளியே தெரிய கூடாது. கடுகில் மறைந்திருக்க வேண்டும். டப்பாவை மூடிவிடுங்கள். இதை எடுத்து அப்படியே சமையல் அறையில் அலமாரியில் மளிகை பொருட்களோடு சேர்த்து வைத்து விடுங்கள். அவ்வளவுதான்.

- Advertisement -

செவ்வாய்க்கிழமை செவ்வாய் ஹோரையான காலை 6 மணியிலிருந்து 7, மதியம் 1 மணியிலிருந்து 2, இரவு 8 மணியிலிருந்து 9 மணி, இந்த மூன்று மணி நேரத்தில் தான் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். இந்த பரிகாரத்தை ஆண்களும் செய்யலாம். பெண்களும் செய்யலாம். இப்படி தயார் செய்து வைத்த கடுகு டப்பாவை டிஸ்டர்ப் பண்ணாதீங்க. அப்படியே விட்டுருங்க. பரிகாரம் செய்ய டப்பாவில்லிருந்து எடுத்து போட்டு கடுகை சமைக்கக்கூடாது அதையும் ஜாக்கிரதையாக பார்த்துக்கோங்க. நீங்கள் இந்த பரிகாரத்தை செய்தீர்கள் என்று வீட்டில் இருக்கும் ஆட்களைத் தவிர வெளியில் இருக்கும் மற்றவர்களுக்கு தெரிய கூடாது.

இதையும் படிக்கலாமே: வாழ்க்கையில் இனி சேர்ந்து வாழவே முடியாது என்று சொல்லிப் பிரிந்த கணவன் மனைவி கூட இணைந்து இன்பமாய் இல்லற வாழ்க்கை தொடங்க இந்த மந்திரத்தை தினமும் ஜெபித்தால் போதும்.

அவ்வளவுதான். இந்த பரிகாரத்தை செய்து வைத்த மூன்று நாட்களில் உங்கள் பண பிரச்சினைகளுக்கு ஒரு வழியை இந்த பிரபஞ்சம் காட்டிக் கொடுக்கும் என்பது நம்பிக்கை. அந்த கடுகுடப்பா அப்படியே இருக்கட்டும். 6 மாதத்திற்கு ஒரு முறை பழைய கடுகை செடிகொடுகளுக்கு கீழே தூவி விட்டு, அந்த பேப்பரை கிழித்து கால் படாத இடத்தில் போட்டு விடுங்கள். உங்களுடைய பிரச்சனைகளுக்கு இந்த ஆறு மாதத்திற்குள் முழுமையான தீர்வு கிடைக்கும். பிரச்சனைகள் தீர மேற்கொள்ள வேண்டிய முயற்சிகளை நீங்கள் செய்ய வேண்டும். சும்மாவே இருந்தா பரிகாரம் நமக்கு எதையுமே தராது. முயற்சிகளில் வரக்கூடிய தடைகளை தகர்ப்பதற்கே இந்த பரிகாரம் நமக்கு சொல்லப்பட்டுள்ளது. நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன ஆன்மீகம் சார்ந்த தாந்திரீக பரிகாரத்தை பின்பற்றி பலன் பெறலாம் என்ற தகவலோடு இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -