செல்வ வளத்தை தரும் பிரதோஷ வழிபாடு

sivan kuberar manthiram
- Advertisement -

பிரதோஷ வழிபாட்டு தினத்தில் அன்றைய நாள் முழுவதும் சிவபெருமானை நினைத்து அவருடைய நாமத்தை சொல்லி ஜெபிப்பதே நமக்கு பெரும் செல்வத்தைப் பற்றிய பாக்கியத்தை தரும். அத்தகைய பிரதோஷ நாளானது இன்று புதன்கிழமையுடன் வந்திருப்பது மேலும் நல்ல பலன்களை தருவதாக அமைந்துள்ளது.

இந்த பிரதோஷ தினத்தை குபேர பிரதோஷம் என்றும் அழைப்பார்கள் இன்றைய தினத்தில் சிவபெருமானையும் குபேரரையும் ஒரு சேர நினைத்து வணங்கும் போது நம்முடைய பாவங்கள் தொலைவதுடன் செல்வங்கள் சேர்ந்து நிம்மதியாக வாழ முடியும் என்று சொல்லப்படுகிறது. அந்த வழிபாட்டை பற்றி ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

செல்வ வளம் தரும் குபேர பிரதோஷ வழிபாடு

முதலில் இந்த பிரதோஷ தினத்தை குபேர பிரதோஷம் என்று சொல்வதற்கான காரணத்தை தெரிந்து கொள்வோம். குபேரர் தீவிரமான சிவ பக்தர் சிவபெருமானை சிந்தையிலும் செயலிலும் நிறுத்தி தீவிர தவத்தை செய்து இந்த செல்வதிபதி பதவியை அடைந்ததாக புராணங்கள் சொல்கிறது. அத்தகைய பதவியை சிவபெருமான் குபேரருக்கு அளித்த நாளானது புதன்கிழமை.

ஆகையால் தான் புதன்கிழமையில் வரக்கூடிய பிரதோஷத்தை குபேர பிரதோஷம் என்று சொல்வார்கள். இந்தப் பிரதோஷ தினத்தில் சிவபெருமானை விரதம் இருந்து வழிபடுபவர்கள் எப்பொழுதும் போல வழிபடுங்கள். மாலை நேரத்தில் ஆலயம் சென்று வழிபாடு செய்பவர்கள்.

- Advertisement -

அதே போல் இந்த பிரதோஷ வழிபாட்டை வீட்டிலிருந்து செய்பவர்கள் மாலை பிரதோஷ வேளையில் சிவபெருமானை நினைத்து வழிபாடு செய்யலாம். அதற்கு ஒரு வெற்றிலையில் முதலில் விநாயகரை மஞ்சளால் பிடித்து வைத்துக் கொள்ளுங்கள். அதே போல் சிவலிங்கம் போன்ற இன்னொரு உருவத்தையும் மஞ்சளால் பிடித்து வைத்து விடுங்கள்.

சிவலிங்கத்தை சுற்றிலும் பச்சைப்பயிறு போட வேண்டும் புதன்கிழமை வந்திருப்பதால் அன்றைய நாளுக்குரிய தானியமான பச்சைப் பயிரை வைத்து வணங்குவது சிறப்பு. மஞ்சளால் பிடித்து வைத்த சிவபெருமானுக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம், விபூதி, வில்வம் போன்றவற்றால் அபிஷேகம் செய்யுங்கள். அத்துடன் ஓம் யட்ச ராஜாய நமஹ என்ற நாமத்தை 108 முறை சொல்லுங்கள்.

- Advertisement -

மாலை வேளையில் இந்த பூஜை எல்லாம் முடிந்த பிறகு இரவு விரதம் இருப்பவர்கள் விரதத்தை முடித்துக் கொள்ளுங்கள். இரவு உறங்குவதற்கு முன்பாக ஒரு நோட்டில் ஓம் சிவ சிவ நம ஓம் என்ற இந்த மந்திரத்தை 27 முறை எழுதுங்கள். இப்படி எழுதும் வேலையில் சிவபெருமானை மனதார நினைத்து உங்களுடைய செல்வ நிலை உயர அருள் புரிய வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: குலதெய்வம் வீடு தேடி வர நிலை வாசல் பரிகாரம்

அதன் பிறகு நீங்கள் உறங்க சென்று விடலாம். இன்றைய தினத்தில் செய்யக்கூடிய இந்த வழிபாடு நம் பாவங்களை தீர்த்து புண்ணியத்தை தருவதுடன் நம்முடைய வாழ்க்கையின் செல்வ நலனை அதிகரிக்கும் .அதே நேரத்தில் குபேரர் அருளும் சேர்த்தே கிடைக்கும் என்பது கூடுதல் பலன். இந்த வழிபாட்டு முறையில் நம்பிக்கை உள்ளவர்கள் இதை செய்து பலன் அடையலாம்.

- Advertisement -