வாரத்தில் ஒரு நாள் எலுமிச்சம் பழத்தை இப்படி சுற்றி போட்டால், குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் வராது. நிம்மதியாக வாழலாம்.

amman1
- Advertisement -

பல்லாயிரம் வருடங்களுக்கு நாம் இந்த பூமியில் வாழ போவது கிடையாது. சின்ன வாழ்க்கை. அதில் எதற்காக இத்தனை சண்டைகள். கொஞ்சம் விட்டுக் கொடுத்துதான் வாழ்வோமே. வாழ்வில் நிம்மதி மட்டும் தான் நம்முடன் இருக்கக்கூடியது. அதை மட்டும் தான் நம்மால் அனுபவிக்க முடியுமே தவிர, மற்றவை எதுவும் உண்மையல்ல. எல்லாமே நிழல் என்று சொல்லலாம். எல்லாமே மாயை. மாயை நிறைந்த இந்த உலகத்தில் சந்தோஷம் மட்டும்தான் உண்மையானது. அதை அனுபவித்துக் கொண்டே இருந்தால் வாழ்க்கையில் நோய் நொடி இல்லாமல், கஷ்டப்படாமல் துன்பப்படாமல், இன்பமாக வாழலாம்.

இந்த சந்தோஷத்தை அடைய விடாமல் தடுப்பதற்கு மனிதர்களிடத்தில் எத்தனையோ கெட்ட விஷயங்கள் உள்ளது. ஈகோ, முன்கோபம், தகாத வார்த்தைகள், விட்டுக் கொடுக்காத குணம், என்று இப்படிப்பட்ட பேய்களை எல்லாம் உங்கள் மனதில் இருந்து விரட்டி அடித்து விடுங்கள். நிச்சயமாக உங்கள் குடும்பத்தில் சந்தோஷம் வரும்.

- Advertisement -

அதற்காக சண்டையே இல்லாமல் வாழ்ந்தால் வாழ்க்கை அலுத்து போய்விடாதா. கூட சின்ன சின்ன சண்டைகளும் தேவை. ஆனால் ஒரு நாளைக்கு மேல், மிஞ்சிப் போனால் இரண்டு நாளைக்கு மேல் அந்த சண்டைக்கு உயிர் இருக்கக் கூடாது. போனது போகட்டும் என்று வாழ்க்கையை மீண்டும் இயல்பாக வாழ தொடங்க வேண்டும். இதுதான் வாழ்க்கையின் நிதர்சன உண்மை. இதை புரிந்து கொண்டு நீங்கள் வாழுங்கள்.

சரி, இது தவிர கண் திருஷ்டி எதிர்மறை சக்தி என்று இந்த பூமியில் நமக்கு கெட்டது செய்யக்கூடிய விஷயங்களும் இருக்கிறது. இவை எல்லாம் நம்மை துரத்தி துரத்தி அடிக்கும் போது, வீட்டில் பல வகையான பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அதிலிருந்து தப்பிப்பதற்கு ஒரு எளிமையான பரிகாரத்தை தெரிந்து வைத்துக் கொண்டால் நல்லது அல்லவா. அதற்காக ஆன்மீகம் சொல்லும் ஒரு எளிய பரிகாரம் இதோ உங்களுக்காக.

- Advertisement -

குடும்பத்தில் சண்டை வராமல் இருக்க எலுமிச்சம் பழம் பரிகாரம்:
இந்த பரிகாரத்தை ஞாயிற்றுக்கிழமையில் செய்யலாம். அமாவாசை தினத்தில் செய்யலாம். ஆனால் வாரம் தோறும் வரக்கூடிய ஞாயிற்றுக்கிழமையில் இந்த பரிகாரத்தை செய்து விட்டால் குடும்பத்தில் பட்ட கண் திருஷ்டி எல்லாம் நீங்கிவிடும். எதிர்மறை சக்தியால் வீட்டில் சண்டை வருவதற்கு வாய்ப்புகள் குறையும்.

ஒரு எலுமிச்சம் பழம் எடுத்துக் கொள்ளுங்கள். அதை நான்காக நறுக்க வேண்டும். நான்கு துண்டுகளாக கையில் வரக்கூடாது. நான்கு பாகங்களாக வெட்டி அதன் நடுவில் பட்டை பொடி கொஞ்சமாக வைத்து, அதன் மேலே கற்பூரத்தை வைத்து சூடம் ஏற்றி இதை உங்கள் வீடு முழுவதும் காண்பிக்க வேண்டும்.

- Advertisement -

கையில் வைத்தால் சுடும் என்றால், ஒரு சின்ன கிண்ணத்தில் கூட இதை நீங்கள் செட் பண்ணி வைத்துவிட்டு வீடு முழுவதும் இந்த புகையை காண்பித்து விட்டு, உங்களுடைய வீட்டில் இருப்பவர்களை ஒன்றாக அமர வைத்து மூன்று முறை சுற்றி இந்த எலுமிச்சம் பழத்தை வீட்டுக்கு வெளியே தெருவில் கொண்டு போய் நான்கு துண்டுகளாக பிரித்து, நான்கு பக்கம் வீசி விடுங்கள். முடியாது என்பவர்கள் இந்த கற்பூரத்தை மட்டும் நிலைவாசல் படியில் போட்டு இந்த எலுமிச்சம் பழத்தை நான்காக பிரித்து குப்பைத்தொட்டியில் போட்டு குப்பை தொட்டியை வீட்டுக்கு வெளியேவே வைத்து விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: கோடி கடனும் காணாமல் போய் செல்வ செழிப்புடன் வாழ இன்று மாலை வெள்ளிக்கிழமையோடு வந்திருக்கும் வளர்பிறை ஆஷாட பஞ்சமி நாளில் வாராகி அன்னைக்கு இதை கொண்டு அர்ச்சனை செய்யுங்கள்.

கற்பூரமும் சேர்ந்து எறிய கூடிய இந்த புகை உங்களுடைய வீடு முழுவதும் பரவி விட்டால், வீட்டில் துர்சக்தி கண்திருஷ்டி தங்காது. இந்த நெருப்பை வைத்து மனிதர்களுக்கு திருஷ்டி சுத்தி போட்டால், அவர்கள் வாழ்க்கையில் கண் திருஷ்டி மூலம் எந்த ஒரு பிரச்சனையும் வராது. உங்களுடைய குடும்பம் சந்தோஷமாக இருக்க சண்டை சச்சரவு இல்லாமல் வாழ்வதற்கு, இந்த எளிமையான பரிகாரம் ஒன்றே போதும் என்ற கருத்துடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -