பெருமாள் கோவிலுக்கு இப்படி சென்றால், கணவன் மனைவிக்குள் சண்டை சச்சரவு என்பதே வராது. குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும்.

perumal
- Advertisement -

கணவன் மனைவிக்குள் சண்டை வருவது என்பது இயற்கையான ஒரு விஷயம் தான். அந்த கடவுளாகவே இருந்தாலும் மனித பிறவி எடுத்தால், கணவன் மனைவி சண்டையிலிருந்து தப்பிக்க முடியாது. அப்படி இருக்கும்போது மனித பிறவிகளாக இருக்கக்கூடிய நம்முடைய நிலைமை மட்டும் எப்படி இருக்கும். கணவன் மனைவி சண்டைக்கு ஆயுசு என்பது வெறும் ஒரு நாள்தான். அடுத்த நாளே அந்த சண்டையை மறந்து விட்டு சகஜமாக குடும்பத்தை நடத்தி செல்ல வேண்டும். அப்போதுதான் இல்லறம் இனிக்கும். சரி, எவ்வளவு தான் அனுசரித்து சென்றாலும், கணவன் மனைவிக்குள் பிரச்சனை வந்து கொண்டே இருக்கிறது. ஒருவரை ஒருவரால் புரிந்து கொள்ள முடியாமல், வாழ்க்கையை கசப்பான நீங்கள் நடத்தி செல்பவர்களாக இருந்தால் இந்த வழிபாடு உங்களுக்காக.

கணவன் மனைவி சண்டை நீங்க பெருமாள் வழிபாடு:
இந்த வழிபாட்டை மேற்கொள்பவர்களுடைய கணவன் மனைவி உறவு வலு பெறும். திருமணமாகாத பெண்கள் ஆண்களுக்கு சீக்கிரம் திருமணம் நடக்கும். வாரத்தில் ஒரு நாள் வெள்ளிக்கிழமை பெருமாள் கோவிலுக்கு கணவனும் மனைவியும் சேர்ந்து தம்பதி சரீரமாக செல்ல வேண்டும். நீங்கள் செல்லும் போது பெருமாளுக்கும் மகாலட்சுமிக்கும் உங்கள் கைகளால் துளசி எடுத்துக்கொண்டு செல்லுங்கள். இருவரும் சேர்ந்து தம்பதி சரீரமாக ஒன்றாக துளசி இலைகளை பெருமாளுக்கு அர்ச்சனைக்கு கொடுக்க வேண்டும். இரண்டு நெய் விளக்கு. ஒரு நெய் விளக்கு மனைவியின் கையால் ஏற்ற வேண்டும். இன்னொரு நெய் விளக்கு கணவரின் கையால் ஏற்ற வேண்டும்.

- Advertisement -

கணவன் மனைவி இருவருடைய பெயரை சொல்லி பெருமாளுக்கு அர்ச்சனை செய்து கொள்ளுங்கள். பெருமாள் கோவிலில், பெருமாள் பாதங்களில் இருந்து கொஞ்சம் துளசி இலைகள் உங்களுக்கு பிரசாதமாக கொடுக்கப்படும். அதை இருவரும் தம்பதி சரீரமாக வாங்கிக் கொண்டு, இருவரும் சேர்ந்து பெருமாள் முன்பு நமஸ்காரம் செய்து கோவிலை ஐந்து முறை வலம் வர வேண்டும்.

வாரத்தில் ஒரு நாள் கணவன் மனைவியும் சேர்ந்து இந்த வழிபாட்டை மேற்கொண்டு வந்தால், உங்களுக்குள் அன்யூனியம் அதிகரிக்கும். சண்டை வந்தாலும் அந்த சண்டை பெரிய அளவில் விரிசலை ஏற்படாது. குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும்.

- Advertisement -

கணவன் மனைவி இரண்டு பேரும் சண்டையில் பிரிந்து விட்டீர்கள் என்றாலும், மீண்டும் இல்லற வாழ்க்கையில் இரண்டு பேரும் இணைய வேண்டும் என்ற எண்ணம் இருவரில் யாராவது ஒருவர் மனதில் இருந்தாலும் சரி, வாரம் ஒரு முறை வெள்ளிக்கிழமை நீங்கள் தனியாக சென்று பெருமாள் கோவிலில், உங்கள் வாழ்க்கைத் துணை உங்களுடன் ஒன்றாக இருப்பதாக மனதார நினைத்து, இந்த வழிபாட்டை மேற்கொண்டாலும் பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர்வதற்கு நிறையவே வாய்ப்புகள் உள்ளது.

இதையும் படிக்கலாமே: சனிக்கிழமைகளில் இந்த ஏழு பொருட்களை தவறியும் பிறருக்கு கொடுத்து விடாதீர்கள். இதனால் தீராத துன்பத்திற்கு ஆளாவதுடன், அதிஷ்டம் என்பதே உங்க வாழ்க்கையில் இனி வரவே வராது.

திருமணம் ஆகாத ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி, இதேபோல துளசி இலைகளை பெருமாளுக்கு வாங்கிக் கொடுத்து மனதார நல்ல வாழ்க்கை அமைய வேண்டும் என்ற பிரார்த்தனை செய்து கொண்டு, ஐந்து முறை கையில் துளசியை வைத்துக்கொண்டு, கோவிலை வலம் வந்தால் உங்களுடைய வேண்டுதல் அப்படியே பலிக்கும். நீங்கள் எதிர்பார்த்ததை விட நல்ல இடத்தில் உங்களுக்கான வாழ்க்கை துணை அமையும். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன ஆன்மீகம் வழிபாட்டை பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -