ஒரே 1 வெற்றிலையை வீட்டில் இப்படி வைத்தால் கணவன் மனைவிக்குள் இருக்கும் அன்பு எப்போதும் காணாமல் போகாது.

fight3
- Advertisement -

கல்யாணம் செய்த முதல் நாள் கணவன் மனைவிக்குள் இருந்த அந்த அன்னியூன்யம், பாசம், புரிதல், விட்டுக்கொடுத்தல், காதல், அன்பு, எப்படி இருந்ததோ, அவை அனைத்தும் வாழ்வின் இறுதி நாள் வரை தொடர வேண்டும். ஆசை அறுபதனால் மோகம் முப்பது நாள் என்று சொல்லுவார்கள். அந்த இல்லற வாழ்க்கை முடிந்தவுடன் ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்க்கையில் ஒரு வெறுமை வரத் தொடங்கும். அந்த வெறுமையைத் தாண்டி எவன் ஒருவன் வெளியே வருகின்றானோ, அவன் இல்லற வாழ்க்கையில் ஜெயித்து விடுவான். இது ஒரு நிதர்சனமான உண்மை.

காலமும் சூழ்நிலையும் ஒரு மனிதனுக்கு எப்போதும் ஒரே மாதிரி இருப்பதில்லை. திருமணம் நடக்கும் போது இருவருக்குள் வெறும் அன்பு காதல் பாசம் மட்டும் இருந்தால் போதும். ஆனால் திருமணம் நடந்து முடிந்த பின்பு இவற்றையெல்லாம் ஓவர் டேக்ஸ் செய்யும் வகையில், பொறுப்பு நமக்குள் வந்துவிடுகிறது. அடுத்தடுத்து குழந்தை, செலவு என்று நம்மை பொறுப்புகள் தொடர தொடங்கிவிடும். அப்படி வாழ்க்கையில் மாற்றம் ஏற்படும் போது நம்முடைய குணத்திலும் ஒரு சில மாற்றங்கள் ஏற்படும்.

- Advertisement -

இவை எல்லாவற்றையும் புரிந்து கொண்டு கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுத்து அனுசரித்து செல்லும்போதுதான் வாழ்க்கை இனிமையாக இருக்கும். கல்யாணத்திற்கு முன் நீ இப்படி இல்லை, காதலிக்கும் போது நீ இப்படி இல்லை, திருமணம் ஆகி இவ்வளவு மாறிவிட்டாய் என்று சண்டை போடுவதில் ஒரு அர்த்தமும் கிடையாது. கல்யாணமான முதல் நாள் நம் வாழ்க்கை சூழ்நிலை எப்படி இருந்தது, இன்று நம்முடைய வாழ்க்கை சூழ்நிலை எப்படி இருக்கிறது, என்று சற்று சிந்தித்துப் பாருங்கள். ஒருவரை ஒருவர் குறை சொல்லிக் கொள்ள வேண்டாம். இப்படிப்பட்ட பிரச்சனைகள் எல்லாம் ஒரு சராசரி குடும்பத்தில் வரத்தான் செய்யும். அதை அனுசரித்து சென்றால்தான் இல்லறம் இனிக்கும்.

கணவன் மனைவி ஒற்றுமையாக வாழ வெற்றிலை பரிகாரம்:
காற்று புகாத மூடி போட்ட டப்பா ஒன்று தேவை. ஒரு வெற்றிலையை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் கணவன் பெயர், மனைவி பெயர் எழுதி சுருட்டி அந்த டப்பாவில் போட்டு மூடி வைத்தால் கணவன் மனைவிக்குள் சண்டை சச்சரவு வராது. ஒற்றுமை அதிகரிக்கும். இதே பரிகாரத்தை இன்னும் கொஞ்சம் கூடுதல் பவர் கொடுத்து செய்யலாம். கணவனுடைய போட்டோ மனைவியுடைய போட்டோ இரண்டும் ஒன்று சேர்ந்தது போல புகைப்படங்கள் இருக்கும் அல்லவா அந்த புகைப்படத்தை இந்த வெற்றிலை டப்பாவுக்கு உள்ளே போட்டு வைத்தால் இன்னும் சிறப்பு.

- Advertisement -

வெற்றிலை இரண்டு நாட்களில் வாடிப்போகும். அப்போது பழைய வெற்றிலையை எடுத்து கால் படாத இடத்தில் போட்டுவிட்டு மீண்டும் புதிய வெற்றிலையை வைத்து இரண்டு பேரின் பெயரை எழுதி அந்த டப்பாவுக்குள் போட்டு வைக்கலாம். இந்த டப்பாவுக்கு உள்ளே ஒரு சின்ன துண்டு பச்சை கற்பூரத்தை போட்டு வைக்கலாம். தவறு கிடையாது. அந்த டப்பா வாசம் நிறைந்த டப்பாவாகவே இருக்கும். நேர்மறை ஆற்றலை ஈர்க்கக்கூடிய சக்தி அதற்கு உண்டாகும்.

இதையும் படிக்கலாமே: இந்த திலகத்தை நெற்றியில் இட்டுக் கொண்டால் அடுத்தடுத்த தோல்விகள் உங்களை நெருங்காது. எதிர்ப்புகளை கண்டு பயப்படாமல், வாழ்க்கையில் வெற்றி பெற, வெற்றி திலக பரிகாரம் உங்களுக்காக.

இவ்வளவு எளிய பரிகாரத்தை செய்தால் கணவன் மனைவிக்குள் வரும் பெரிய பிரச்சனைகளை சரி செய்ய முடியுமா என்ன. நிச்சயம் முடியும். பிரிந்தவர்களை ஒன்று சேர்க்க கூட இந்த பரிகாரத்தை நாம் முயற்சி செய்து பார்க்கலாம். இதை செய்தால் கணவன் மனைவி குடும்பம் என்ற இல்லற வாழ்க்கையே வெற்றிகரமாக இனிமையாக மாறும் என்பதுதான் நம்பிக்கை. அந்த காலத்திலேயே சித்தர்கள் நமக்கு சொல்லி வைத்துள்ள ஆன்மீகம் சார்ந்த தாந்த்ரீக பரிகாரம் தான் இது. நம்பிக்கை உள்ளவர்கள் பின்பற்றி பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -