கேட்ட வரம் உடனே கிடைக்க வன்னி இலை அபிஷேகம்

sivalingam muruga peruman
- Advertisement -

இந்த உலகையே காத்து ரட்சிக்கும் சிவபெருமானுக்கும் அந்த சிவபெருமானுக்கே பாடம் கற்பித்த அவருடைய மகன் முருகப்பெருமானுக்கு அர்ச்சனை என்றால் அலாதி பிரியம். ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு வழிபாடு பிடிக்கும். அதில் பெருமாளை பொறுத்த வரையில் அலங்கார பிரியர் என்று சொல்வார்கள். ஆனால் சிவபெருமான் அபிஷேக பிரியர். அவருக்கு இந்த அர்ச்சனை அபிஷேகம் ஆராதனைகள் என்றால் மிகவும் பிடிக்கும்.

அதே போல முருகப்பெருமானுக்கும் இத்தகைய வழிபாடுகளே மிகவும் உகந்ததாக சொல்லப்படுகிறது. அந்த அர்ச்சனை அபிஷேகத்தினை பலவகை பொருட்களைக் கொண்டு செய்யலாம். ஆனால் இந்த இரண்டு தெய்வங்களுக்கும் ஒரு பொருளைக் கொண்டு அர்ச்சனையோ, வழிப்பாடோ செய்யும் போது நாம் கேட்பதை மறுக்காமல் உடனே தருவார்கள் என்று சொல்லப்படுகிறது. அது என்ன என்பதை பற்றி ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

கேட்ட வரம் உடனே கிடைக்க

பொதுவாகவே நாம் ஒருவரை பார்க்கப் போனாலும் நம் வீட்டிற்கு ஒருவர் நம்மை பார்க்க வந்தாலோ அவர்களுக்கு பிடித்தமானதை செய்வோம். அதாவது அவருக்கு ஒரு பொருள் பிடிக்கும் என்றால் அந்த பொருளை வாங்கிக் கொண்டு கொடுப்போம். நம் வீட்டிற்கு வந்தால் அதை நாம் செய்து கொடுப்போம். இதன் மூலம் நமக்கும் ஒரு நிம்மதி கொடுப்பவரும் மன மகிழ்ச்சி அடைவார்கள்.

அது போல தான் தெய்வங்களும் எல்லா வழிபாடுகளும் உன்னதமான வழிபாடுகள் தான். ஆனால் அதிலே அவர்களுக்கு மிகவும் பிடித்தமான பொருளைக் கொண்டு வழிபாடு செய்யும் போது அவர்கள் உடனே மனம் மகிழ்ந்து நாம் கேட்டதை கணம் கூட யோசிக்காமல் உடனே தருவார்கள் என்று சொல்லப்படுகிறது. எந்த ஒரு மனிதரும் மகிழ்ச்சியான மனநிலையில் இருக்கும் பொழுது எதைக் கேட்டாலும் தயங்காமல் செய்வார்கள். மனிதர்களே இப்படி எனில் தெய்வத்திற்கு கேட்கவா வேண்டும்.

- Advertisement -

அப்படி முருகப்பெருமானையும் சிவபெருமானையும் மகிழ்விக்க கூடிய அந்த ஒரு இலை வன்னி இலை தான். இந்த இலையை கொண்டு இருவரையும் வழிப்பட்டால் அவர்கள் அத்தனை பேரானந்தம் படுவார்கள் என்று சொல்லப்படுகிறது. நம்முடைய எந்த ஒரு வேண்டுதலும் பலிக்க வேண்டுமெனில் இந்த இலையை கொண்டு அபிஷேகம் அர்ச்சனை வழிபாடு போன்றவை செய்யும் போது அதற்கான பலனை நாம் உடனே பெற முடியும் என்று சொல்லப்படுகிறது.

பொதுவாகவே வன்னி மரம் நேர்மறை ஆற்றலை தரக் கூடிய இறை சக்தி உடையது. ஆரோக்கியத்திற்கு நன்மை தரக்கூடிய பல மருத்துவ குணங்கள் இதில் உள்ளது. இந்த மரம் பல கோயில்களில் தலவிருட்சமாகவே வணங்கப்படுகிறது. அப்படியான இந்த ஒரு இலையை கொண்டு இவர்களை பூஜிக்கும் போது நம்முடைய வேண்டுதல்கள் உடனே பளிக்கக் கூடிய வாய்ப்புகள் உண்டு.

இதையும் படிக்கலாமே: பணத்தட்டுப்பாடு நீங்க பரிகாரம்

ஆனால் இந்த இலையை பிரதோஷ நாளிலோ அல்லது முக்கிய விரத நாட்கள், பூஜை கூறிய நாட்களில் பறிப்பது கூடாது. ஆகையால் நீங்கள் வழிபாடு செய்யப் போகும் நாளை முடிவு செய்த பிறகு அதற்கு முன்பே இந்த இலையை பறித்து பத்திரப்படுத்தி கொள்ளுங்கள். ஒவ்வொரு மனிதனும் இறைவனை சரண் அடைவது தனக்கான வேண்டுதல் பலிக்கவே. அதையும் இப்படி ஒரு எளிமையான முறையில் வழிபாடு செய்து நிறைவேற்றிக் கொள்ளலாம் என்றால் பாக்கியம் தானே. இந்த பதிவில் உள்ள வழிமுறைகளில் உங்களுக்கு விருப்பம் இருப்பின் நீங்களும் பின்பற்றி பலனடையலாம்.

- Advertisement -