குடும்பத்தில் உள்ள தீராத பிரச்சனைகள் நீங்கி கணவன் மனைவி அன்யோனியமாக வாழ இருக்க படுக்கை அறையில் இந்த ஒரு புகைப்படத்தை மாட்டி வைக்க மறக்காதீர்கள்.

husband wife bed room
- Advertisement -

குடும்பத்தில் ஒருவருக்கொருவர் மனம் விட்டுப் பேசும் வாய்ப்பே இல்லாத அளவிற்கு ஒரு எந்திரத்தனமான வாழ்க்கையை தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இது போல ஒரு இக்கட்டான சூழ்நிலையில் குடும்பத்தில் ஒருவருடன் ஒருவர் புரிதல் இல்லை எனில் அந்த குடும்பம் நிம்மதியாக வாழ்வது என்பது கேள்விக்குறி தான். அப்படி ஒரு புரிதலோடு இருந்த போதும் ஏதோ ஒரு எதிர்மறை ஆற்றல் காரணமாகவோ அல்லது மனக்குழப்பம் காரணமாகவும் வீட்டில் எப்போதும் சண்டை சச்சரவுமாக ஒருவரை ஒருவர் பார்த்தாலே எரிந்து விழுவது போல இருந்தால் அந்த குடும்பத்தில் அமைதியை இருக்காது.

இது ஒரு புறம் இருந்தாலும் செய்யும் தொழிலில் முன்னேற்றம் இல்லாமல் இருப்பது, வருமானம் தடைப்படுவது, உடல்நல கோளாறு என அடுக்கடுக்காக சொல்லிக் கொண்டே போகும் அளவிற்கு நாம் தினம் தினம் பிரச்சினைகளை சந்திக்க தான் செய்கிறோம். இவையெல்லாம் சரி செய்வதற்கான ஒரு எளிய அற்புதமான பரிகாரத்தை ஆன்மீகம் நமக்கு தந்திருக்கிறது. அதை என்ன என்று இப்போது நாம் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

குடும்பத்தில் சண்டை சச்சரவு வராமல் இருக்க
பொதுவாக நாம் காலையில் கண் விழிக்கும் பொழுது காணும் முதல் காட்சியோ முதல் நபரோ ஏதேனும் ஒன்று நம் மனதிற்கு பிடித்த மாதிரியாகவும் நல்ல நேர்மறை ஆற்றலை தரக்கூடியதாகவும் இருந்தால் மட்டுமே அந்த நாள் சிறப்பாக இருக்கும். ஏனெனில் காலையில் நாம் சந்திக்கும் பார்க்கும் முதல் நபரோ முதல் விஷயமோ தான் நம்முடைய அந்த நாளை தீர்மானிக்கும்.

அந்த ஒரு சிந்தனையை கருத்தில் கொண்டு தான் இந்த பரிகாரத்தையும் நாம் செய்யப் போகிறோம். இதற்கு நீங்கள் ஏழு வெள்ளை குதிரைகள் ஒரே திசையை நோக்கி ஓடுவது போல உள்ள படத்தை வாங்கி மாட்ட வேண்டும். இந்தப் படத்தை நீங்கள் மேற்கில் மாட்டி குதிரைகள் கிழக்குப் பக்கமாக ஓடுவது போல இருக்க வேண்டும். அதாவது சூரியன் உதிக்கும் திசையை நோக்கி இந்த குதிரைகள் ஓட வேண்டும்.

- Advertisement -

இந்த குதிரையை வரவேற்பறையில் மாட்டுவது நல்லது. இதனால் குடும்பத்தில் பிரச்சனைகள் இருக்காது வீட்டிற்குள் இருக்கும் எதிர்மறை ஆற்றல்கள் நீங்கும் என்பன போல பல விஷயங்களை இது நமக்கு செய்து கொடுக்கும். இருப்பினும் இதை படுக்கையறையில் மாட்டும் போது கணவன் மனைவி இருவருக்கும் பிரச்சனைகள் சுமுகமாக பேசும் அளவிற்கு மனநிலையை இது ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது.

தினமும் காலையில் தூங்கி எழும் போது இந்த குதிரைகள் ஓடுவது போல் உள்ள படத்தை பார்க்கும் பொழுது நமக்கு அந்த நாள் நல்ல நேர்மறையான ஆற்றலுடன் துவங்குகிறது. அந்த நாள் முழுவதும் நமக்கு மனக்குழப்பங்கள் இல்லாமலும் பணவரவிற்குமான நாளாக கூட திகழ இது உதவி செய்கிறது. அது மட்டும் இன்றி இந்த குதிரைகள் பின்புறம் சூரியன் உதிப்பது போல இருந்தால் அது மேலும் பல விசேஷங்களை தரும். காலையில் எழுந்தவுடன் சூரிய உதயத்தை பார்ப்பது எவ்வளவு நல்லதோ அதை விட பல மடங்கு நல்லது சூரிய உதயத்துடன் கூடிய இந்த வெள்ளை குதிரைகள் ஓடும் படத்தை பார்ப்பது.

இதையும் படிக்கலாமே: வீட்டில் மகாலட்சுமி தேவி நிரந்தரமாக வாசம் செய்ய செவ்வாய், வெள்ளியில் தவறாமல் செய்ய வேண்டியது என்ன? காலம் காலமாக நம் முன்னோர்கள் செய்து வந்தது நாம் செய்கிறோமா?

இந்தப் படத்தை பார்ப்பதால் எல்லா பிரச்சனைகளும் சரியாகி விடுமா? என்றால் இந்த படத்தை நாம் பார்க்கும் போது நம்முடைய மனம் அமைதியாகவும் தெளிவாகவும் நல்ல நேர்மறை சிந்தனை உடையதாக இருக்கும். இது போல இருந்தாலே பல பிரச்சனைகள் வராமல் தடுக்க உதவியாக இருக்கும். இந்த பரிகார முறையில் நம்பிக்கை உள்ளவர்கள் தாராளமாக முயற்சி செய்து பார்க்கலாம் என்ற தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -