குலதெய்வம் வீட்டில் இல்லையா? இதை அறிவது எப்படி? குலதெய்வம் உடனே உங்க வீட்டிற்கு வர நீங்க என்ன செய்யனும் தெரியுமா?

kuladheivam-karpooram
- Advertisement -

குலம் காக்கும் குலதெய்வம் எப்பொழுதும் எல்லோருடைய வீட்டிலும் நீக்கமற குடியிருப்பதாக சாஸ்திரங்கள் குறிப்பிடுகிறது. ஆனால் குலதெய்வ வழிபாடு முறையாக செய்யாதவர்கள் இல்லத்தில் குலதெய்வம் தாங்காது. இதை எப்படி நாம் அறிவது? நம்முடைய குலதெய்வம் நம் வீட்டில் இருக்கிறதா? இல்லையா? என்பதை அறிந்து இல்லை என்றால் குலதெய்வத்தை வீட்டிற்கு எளிதாக வரவழைப்பது எப்படி? என்பதை தான் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தொடர்ந்து அறிந்து கொள்ள இருக்கிறோம்.

குலதெய்வம் வீட்டில் இருக்கிறதா? இல்லையா? என்பதை அறிய சில எளிய பரிசோதனைகளை நீங்கள் செய்து பார்க்கலாம். குலதெய்வம் மட்டுமல்ல எந்த ஒரு நல்ல சக்திகளும் இல்லாத இல்லங்களில் எந்த உயிரினங்களும் வசிப்பது கிடையாது. குறிப்பாக பல்லி போன்ற சிறு உயிரினங்கள் உங்கள் வீட்டில் இருந்தாலே தெய்வ சக்தி இருப்பதை நீங்கள் அறியலாம். கௌலி கத்தும் சத்தம் அடிக்கடி வீட்டில் கேட்டால் குலதெய்வம் உங்கள் இல்லத்தில் இருப்பதாக நீங்கள் உணர முடியும்.

- Advertisement -

அடிக்கடி விபூதி வாசம் அல்லது கற்பூரவாசம் வீசினால் இதுவும் குலதெய்வம் இருப்பதை காட்டும் அறிகுறி ஆகும். நீங்கள் எந்த ஒரு பூஜையும் செய்யாத பட்சத்தில் இவ்வாசனைகளை நீங்கள் நுகர்ந்தால் குலதெய்வத்தை உணருங்கள். மேலும் காக்கைக்கு சாதம் வைக்கும் பொழுது அது உடனே வந்து எடுத்து சாப்பிட்டால் பித்ருக்களின் ஆசீர்வாதம் இருப்பதை நீங்கள் உணர முடியும்.

அதுவே சிறிது நேரத்திற்கு பிறகு உங்கள் வீட்டை சுற்றி முற்றி பார்த்துவிட்டு எடுத்து சாப்பிட்டால் குலதெய்வம் இருப்பதை நீங்கள் உணர முடியும். பித்ருக்கள் ஆசிர்வாதமும், குலதெய்வ ஆசிர்வாதமும் இல்லாதவர்கள் காக்கைக்கு சாதம் வைத்தால் காக்கைகள் அருகில் இருந்தாலும் அவை வந்து உங்களுடைய உணவை எடுத்துக் கொள்வதில்லை.

- Advertisement -

குலதெய்வ ஆசிர்வாதம் இல்லை என்று நினைப்பவர்களும், குலதெய்வம் வீட்டில் இல்லை என்று யோசிப்பவர்களும் இந்த ஒரு எளிய விஷயத்தை தினமும் செய்து வருவதால் குலதெய்வத்தை எளிதாக வீட்டில் வரவழைத்து விடலாம். பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து வெறும் வாயை மட்டும் கொப்பளித்து, முகம் கழுவி கொள்ளுங்கள். பிறகு வாசல் படிக்கு சென்று இரண்டு கற்பூரத்தை ஏற்றி எரிய விடுங்கள்.

கற்பூரம் முழுவதுமாக எரிந்து அணைந்த பின்பு நீங்கள் வழக்கம் போல எல்லா வேலைகளையும் செய்யலாம். இது போல தொடர்ந்து ஒவ்வொரு நாளும் செய்து வருவதன் மூலம் உங்களுடைய குலதெய்வம் சீக்கிரமே உங்கள் வீட்டிற்கு வந்து உங்களை ஆசீர்வதிப்பதாக சாஸ்திரங்கள் கூறுகிறது. இது மட்டும் அல்லாமல் பூஜை அறையில் ஒரு கலசத்தில் தண்ணீரை நிரப்பி வைக்கலாம். அதன் அருகில் சிறிய கண்ணாடி ஒன்றை வையுங்கள்.

இதையும் படிக்கலாமே:
பணத்தை எப்போதும் இப்படி வைத்தால் உங்களிடம் பணம் இல்லை என்று சொல்ல க்கூடிய சூழ்நிலை வரவே வராது. பணம் எப்போதும் கையில் புழங்க நம் முன்னோர்கள் பயன்படுத்திய எளிய தாந்த்ரீக வழி.

கலசமும், கண்ணாடியும் அருகருகே வைத்து முழு மனதார குலதெய்வத்தை நினைத்து வழிபடுங்கள். அதற்கு மஞ்சள் குங்குமம் இட்டு, தூப, தீபம் காண்பியுங்கள். குலதெய்வம் வீட்டிற்கு வர வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள். எப்பொழுதும் குலதெய்வ அருள் இருந்தால் தான் நமக்கு வெற்றி மேல் வெற்றி வந்து சேரும் எனவே உங்களுடைய குலதெய்வம் எது? என்பதை அறிந்து குலதெய்வத்தை வீட்டிற்கு வரவைத்து, வாரம் தோறும் குலதெய்வத்தை சாஷ்டாங்கமாக கீழே விழுந்து வணங்கி நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வாருங்கள், சகலமும் உங்கள் வசமாகும்.

- Advertisement -