குலதெய்வத்தின் அருளும் சக்தியும் அதிகரிக்க பரிகாரம்

thaneer pariharam
- Advertisement -

ஒருவருக்கு குலதெய்வத்தின் அருள் பரிபூரணமாக இருந்தால் அவருடைய வாழ்க்கையில் பல வெற்றிகளை அவரால் பெற முடியும். அதே சமயம் குலதெய்வத்தின் அருள் இல்லை என்றால் எதற்கெடுத்தாலும் தடைகளும் தாமதங்களும் ஏற்பட்டு கொண்டே இருக்கும். அதோடு மட்டுமல்லாமல் குலதெய்வத்தை வணங்காமல் விட்டு விடுவதன் மூலம் குலதெய்வ சாபம் ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

இப்படி குலதெய்வ சாபம் ஏற்பட்டு இருந்தால் நம்முடைய வாழ்க்கையில் எந்தவிதமான நியாயமான மகிழ்ச்சிகள் எதுவும் ஏற்படாது. இப்படி குலதெய்வத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் நீங்கவும் அதே சமயம் குலதெய்வத்தின் அருளும் சக்தியும் அதிகரிக்கவும் செய்யக்கூடிய எளிமையான பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

குலதெய்வத்தின் அருளை பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் குலதெய்வ வழிபாடை மேற்கொள்ள வேண்டும். என்னதான் குலதெய்வ வழிபாடை மேற்கொண்டாலும் குலதெய்வத்தின் அருள் நமக்கு கிடைத்தாலும் நம் வீட்டில் குலதெய்வத்தின் சக்தியானது நிலையாக நிலைத்திருந்தால் தான் வீட்டில் அனைத்து விதமான நன்மைகளும் ஏற்படும். அப்படி குலதெய்வத்தின் சக்தியை அதிகரிப்பதற்கும் அதே சமயம் குலதெய்வத்தின் அருளை பெறுவதற்கும் செய்யக்கூடிய ஒரு எளிமையான பரிகாரம்.

இந்த பரிகாரத்தை நம்முடைய வீட்டு பூஜை அறையில் தான் செய்ய வேண்டும். குடும்பத் தலைவர் அல்லது தலைவி தான் செய்ய வேண்டும். யார் இந்த பரிகாரத்தை செய்கிறார்களோ அவர்களுடைய ராசிக்கு சந்திராஷ்டமம் இல்லாத நாளாக பார்த்து தேர்வு செய்து கொண்டு இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். அவ்வாறு ராசி தெரியாது சந்திராஷ்டமம் பார்க்க தெரியாது என்று நினைப்பவர்கள் ஆண் குலதெய்வத்தை வழிபடுபவர்களாக இருந்தால் அமாவாசை தினத்திலும், பெண் தெய்வத்தை வழிபடுபவர்களாக இருந்தால் பௌர்ணமி தினத்திலும் இந்த பரிகாரத்தை செய்ய தொடங்கலாம்.

- Advertisement -

தொடர்ந்து 27 நாட்கள் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். இந்த பரிகாரத்திற்கு நமக்கு புதிதாக ஒரு டம்ளர் வேண்டும். இது கண்ணாடி டம்ளராக இருந்தால் மிகவும் சிறப்பு. பரிகாரம் செய்யக்கூடிய அந்த நாளில் காலையில் எழுந்து குளித்து முடித்துவிட்டு எப்பொழுதும் போல் வீட்டு பூஜை அறையில் விளக்கேற்றி பூஜை செய்து முடித்து விட வேண்டும். இந்த பரிகாரத்தை பிரம்ம முகூர்த்த வேளையில் தான் செய்ய வேண்டும்.

பூஜையை நிறைவு செய்த பிறகு புதிதாக வாங்கிய டம்ளரை எடுத்து அதை சுத்தமாக கழுவி விட்டு அது நிறைய சுத்தமான குடிக்கின்ற தண்ணீரை பிடித்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது வீட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்திருப்போம் அல்லவா அதற்கு முன்பாக ஒரு விரிப்பை விரித்து அதன் மேல் அமர்ந்து கொண்டு தீபத்தை பார்த்தவாறு இடது கையில் அந்த டம்ளரை வைத்துக்கொண்டு வலது கையால் அந்த டம்ளரை மூடி விட வேண்டும்.

- Advertisement -

உங்களுடைய குலதெய்வத்தின் பெயரை 27 முறை நிறுத்தி நிதானமாக மனதார உச்சரிக்க வேண்டும். இப்படி உச்சரித்து முடித்த பிறகு இந்த தண்ணீரை குடித்து விட வேண்டும். இப்படி தண்ணீரை வைத்து குலதெய்வத்தின் பெயரை உச்சரிக்கும் பொழுது அந்த பெயருக்குரிய சக்தியானது அந்த தண்ணீரில் இறங்கும். அந்த தண்ணீரை நாம் குடிப்பதன் மூலம் குலதெய்வத்தின் சக்தியை நம்மால் உணர முடியும். இந்த முறையில் தொடர்ந்து 27 நாட்கள் செய்து வர கண்டிப்பான முறையில் குலதெய்வத்தின் சக்தி நம் வீட்டில் நிரந்தரமாக நிலைத்திருக்கும்.

இதையும் படிக்கலாமே: நீண்ட நாட்களாக நினைத்தது நடக்க விநாயகர் வழிபாடு

மிகவும் எளிமையான இந்த ஒரு டம்ளர் தண்ணீர் பரிகாரத்தை நாமும் நம்பிக்கையுடன் செய்து குலதெய்வத்தின் அருளையும் சக்தியையும் பெருக்கிக் கொள்வோம்.

- Advertisement -