நீண்ட நாட்களாக நினைத்தது நடக்க விநாயகர் வழிபாடு

vinayagar valipadu
- Advertisement -

ஒரு நாள் தொடங்கும் பொழுதே அந்த நாளில் என்ன என்ன செய்ய வேண்டும் என்று நினைத்து வைத்திருப்போம். அவை அனைத்தையும் செய்து முடித்து விடுவோமா என்று யோசித்துப் பார்த்தால் இல்லை என்ற பதில் தான் வரும். நினைத்தவை அனைத்தையும் நம்மால் எப்பொழுதுமே செய்ய முடியாது. ஆனால் ஒரு சில காரியங்கள் மிகவும் முக்கியமான காரியங்களாக இருக்கும் பொழுது அந்த காரியங்களை செய்ய வேண்டும் என்ற ஆவலுடன் முயற்சி செய்வோம்.

பல பேருக்கு பல நேரங்களில் அந்த முயற்சிகளில் வெற்றிகள் கிடைக்கும். சிலருக்கு தோல்விகள் ஏற்படும். தோல்வியை கண்டு துவண்டு விடாமல் மறுநாளோ, மறுவாரமோ, மறு மாதமும் அதே முயற்சியை மறுபடியும் செய்து பார்ப்பார்கள். இவ்வாறு தொடர்ச்சியாக முயற்சி செய்து வெற்றி அடைந்தவர்கள் பலர் இருக்கிறார்கள். பல தோல்விகளை கண்டும் துவளாமல் முயற்சியை மட்டுமே மேற்கொண்டு வெற்றி பெற்றவர்கள் தான் இன்றைய வாழ்க்கையில் பெரிய அந்தஸ்தில் இருக்கக்கூடிய நபர்களாக திகழ்கிறார்கள்.

- Advertisement -

எவ்வளவுதான் முயற்சி செய்தும் அதில் வெற்றி கிடைக்கவில்லை என்ற ஒரு சூழ்நிலை வரும் பொழுது அவ்வளவுதான் இது நடக்காது என்ற முடிவு நமக்கு வரும். அப்படி முடிவு வந்த பிறகு கூட அந்த காரியம் வெற்றி அடைய வேண்டும் என்றால் விநாயகப் பெருமானை எந்த முறையில் வழிபட வேண்டும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

காரிய வெற்றி ஏற்பட வேண்டும் என்று நாம் நினைத்தால் நம் நினைவிற்கு முதலில் வரக்கூடிய தெய்வமாக திகழ்ந்தவர் விநாயகப் பெருமானே. இது பலரும் அனுபவபூர்வமாக உணர்ந்த உண்மையே. விநாயகப் பெருமானை நினைத்து விட்டு நாம் மேற்கொள்ளும் முயற்சிகளில் நல்ல பலன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட விநாயகப் பெருமானை நாம் எந்த முறையில் வழிபட்டால் நடக்காது என்று நினைத்த காரியமும் நடக்கும் என்று பார்ப்போம்.

- Advertisement -

இந்த வழிபாட்டை நாம் புதன் கிழமை அன்று தான் செய்ய வேண்டும். அருகில் இருக்கக்கூடிய விநாயகர் ஆலயத்திற்கு செல்ல வேண்டும். அவ்வாறு செல்லும் பொழுது மஞ்சள் நிற பேப்பரை உடன் எடுத்துக் கொண்டு செல்ல வேண்டும். அங்கு விநாயகப் பெருமானுக்கு நெய் தீபம் ஏற்றி வைத்து அவருக்கு முன்பாகவே அமர்ந்து அந்த மஞ்சள் நிற பேப்பரில் உங்களுடைய வேண்டுதலை எழுத வேண்டும்.

அதாவது எந்த காரியம் தடைப்பட்டு நடக்காமல் இருக்கிறதோ அந்த காரியம் நடைபெற வேண்டும் என்று எழுத வேண்டும். வேறு எந்த வேண்டுதலையும் எழுதக்கூடாது. பிறகு இந்த பேப்பரை விநாயகப் பெருமானின் பாதத்தில் வைத்துவிட்டு அவருக்கு அருகம்புல் மற்றும் மலர்களை வாங்கி சமர்ப்பித்து விட்டு அவரை மனதார வழிபட்டு எந்த காரியம் நடைபெற வேண்டுமோ அந்த காரியம் விரைவில் நடைபெற வேண்டும் என்று மனதார வேண்ட வேண்டும். பிறகு விநாயகப் பெருமானை மூன்று முறை வலம் வந்து வணங்க வேண்டும்.

- Advertisement -

பிறகு அந்த பேப்பரை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வரவேண்டும் வீட்டில் இருக்கக்கூடிய விநாயகர் படத்திற்கு முன்பு அல்லது சிலைக்கு முன்பு இந்த பேப்பரை வைத்து அதற்கு மேல் ஏழு கொட்டைப்பாக்கை வைக்க வேண்டும். பிறகு விநாயகப் பெருமானுக்காக ஒரு நெய் தீபத்தை ஏற்றி வைத்து மறுபடியும் உங்களுடைய வேண்டுதலை கூற வேண்டும்.

நெய்வேத்தியமாக கற்கண்டு வைக்க வேண்டும். இந்த வழிபாட்டை முடித்த பிறகு அந்த கொட்டை பார்க்கை அதே பேப்பரில் வைத்து நன்றாக மடித்து விநாயகரின் படத்திற்கு முன்பாக வைத்து விடுங்கள். ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை கற்கண்டை நெய்வேத்தியமாக வைத்து தீபம் ஏற்றி அந்த காரியம் நடைபெற வேண்டும் என்று மனதார வழிபாடு செய்ய விரைவிலேயே காரியம் வெற்றி அடையும்.

இதையும் படிக்கலாமே: ஆரோக்கியம் தரும் பிள்ளையார் வழிபாடு

விநாயகரின் மீது முழு நம்பிக்கை வைத்து இந்த வழிபாட்டை செய்பவர்களுடைய வாழ்க்கையில் காரியத்தடைக்கு இடமே இல்லாமல் வெற்றிக்கு மேல் வெற்றி கிடைக்கும்.

- Advertisement -