குலதெய்வ கோவிலுக்கு இந்த 1 பொருளை மட்டும் உங்கள் கையால் வாங்கி கொடுங்கள். உங்கள் குடும்பத்தில் மங்கள காரியமும், சுப நிகழ்ச்சிகளும் ஒன்றன் பின் ஒன்றாக வரிசை கட்டி நிற்கும்.

kuladheivam
- Advertisement -

நம் குலத்தைக் காக்கும் தெய்வத்தை தான் குலதெய்வம் என்று சொல்லுவோம். இந்த குலதெய்வ வழிபாட்டை ஒரு வீட்டில் இருப்பவர்கள் கட்டாயம் மறக்கவே கூடாது. உங்களுடைய வீட்டில் சுபகாரிய நிகழ்ச்சிகளுக்கு தடை உள்ளது. எந்த ஒரு நல்ல காரியத்தையும் நடத்த முடியவில்லை, பிள்ளைகளுக்கு திருமணம் நடந்தால் குழந்தை பாக்கியம் இல்லை, குழந்தை பிறந்திருந்தால் அந்த குழந்தைக்கு ஏதாவது ஒரு பிரச்சனை என்று, தொடர்ந்து வீட்டில் கஷ்டங்கள் வந்து கொண்டே இருந்தால், அதை சரி செய்ய ஆன்மீகம் சார்ந்த இந்த சிறு பரிகாரம் உங்களுக்கு கை கொடுக்கும். உங்கள் வீட்டு குலதெய்வம் எந்த குலதெய்வமாக இருந்தாலும் சரி, இந்த பரிகாரத்தை நீங்கள் செய்யலாம் தவறு கிடையாது.

சுப காரிய தடை நீங்க குலதெய்வத்திற்கு வழங்க வேண்டிய தானம்:
நாம் எல்லோராலும் பணம் கொடுத்து மலிவாக வாங்கக்கூடிய பொருள் வெல்லம். அதை உங்களால் முடிந்த அளவு வாங்கி குலதெய்வ கோவிலுக்கு, உங்கள் கையால் தானம் கொடுக்கலாம். குலதெய்வ கோவிலில் மடப்பள்ளி இருந்தால் அங்கும் தானம் கொடுக்கலாம். ஆக மொத்தம் இந்த வெல்லம் குலதெய்வத்திற்கு பிரசாதம் செய்ய பயன்படுத்தப்பட வேண்டும். குறைந்த அளவு 1 கிலோ வெல்லம் வாங்கலாம். அதிகபட்சம் உங்களுடைய விருப்பம்.

- Advertisement -

எப்போதெல்லாம் குலதெய்வ கோவிலுக்கு போறீங்களோ, அப்போதெல்லாம் வீட்டிலிருந்து வெல்லத்தை வாங்கி வைத்து எடுத்துச் செல்ல வேண்டும். குலதெய்வ கோவில் இருக்கும் இடத்திற்கு சென்று, கடைக்கு சென்று வெல்லம் வாங்க கூடாது. (குலதெய்வ கோவிலுக்கு செல்வதற்கு முன் கூட்டியே கடையிலிருந்து வெல்லத்தை வாங்கி வீட்டில் வைக்க வேண்டும்). அதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

முடிந்தால் மாதம் மாதம் வீட்டில் இருக்கும் ஒருவர் மட்டும் குலதெய்வ கோவிலுக்கு சென்று இந்த வெல்லம் தானம் செய்து வர, உங்களுடைய வீட்டில் எந்த தடையும் இருக்காது. உங்களுடைய வீட்டில் நடக்கும் எல்லா விஷயங்களுமே வெல்லம் போல இனிப்பாக நடந்து முடியும்.

- Advertisement -

அதேபோல வீட்டில் இருப்பவர்களுக்கு ஏதாவது தீராத கடன் சுமை இருக்கிறது. தீராத உடல் உபாதை இருக்கிறது. கரைக்க முடியாத கட்டியிருக்கிறது எனும் பட்சத்தில் இந்த பரிகாரத்தை நீங்கள் முயற்சி செய்து பார்க்கலாம். உங்களுக்கு இருக்கும் கஷ்டங்கள் எல்லாம் தண்ணீரில் கரைந்த வெல்லும் போல கரைந்து போக வேண்டும் என்று குலதெய்வத்தை வேண்டிக் கொள்ளுங்கள்.

குலதெய்வ கோவிலில் குளம் இருந்தால் அந்த குளத்தில் உங்கள் கையாலேயே ஒரு கட்டி வெல்லத்தை போட்டு கரைத்து விடுங்கள். கஷ்டமாக இருந்தாலும், உடல் உபாதைகளாக இருந்தாலும் ஒரு சில நாட்களில் உங்களை விட்டு கரைந்து போய்விடும் கவலையே வேண்டாம்.

- Advertisement -

சில பேர் சொல்லுவார்கள் குலதெய்வ கோவிலுக்கு செல்லக்கூடிய சூழ்நிலையை ஏற்படவில்லை. குலதெய்வ கோவிலுக்கு செல்ல வேண்டும் என்றாலே தடை வந்து விடுகிறது என்று. இப்படிப்பட்டவர்களுக்கு குலதெய்வ கோவிலுக்கு செல்ல சீக்கிரம் வழி பிறக்க இந்த பரிகாரம் கைகொடுக்கும். ஒரு மஞ்சள் துணியை எடுத்துக் கொள்ளுங்கள். வெள்ளைத் துணியை மஞ்சளில் நனைத்து நிழலிலேயே உலர வைத்து, மஞ்சள் துணையாக இருக்கட்டும்.

அதில் சில்லரை காசுகளை ஒவ்வொரு கைப்பிடி அளவு வைக்க வேண்டும். வீட்டில் இருப்பவர்கள் ஒவ்வொருவரின் கையிலும் ஒரு பிடி சிலரை காசை எடுத்து இந்த மஞ்சள் துணியில் வைக்கும் போது, குலதெய்வ கோவிலுக்கு சீக்கிரம் வரவேண்டும் என்று வேண்டிக்கொண்டு, இந்த முடிச்சை கட்டி பூஜை அறையில் வைத்து விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: பத்து ரூபாயை வைத்து உங்களின் பல நாள் பண பிரச்சனைகளை காணாமல் செய்து விடலாம். பல கோடி கடனும் தீர்ந்து பண மழையை பொழிய செய்யும் சக்தி வாய்ந்த பரிகாரம்.

குலதெய்வ கோவிலுக்கு வரும்போது இந்த காணிக்கையை குலதெய்வ கோவிலில் செலுத்தி விடுவதாக வேண்டிக் கொள்ளுங்கள். சீக்கிரம் குலதெய்வ கோவிலுக்கு செல்ல வேண்டிய நேரம் காலம் தானாக கைகூடி வரும். அப்போது மறக்காமல் இந்த மஞ்சள் துணி நாணயம் முடிச்சை கொண்டு போய் குலதெய்வம் உண்டியலில் சேர்த்து விடுங்கள். நல்லதே நடக்கும் என்ற கருத்துடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -