குழந்தையில்லா தம்பதியினருக்கு குழந்தை வரம் கிடைக்க இந்த எளிய பரிகாரத்தை முழு நம்பிக்கையுடன் செய்து வாருங்கள்

baby
- Advertisement -

ஒவ்வொரு குடும்பத்திலும் தங்கள் வாரிசு என்று சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பிள்ளைகள் ஒன்றன்பின் ஒன்றாக பிறகு ஆரம்பிக்கும். வீட்டில் உள்ள வயதானவர்கள் அவர்களை தங்கள் வாரிசுகள் என்று கர்வமாக சொல்லிக்கொள்வார்கள். இவ்வாறு ஒவ்வொரு தம்பதிக்கும் இருக்கும் குழந்தைகள் தான் அவர்களின் அடுத்த வாரிசாக கருதப்படுகிறது. எனவே திருமணமான தம்பதியினரிடம் அந்த குடும்பம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு விஷயம் அவர்கள் எப்பொழுது தங்கள் வாரிசைப் பெற்றுக் கொடுக்கப் போகிறார்கள் என்பது தான்.

ஒரு சிலருக்கு இந்த குழந்தை பாக்கியம் சிறிது காலம் தள்ளிப் போகிறது. இதனால் பல குடும்பங்களில் பிரச்சனைகள் உருவாகிறது. அதிலும் முக்கியமாக கணவன் மனைவி இருவரிடையேயும் கூட சில மனக்கசப்புகள் ஏற்படுகின்றன. இவ்வாறான பிரச்சினைகளுக்கு தீர்வு அளிக்கின்ற வகையில் முருகப்பெருமானிடம் குழந்தை வரம் கேட்டு இந்த எளிய பரிகாரத்தை மட்டும் செய்து பாருங்கள். விரைவில் உங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைத்து விடும்.

- Advertisement -

திருமணமான இரண்டாம் மாதம் முதல் பார்ப்பவர்கள் ஒவ்வொருவரும் புது தம்பதிகளை பார்த்து கேட்கும் கேள்வி என்னவென்றால் ஏதாவது விசேஷம் இருக்கிறதா என்று தான். ஆரம்பத்தில் இந்த கேள்விகள் பெரிதாக தெரிவதில்லை. ஆனால் மாதங்கள் செல்லச் செல்ல பலரும் இதே கேள்வியைத் தொடர்ந்து கேட்கும் பொழுது கணவன் மனைவி இருவருக்குமே இது ஒரு மன உளைச்சலாக மாறிவிடுகிறது.

இதனால் அவர்களுக்கும் பயம் ஏற்பட ஆரம்பிக்கும். அவர்கள் குடும்பத்தாரும் இவர்களை தொல்லை செய்ய ஆரம்பித்து விடுவார்கள். இதனால் சிலரின் திருமண வாழ்க்கையும் பாதிக்கப்படுகிறது. அதிலும் அதிகப்படியான பாதிப்பு பெண்களுக்கு தான் உண்டாகிறது. ஒரு சிலர் இந்தப் பெண் குழந்தை பிறக்க தகுதி இல்லாதவள் என்று பிறந்த வீட்டிற்கும் கூட அனுப்பி வைக்கிறார்கள். இவ்வாறான குடும்ப சிக்கல்கள் தீர, குழந்தை வரம் பெற முருகப்பெருமானிடம் மனதார வேண்டிக்கொண்டு இந்தப் பரிகாரத்தைச் செய்ய துவங்குவோம்.

- Advertisement -

குழந்தை வரம் வேண்டும் என்று நினைப்பவர்கள் அதிகப்படியாக சஷ்டி விரதத்தை தொடர்ந்து செய்து வருவார்கள். ஏனென்றால் சஷ்டி விரதத்தின் போது தான் முருகப்பெருமானின் பிறப்பு இருந்திருக்கிறது. எனவே தன்னை நித்தம் வேண்டிக் கொள்பவர்களுக்கு அவர் குழந்தை வரத்தை அள்ளித் தருகிறார். இதற்காக ஒரு சதுரவடிவ மஞ்சள் நிறத் துணியை எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதில் மூன்று ஜாதிக்காயை வைத்துவிட வேண்டும். இந்த ஜாதிக்காய்க்கு அதனுடன் சேர்த்து வைக்கும் எதை வேண்டுமானாலும் தன்னிடம் ஈர்த்துக் கொடுக்கும் வல்லமை பெற்றது. அவ்வாறு தங்கம் சேர வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த ஜாதிக்காயுடன் தங்கத்தை வைக்கலாம். பணம் வேண்டும் என்று நினைப்பவர்கள் இதனுடன் பணத்தை வைக்கலாம்.

அவ்வாறு குழந்தை வரம் வேண்டும் என்று நினைப்பவர்கள் ஒரு சிறிய பேப்பரில் குழந்தை வரம் வேண்டும் என்று எழுதி, அதனை ஜாதி காயுடன் சேர்த்து வைத்து, இந்த மஞ்சள் நிறத் துணியை ஒரு மஞ்சள் நிற கயிறு கட்டி மூட்டையாக செய்து கொள்ள வேண்டும். பிறகு இந்த மூட்டையை பூஜை அறையில் முருகப்பெருமானின் படத்தின் முன்பு நின்று குழந்தை வரம் வேண்டும் என்று மனதார வேண்டிக்கொண்டு, வைத்துவிட வேண்டும். இதனை செவ்வாய்க்கிழமை அல்லது சஷ்டி தினத்தன்று செய்யும் பொழுது நல்ல பலன் கிடைக்கிறது.

- Advertisement -