தினம் தினம் உங்களை பிடித்த பீடை, கண் திருஷ்டி, எதிர்மறை ஆற்றல் அத்தனையும் உங்களை விட்டு விலகிக் கொண்டே இருக்க வேண்டும் என்றால் குளியலறையில் இந்த 1 பொருளை வைத்தாலே போதும்.

bathroom
- Advertisement -

அன்றாட வாழ்க்கையில் எவ்வளவோ கஷ்டங்களை நாம் அனுபவித்துக் கொண்டு இருக்கின்றோம். எல்லா கஷ்டங்களுக்கும் ஏதோ ஒரு வகையில் கண்ணுக்குத்தெரியாத எதிர்மறை ஆற்றல் தான் காரணமாக இருக்கின்றது. வெளியே செல்கின்றோம், வேலைக்கு செல்கிறோம், கடைக்கு செல்கின்றோம், இப்படி வெளியே செல்லும்போது ஒருவருடைய உடம்புக்குள், கண்ணுக்கு தெரியாத எதிர்மறை ஆற்றல், கண்திருஷ்டி இன்னும் பல கெட்ட சக்திகள் நுழைவதற்கு கூட நிறையவே வாய்ப்பு உள்ளது. பொதுவாகவே அந்த காலத்தில் வெளியில் சென்று வந்தால் கைகால்களை கழுவிக்கொண்டு தான் உள்ளே வரக் கூடிய பழக்கம் இருந்தது.

epsam-salt

நாளடைவில் அதையும் நாம் மறந்து விட்டோம். வீட்டிற்குள் வந்து குளியலறைக்கு சென்று கை கால்களை கழுவ வேண்டிய சூழ்நிலை. நம்முடன் வரக்கூடிய எதிர்மறை ஆற்றல், கை கால்களைக் கழுவும் போது அந்த காலத்தில் வீட்டு வாசலிலேயே நம்மை விட்டுப் போய்விடும். ஆனால் இப்போது நம்முடன் வரக்கூடிய எதிர்மறை ஆற்றலோடு கண்ணுக்கு தெரியாத கிருமிகள் மூலம் பல நோயையும் நம் வீட்டிற்கு எடுத்து வந்து கொண்டிருக்கின்றோம். இதையெல்லாம் வலியுறுத்த தான் கொரானா நமக்கு நல்ல பாடத்தை சொல்லிக் கொடுத்து விட்டு சென்றுள்ளது.

- Advertisement -

சரி, அது போகட்டும் நம் உடலில் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றலை கண்திருஷ்டியை தினம்தினம் நம் உடலில் இருந்து, நீக்க வேண்டும் என்றால் என்ன செய்வது. கல்லுப்பு பொதுவாகவே எதிர்மறை ஆற்றலை தன்னுள் ஈர்த்துக் கொள்ளக் கூடிய பொருள் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயமே. முடிந்தால் தினம் தோறும் நீங்கள் குளிக்கும் தண்ணீரில் ஒரு கைப்பிடி அளவு கல் உப்பை போட்டு குளிக்கலாம். இது பலருக்கும் முடிவதில்லை. சிலர் குளிக்கும் போது தண்ணீரில் உப்பு போட மறந்தும் போகிறார்கள்.

bathroom-freshner

கல் உப்பை தண்ணீரில் போட்டு குளிக்க முடியவில்லை என்றாலும் பரவாயில்லை. ஒரு கண்ணாடி டம்ளரில் அல்லது பீங்கான் பௌலிலோ, நிரம்ப கல் உப்பை போட்டு உங்களுடைய குளியல் அறையில் வைத்து விடுங்கள். சோப்பு ஷாம்பு வைக்கும் அலமாரிகளில் இதை திறந்தபடி வைத்தாலே போதும்.

- Advertisement -

உங்களுடைய ஆடைகளை அகற்றி நீங்கள் குளிக்கும் போது, உங்கள் உடம்பில் இருக்கக்கூடிய எவ்வளவு பெரிய எதிர்மறை ஆற்றலாக இருந்தாலும், அதை இந்த கல்லுப்பு தன்னகத்தே உள்வாங்கிக் கொள்ளும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அன்றாடம் குளிக்கும் போது கண் திருஷ்டியும் கரைந்து போகும். கெட்ட சக்தி உடம்பில் இருந்தால் அதுவும் விலகி விடும் என்பதற்காக சொல்லப்பட்டுள்ள பரிகாரம் இது.

bathroom-shower

ஆனால் வாரத்தில் ஒருநாள் மறக்காமல் பழைய கல் உப்பை எடுத்து தண்ணீரில் கரைத்து விட்டு மீண்டும் புது உப்பை வைக்க வேண்டும். பழைய உப்பை எடுத்துக் கொட்ட மறந்துவிட்டால், எதிர்மறை ஆற்றல் உங்கள் குளியல் அறையிலேயே சுற்றிக்கொண்டு, எதிர்மறை விளைவுகளை உண்டு பண்ணுவதற்கு கூட வாய்ப்பு உள்ளது. கவனமாக இருந்து கொள்ளுங்கள். நம்பிக்கையோடு செய்தால் இந்த சிறிய பரிகாரம் உங்களுடைய வாழ்க்கைக்கு பெரிய பயனுள்ள பரிகாரமாக அமையும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -